தாஸ்தாவெஸ்கி எதிரில் வந்தார்

எஸ். சுரேஷ்

கறிகாய் வாங்கச் சந்தைக்குப் போனபோது அங்கு தாஸ்தாவெஸ்கியை பார்ததேன். நீளமான தாடி. தூங்கி வழியும் கண்கள்.

“நேத்தி ராத்திரியும் சூதாட்டமா?'” என்று கேட்டேன்.

“அதிகம் இல்லை. கொஞ்ச நேரம்தான்”

“கைல பணம் இல்லைன்னு பலபேர் கிட்ட கடன் வாங்கியாவது விளையாடணுமா?”

“விடுங்க ஸார். இதெல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது”

“உங்க மனைவி பாவம் உங்களுக்காக தினமும் பிரார்த்தனை பண்றாங்க. நீங்க என்ன செஞ்சாலும் குத்தம் சொல்றதில்ல. இது போல் ஒரு மனைவி கிடைப்பது கஷ்டம். அவங்களுக்காகவாவது நீங்க திருந்தலாம். வாழ்க்கையை பற்றி எல்லாம் தெரிஞ்ச உங்களுக்கு நான் அட்வைஸ் பண்ணக்கூடாது”

“மனித வாழ்க்கையைப் பேசத் தெரிஞ்ச அளவு என் வாழ்க்கையைப் புரிஞ்சுக்க முடியல. இதுதான் எழுத்தாளனுக்கு கடவுள் கொடுத்த சாபம். ஒண்ணும் செய்ய முடியாது”

இருவரும் மெளனமாக நடந்தோம்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.