நிறங்களின்
கூட்டுக் கலவையில்
துளிர்த்து கடகடவென
நம் அறையில்
உள் நுழைகிறது
இரவு.
நிறப்பிரிகையில்
இழை இழையாய்
பிரிந்து காற்றில் அலைந்து
இலவம் பஞ்சாய் சுழன்று
ஒளிந்திருக்கும் முகங்களை
மூடி மூடித் திறக்கிறது.
ஔிந்திருந்த வண்ணங்கள்
குழையக் குழைய
புதுப்புது குணங்கள் வெளியாகி
உருமாற்றங்கள்
கண்ணெதிரே
உள்ளொளிந்த
பக்கங்களில்
எழுதிக் குவித்தவை
எழுத்துகளாக
மௌனம்
வாசிக்க.