முடக்கம்
சல சலக்கும் கீற்றுகள்
ஒன்று மட்டும் நடுவில்
மடிந்து பூமி நோக்க
அருகிருந்த இலை நிமிர்வுகள்
முணுமுணுத்தும் மரமென்னமோ
மௌனத்தில் தான்.
அதோ முகம்
கழுத்தின் மீது இருக்கிறதா
என்று பார்த்தேன்
அனைவருக்கும் தெரியாது
வான் நோக்கி இருக்கிறதோ
முகம் யாரைக் கேட்க
நீண்டு பின் முதுகுடன்
இணைந்ததை கண்ணாடியும்
காட்டாமல் ஏமாற்றலாம்.