ஞாயிற்றுக்கிழமையன்றுதான் காலை ஐந்து மணிக்கே முழிப்பு வந்து தொலைக்கும் என்று பத்து படுக்கையில் புரண்டான். வலது கை தன்னிச்சையாகத் தலையணைக்கருகே சென்று கைபேசியை எடுத்தது. பிரித்துப் பார்த்தான். உங்கள் பாஸ்வேர்டை யாருக்கும்
சொல்லாதீர்கள் என்று வங்கியில் பணமில்லாதவனுக்கு வரும்
செய்தி, மல்லேஸ்வரம்ஆஸ்திகசமாஜநன்கொடைவேண்டுதல், றுநாள் திங்கட்கிழமை ஷேர் மார்க்கெட்டில் என்னென்ன ஷேர் வாங்கினால் அடிபடாமல் தப்பிக்கலாம் என்னும் ஹேஷ்யம், சிவசுவின்செய்தி, இத்தாலியில் புது வருஷம் கொண்டாடப் போவதென்றால் டூர்செலவில் நாற்பது சதவிகிதம் கழிவு என்று ஜன்பத்துக்குப் போகவேண்டிய, ஆனால் தப்பாக வந்து விட்ட போஸ்டர், சுப்புணி குரூப்பிலிருந்து மஹாலக்ஷ்மிபடம்,…எல்லாம் குபேரன் சம்பந்தப்பட்ட விஷயங்கள்!
பத்துசிவசுவின்செய்தியைப்பிரித்துப்படித்தான். ‘காலை பதினோருமணிக்குவருகிறேன்’ என்றது. பத்துவெறுப்புடன்கண்களை மூடிக்கொண்டான். ஐந்து மாதங்களுக்கு முன்பு பத்து சிவசுவிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கினான். இரண்டு மாதத்தில் திருப்பிக் கொடுத்துவிடுவதாக. ஆனால் மறு மாதம் ஐயாயிரம் கொடுத்ததுதான். அதற்குப்பின் என்னென்னவோ செலவுகள் என்று தள்ளிக்கொண்டே போயிற்று. சிவசுவும் இரண்டு மாதங்களை விட்டுவிட்டு மூன்றாவது மாதம் முடியும் வரைகாத்திருந்தான். அதன் பிறகு பத்துவிடம் பணம்திருப்பிக் கொடுப்பதைப் பற்றி இரண்டு தடவை நினைவுறுத்தினான். ஒவ்வொரு தடவையும் பத்து சிவசுவிடம்அடுத்த மாதம் திருப்பிக்கொடுத்துவிடுவதாகக் கெஞ்ச வேண்டியிருந்தது. ஆனால் போன மாதம் சிவசு வீட்டுக்குவந்துவிட்டான்.
பத்துவுக்கு சிவசு தூரத்து உறவு. தூரம் என்றால் ரொம்ப தூரம் ! மூன்று தலைமுறைகளாக சிவசுவின் குடும்பம் லூதியானாவில் இருந்ததால் மட்டுமில்லை, உறவு மடிப்புகளின் உள்ளே புகுந்து வெகு தூரம் பிரயாணம் செய்த பின்பே கண்டு பிடிக்க முடிந்த சொந்தமாகவும் இருந்தது. ஒரு வருஷம் முன்பு சிவசுவின் பாட்டி ஒரு கல்யாணத் துக்காக பெங்களூர் வந்தாள். அவள் சென்னையில் அவளது அண்ணாவுடன் இருந்தாள். தொல் பொருள் ஆராய்ச்சி நிலையத்தில் வேலை பார்த்தவளைப் போல பத்துவின் குடும்பத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் இடையே உள்ள சொந்தத்தைத் தோண்டிக் கண்டு பிடித்து விட்டாள். பத்து மல்லேஸ்வரத்திலும் சிவசு தேவனஹள்ளியிலும் குடித்தனம் இருந்ததால் (32 கிலோமீட்டர்) கடந்த ஒரு வருஷத்தில் ஒரே ஒரு முறை சிவசுவின் வீட்டில் நடந்த சத்யநாராயணா பூஜைக்குப் பத்துவும்அலமேலுவும்சென்றுவிட்டுவந்தார்கள். அதற்கடுத்தாற்போலசிவசுஇவர்கள்வீட்டுக்குவந்ததுசென்றமாதம்தான்.
அவன் அன்று வந்த போது மாலை ஐந்தரை இருக்கும். அன்றும் ஞாயிற்றுக்கிழமைதான். பணம் கேட்க வீட்டிற்கே வந்து விட்டானே என்று இருந்தது பத்துவுக்கு. வந்தவனை இருவரும் வரவேற்றார்கள்.
“ஏன், தங்கம்மாவையும் அழைச்சுண்டு வந்திருக்கலாமே?” என்றாள் அலமேலு.
“அவளுக்கு சன் டிவியிலே சினிமா பாக்காட்ட தலை வெடிச்சிடும். வரலேன்னுட்டா.”
“என்ன படமாம்?” என்று கேட்டாள் அலமேலு.
“என்னவோ வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்னு சொன்னா” என்றான் சிவசு.
“ஓ, அதைப் பார்த்தா எனக்குத் தலை வெடிச்சிடும்” என்றான் பத்து.
சிவசு பத்துவைப் பார்த்துப் புன்னகை புரிந்தான்.
அவன் வந்த கால்மணியில் அலமேலு காப்பி கலந்து கொண்டு வந்து கொடுத்தாள்.”ஐயையோ ! இதெல்லாம் எதுக்கு?” என்றபடி மறுத்தான். அலமேலு ஒரு டீபாயை அவனுக்கு முன்னால் கொண்டு வந்து போட்டு அதன் மேல் டவரா டம்ளரை வைத்தாள்.
அவன் குடித்து விட்டு “ஆஹா, காப்பி பிரமாதம். ஆத்துலேயே வறுத்துப் பொடி பண்ணிணதா? இந்த மாதிரி ஒரிஜினல் காப்பி குடிச்சு ரொம்ப வருஷமாச்சு” என்றான்.
பத்து “தங்கம்மா காதுக்கு எட்டற மாதிரி சொல்லி வைக்காதே” என்று சிரித்தான்.
அலமேலு சிவசுவிடம் “இல்லே. இங்க கோத்தாஸ்னு காப்பி பவுடர் கடை பெரிசா வச்சிருக்கான். காப்பி ரொம்ப நன்னா இருக்கில்லே?”என்று கேட்டபடி உள்ளே சென்று ஒரு பாக்கெட்டை எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.
“என்னது இது?”
“கோத்தாஸ் அரைக் கிலோ பாக்கெட். எப்பவும் நான் ஸ்டாக் கையிலே வச்சிண்டிருப்பேன். நீ யூஸ் பண்ணிப் பாரேன்.”
சிவசு திகைப்புடன் அவளைப் பார்த்தான்.
பிறகு பத்துவைப் பார்த்து “என் ஃப்ரெண்டு புது வீடு வாங்கி கிரகப்
பிரவேசத்துக்கு வாடான்னான். போன மாசம் மெட்றாஸ் போனேன். அப்ப நாராயண மாமாவாத்திலேதான் தங்கினேன். ரெண்டு மூணு நாள் அங்கே இருந்தப்போ ஒரு நாள் உங்க கல்யாணப் போட்டோ கொஞ்சம் இருந்ததுன்னு மாமா காமிச்சார்” என்றான்.
“ஐயோ ! சகிக்கப் போறாம இருந்திருப்பமே!” என்று சிரித்தாள் அலமேலு.
“ஆமா” என்றான் சிவசு.
“என்னது?” அலமேலு திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.
“நீதன்னடக்கத்துக்குகோயில்கட்டிண்டிருக்கிறவமாதிரிபேசினா, நானும்பொய்சொல்லித்தானேஆகணும்” என்றுசிரித்தான்சிவசு.
அலமேலு வெட்கத்துடன் சிரித்தாள்.
“வாஸ்தவத்திலே நீ போட்டோலே விட நேர்லே அழகாயிருக்கே!” என்றான்சிவசு. பிறகுபத்துவின்பக்கம்திரும்பி”இப்பநான்பொய்சொன்னேன்னுநீநினைச்சாநான்அதைத்தடுக்கப்போறதில்லே” என்றான்.
அலமேலு”உனக்குரொம்பப்பொல்லாத்தனம்” என்றாள்.
பிறகு சிவசுவிடம் “இப்பதானே முதல் தடவை நீ இந்தாத்துக்கு வந்திருக்கே. சுத்திப் பாரேன்” என்றாள் அலமேலு. பத்து எழுந்து சிவசுவைக் கூட்டிக் கொண்டு போனான். ஒவ்வொரு அறையையும் சிவசு விசாலமாகப் பார்த்தான். கதவுகளை பிடித்துப் பார்த்தான். தேக்கா என்று கேட்டான். ஜன்னல் பெயிண்டுகளைத் தடவியும் லேசாக சுரண்டியும் பார்த்தான். மொசைக் தரையில் காலைத் தேய்த்து இழுத்து நடந்தான். மாடியில் இருந்த பாத்ரூமில் தண்ணீர் வேகமாக வருகின்றதா என்று குழாயைத் திருகினான் .பாத்ரூமில் வைத்திருந்த டியோடிரண்ட் பாட்டில்களைத் திறந்து முகர்ந்து பார்த்தான்.
மறுபடியும் ஹாலுக்கு வந்து உட்கார்ந்து கொண்டார்கள். அலமேலு அவனிடம் “வீடு எப்படி இருக்கு?” என்று கேட்டாள்.
“இது சொந்த வீடா?” என்று கேட்டான் சிவசு.
“இன்னும் அதுக்குப் பிராப்தம் வரலையே” என்றாள் அலமேலு.
“எவ்வளவு வாடகை கொடுக்கறேள்?”
பத்து “இது கம்பனிலே கொடுத்திருக்கா. சொந்தமும் இல்லாம வாடகையும் இல்லாம திரிசங்கு சொர்க்கம்” என்றான்.
“அப்படீன்னா நிச்சயம் நீ சீக்கிரம் ஒரு வீடு வாங்கப் பாரு” என்றான் சிவசு. “எங்கப்பா ரயில்வேலே இருந்தார்னு உனக்குத் தெரியுமே. கார்டா இருந்தார். மாத்தல் ஆகிப் போற இடமெல்லாம் ரயில்வேக்காரன் குவார்ட்டர்ஸ் கொடுத்தான். ‘இவ்வளவு பெரிய வீடு கொடுக்கறான். நீ எதுக்கு சொந்த வீடுன்னு அலையணும்?’னு எங்க தாத்தா, அப்பாவுக்கு அப்பா, அவரைக் கரைச்சு வீடே வாங்க விடலை. ஐம்பத்தெட்டு வயசுக்கு ரிட்டையர் ஆயாச்சு, ஆத்துக்குப் போன்னு சொன்னப்பதான் வீட்டுக்கு அலைஞ்சு திரியற கஷ்டமே அப்பாவுக்குத் தெரிஞ்சது. கடனோ உடனோ வாங்கி ஒரு வீடு வாங்கப் பாரு” என்றான் சிவசு.
“பணம் இல்லாம எப்பிடி ? வெறுங் கைலே முழம் போடற மாதிரி?” என்றாள் அலமேலு.
“கையிலே கேஷ் வச்சிண்டுதான் வீடு கட்டணும்னா மேனகை விச்வா
மித்ரரைக் கல்யாணம் பண்ணிக்கிறப்பதான்” என்று சிவசு பத்துவைப் பார்த்தான். “பேங்குலே பதினஞ்சு பர்சன்ட் மார்ஜின் மணி கேப்பான். பி.எஃ ப் இருக்கில்லே? ஒரு லோனைப் போடு. எல்லைசி பாலிசி இருக்கா?அலமேலு நகைல்லாம் இருக்கும். அதெல்லாம் செக்யூரிட்டின்னு காமி. இன்னும் இருபது இருபத்தி அஞ்சு வருஷ சர்வீஸ் இருக்கில்லே உனக்கு? ஏன் கொடுக்கமாட்டான் பேங்க் லோன்?” என்றான் சிவசு.
அலமேலு அவனைப் பிரமிப்புடன் பார்ப்பதைப் பார்த்தான் பத்து.
“கேரண்ட்டார் கேப்பான். நான் கையெழுத்து போடறேன் போ” என்றான் சிவசு.
விட்டால்கழுத்தைப்பிடித்துத்தள்ளிபேங்க்வாசலில்கொண்டுபோய்நிறுத்திவிடுவான்போலிருந்தது. கூடவே’நம்நல்லதுக்குத்தானேசொல்கிறான்’ என்கிறநன்றிஉணர்ச்சியும்பத்துவுக்குள்எழுந்தது.
“எனக்கு எப்பவுமே என்ன பயம்னா கடனை வாங்கிட்டு எப்பிடி திரும்பக் கட்டறதுன்னுதான். ஒரு ஆள் சம்பளத்தில் எப்படிச் சமாளிக்க முடியும்?” என்றான் பத்து.
“வீடு கட்டி முடிக்கிற வரைக்கும் கடன் கொடுப்பான். அது வரைக்கும் நீ பணம் திரும்பக் கட்ட ஆரமிக்க வேண்டாமே. கட்டின வீட்டை
வாடகைக்கு விட்டா அது முக்காவாசி இன்ஸ்டால்மென்டைக் கவர் பண்ணிடும்” என்றான் சிவசு. “இல்லேன்னா கட்டின வீடா பாத்து வாங்கிடு . உடனே வாடகைக்கு விட்டுறலாம்.”
“ரெடி ரெக்கனர் மாதிரின்னா எல்லாத்துக்கும் ஆன்சர் வச்சிருக்கே !” என்றாள் அலமேலு.
” நீ அடுத்த வருஷம் இந்த நாளைக்கு சொந்த வீடு வாங்கிடனும்” என்று சிவசு சிரித்தான். பிறகு சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்து விட்டு “ஓ, ஏழரை ஆயிடுத்தா? நான் கிளம்பறேன். ரெண்டு பஸ் பிடிச்சு ஆத்துக்குப் போய் சேர்ரப்போ அந்த புல்லு மண்ணு படமெல்லாம் பாத்துட்டு தங்கம்மா ஏதானும் சாப்பிடப் பண்ணி வச்சிருப்பா” என்று எழுந்தான்.
“நன்னாயிருக்கு. இவ்வளவு தூரம் வந்துட்டு சாப்பிடற வேளையிலே கிளம்பிப் போறதாவது. இன்னிக்கி அடைக்கு அரைச்சு வச்சிருக்கேன். நாலு வாத்துப் போடறேன்.முதல் தடவை வந்ததுக்குப் பாயசம் வச்சு சாப்பாடு போடணும். அடுத்த தடவை தங்கம்மாவோட வரச்சே ஜமாய்ச்சுறலாம்” என்றாள் அலமேலு.
அவள் குரலில் இருந்த கண்டிப்பும், அன்பும் சிவசுவை எழ விடாமல் அடித்தன. அடை சாப்பிடும் போது சிவசு “எனக்கு சின்ன வயசிலிருந்தே அடைன்னா ரொம்ப இஷ்டம். எங்கம்மா எங்களுக்கெல்லாம் எது சாப்பிடக் கொடுத்தாலும் ஒரு திட்டம் வச்சிருப்பா. மூணு வயசுக்கு மேலதான் குழந்தைக்கு அடை. அதுவும் அரை அடைதான் ! அஞ்சு வயசாகறப்போ ஒரு அடை. அடுத்த பிரமோஷன் ஹைஸ்கூல்ல சேர்ரப்போ. ஒண்ணரை நான் ரெண்டு அடை சாப்பிடறப்போ ஒம்பதாங் க்ளாஸ் படிச்சிண்டிருந்தேன். அப்போ எங்கம்மாட்ட சொல்லுவேன், நான் பெரியவனானதும் குறைஞ்சது பத்து அடையாவது சாப்பிடு
வேன்னு. அப்பிடி சாப்பிட்டேன்னா ரயில்வே லைன் தாண்டி இருக்கற வயக்காட்டுலே போயி பீச்சி அடிச்சிண்டிருக்க வேண்டியதுதான்னு சிரிப்பா” என்றான்.
அலமேலுவால்சிரிப்பைஅடக்கமுடியவில்லை.
“இப்ப எவ்வளவு அடை வெளுத்துக் கட்டறே?” என்று பத்து சிரித்தான்.
“ரெண்டுதான் !” என்றான் சிவசு.
சாப்பிட்டுவிட்டுசிவசுகிளம்பிச்சென்றான்.அவன்போனதற்குப் பிறகுகணவனும்மனைவியும்அவனைப்பற்றி, அவன்மனைவி, அம்மாபற்றி, வீடுவாங்குவதுபற்றிஎல்லாம்பேசினார்கள்.
“உன் உபசாரத்திலே அவன் மயங்கிட்டான்” என்றான் பத்து.
அலமேலு “அவன்தான் பேசிப் பேசி நம்மளை மயக்கிட்டான்” என்று சிரித்தாள். “ரொம்பக் கெட்டிக்காரனாயிருக்கான் இல்லே?”
பத்து பதிலளிக்காமல் அவளை பார்த்தான்.
சிவசு பணம் பற்றிப் பேசாமல் சென்றது பத்துவிற்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அலமேலுவின் பேச்சும் உபசரிப்பும் அவனைப் பணம் பற்றிப் பேசாமல் தடுத்திருக்க வேண்டும் என்று பத்து நினைத்தான்.
பத்து கடைசியில் எட்டுமணிக்குத்தான் படுக்கையிலிருந்து எழுந்தான்.
பல் தேய்த்துக் காப்பி குடித்து விட்டு பேப்பரை மேய்ந்தபின் பாத்ரூமுக்குச் சென்றான். அவன் குளியலை முடித்து விட்டு, பூஜை அறைக்குள் சென்று சாமியைக் கும்பிட்டு விட்டு ஹாலுக்கு வந்தான். அலமேலு டைனிங் டேபிளில் காலை உணவை வைத்துக் கொண்டிருந்தாள். பூரி. இருவரும் எதிரெதிரே உட்கார்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்கள்.
“பூரி சூப்பரா இருக்கு” என்றான் பத்து. அலமேலு சிரித்தபடி அவனைப் பார்த்தாள். “ஆலுவுக்குப் பதிலா சோளே போட்டு பண்ணிட்டியே. ரொம்ப டேஸ்டியா இருக்கு” என்றான்.
“இன்னும் ரெண்டு பூரி போட்டுக்கோங்கோ” என்று எடுத்துப் போட்டாள்.
“போறும், போறும். பத்து மணிக்கு ஆபீசுக்குப் போகணும்” என்றான்.
“ஆபீஸா? இன்னிக்கி எங்கையும் போகப் போறதில்லே. நன்னா ரெஸ்ட் எடுக்கணும்னு நேத்தி ராத்திரி சொன்னேளே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் அலமேலு.
“செவ்வாக்கிழமை போர்டு மீட்டிங்காம். இன்னிக்கி பத்து பத்தரைக்கு வந்துடு. கொஞ்சம் ஸ்டேட்மெண்ட்ஸ், ரிப்போர்ட்ஸ்லாம் பண்ணனும்னு டைரக்டர் மெஸேஜ் அனுப்பிச்சிருக்கான்” என்றான் சிவசு குரலில் அலுப்புடன்.
“அட ராமா ! இப்பதான் பாதி சமையலை நான் முடிச்சேன்” என்றாள் அலமேலு.
“ம், சொல்ல மறந்துட்டேனே. இன்னிக்கி சிவசு வரேன்னுருக்கான். பதினோரு மணி வாக்கிலே” என்ற பத்து சற்று யோசித்து விட்டு “அவன் வந்தா நான் அவசர வேலையா ஆபீஸுக்குப் போக வேண்டியதாயிடுத்துன்னு சொல்றியா? உன் சமையலும் வேஸ்டாப் போக வேண்டாம். அவனை இங்கேயே சாப்பிடச் சொல்லிடேன்”
என்றான் பத்து.
“எத்தனைமணிக்குத்திரும்பிவருவேள்?”
“சொல்ல முடியாது. ராத்திரி வரைக்கும் இழுத்தடிக்காம விட்டான்னா சரி” என்றான் பத்து.
பத்துமணிக்குஅவன்வீட்டைவீட்டுக்கிளம்பினான். ஆபீசைஅடையும்போதுபத்தரைமணிஆகியிருந்தது. வாசலில்நின்றவாச்சுமேன்அவனைப்பார்த்துசல்யூட்அடித்தான்.
“இதுவரைக்கும் உங்க டிபார்ட்மெண்டு ஆளுங்க யாரும் வரலே சார்” என்றான்.
பத்து அவனுக்கு எதுவும் பதில் அளிக்காமல் தலையை அசைத்து விட்டு லிஃப்டை நோக்கிச் சென்றான்.அவனைச் சுற்றி மௌனம் இரைச்ச
லிட்டது.
அவன் ஏழாவது மாடியில் இருக்கும் தன் அறைக்குச் சென்றான். ஏ ஸி யைப் போட்டு விட்டு மேஜை மீதிருந்த கம்ப்யூட்டரைத் தட்டினான்.இந்த வருஷத்தில் மீதமிருக்கும் மூன்று மாதத்தில் எவ்வளவு இன்கம்டாக்ஸ் பிடித்தம் இருக்கும் என்று பார்த்தான்.நிறைய இருந்தது. ஒவ்வொரு முறையும் இப்படித்தான் ஆகிவிடுகிறது. ஏப்ரல் முதல் நவம்பர் டிசம்பர் வரை கொஞ்சமாகப் பிடித்து சற்று அதிகமாகக் கைக்கு வரும் பணத்தின் ஆனந்தம் எல்லாவற்றையும் சூறைக் காற்றைப் போல் அடித்துத் தள்ளி விடும் கடைசி மூன்று மாதங்களை நினைத்தால் அவனுக்கு வெறுப்பாக இருந்தது. மேஜையில் இருந்த கோப்புகளைப் படித்துப் பார்த்து விட்டுக் கையெழுத்திட்டான்.
ஒருமணிநேரம்போயிருக்கும். இண்டர்காமில்பெல்அடித்தது. அட, அவனைப்போல்வேறுயாரோஅலுவலகத்துக்குவந்திருக்கிறார்களா? ஆச்சரியத்துடன்போனைஎடுத்தான்.
“ஹலோ பாஸ் !” என்று மறுமுனையில் இருந்து தேவுவின் குரல் கேட்டது. கம்பனி செகரட்டரி. இவனுக்கு என்ன ஞாயிற்றுக் கிழமை ஆபீஸ் வேலை?
“ஹலோ தேவு !” .
“இப்பதான் வந்தேன். வாச்சுமேன் சொன்னான், நீ வந்திருக்கிறதா. ஃப்ரீயா? அங்க வரட்டா?”
“வா, வா” என்றான் பத்து.
அடுத்த நாலு கட்டிடங்களில் இருப்பவர்களின் நாசிகளைத் தீண்டும் அளவுக்குப் பெர்ஃப்யூம் வாசனையுடன் தேவு உள்ளே வந்தான்.
“அக்கவுண்ட்ஸ் எல்லாம் முடிஞ்சு போன வாரம் போர்டு மீட்டிங் ஏஜிஎம் எல்லாம் ஆயாச்சே. எதுக்கு இன்னிக்கி இங்கே டேரா போட்டிருக்கே?” என்று சிரித்தான் தேவு.
“கொஞ்சம் பெர்சனல் ஒர்க், கொஞ்சம் ஃபைல் கிளியரன்ஸ்னு வந்தேன். ஆனா உனக்கு என்ன இங்க வேலை?” என்றான் பத்து.
“போன வாரம் போர்டு மீட்டிங் ஆச்சில்லே. அடுத்த போர்டு மீட்டிங்குக்கு இன்னும் தாராளமா மூணு மாசம் இருக்கு. ஆனா இந்த யூனியன் கேட்ட பே ரிவிஷனை போர்டு அப்ரூவ் பண்ணிதை அர்ஜன்ட்டா மினிட்ஸ் போட்டுக் கொடுக்கணுமாம். அதான் இன்னிக்கி அதை முடிச்சிடலாம்னு வந்தேன்” என்றான்.
அப்போது வாச்சுமேன் கதவைத் திறந்து கொண்டு வந்து இருவருக்கும் காப்பி கொடுத்தான்.
“நான்தான் சந்திரிகாலேந்து வாங்கிட்டு வரச் சொன்னேன்” என்றான் தேவு.
காப்பியை அருந்திக் கொண்டே இருவரும் ஆபீஸ் பாலிடிக்ஸில் கொஞ்ச நேரம் ஆழ்ந்தார்கள்.
“சரி, நான் என் வேலையை பாக்கப் போறேன்” என்று தேவு எழுந்தான். கதவருகில் சென்றவன் “லஞ்ச் எங்கே? வீட்டுக்குப் போறியா?” என்று கேட்டான்.
“நீஎன்னபண்ணறதாஇருக்கே?” என்றுகேட்டான்பத்து.
” நீ வீட்டுக்குப் போகலேன்னா நாம ரெண்டு பேரும் வெளியே போய் சாப்பிடலாம்.”
பத்து சரியென்று தலையை அசைத்தான்.
“இன்னிக்கிக் கம்பனி செலவிலேதான் சாப்பாடு. வின்சர் மேனர் போகலாம்” என்று சிரித்துக் கொண்டே தேவு வெளியே சென்றான்.
அவர்கள் இரண்டு மணி சுமாருக்கு ஹோட்டலை அடைந்தார்கள். விடுமுறை தினமென்rறாலும் கூட்டம் இல்லை. தொற்று நோய் தொற்றி விடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வு காரணமாக இருக்கலாம். ஆர்டரை வாங்கிக் கொண்டு போக அரைமணி ஆகியது. கேட்டவற்றைக் கொண்டு வர இன்னொரு அரைமணி ஆயிற்று. நேரம் பொன்னானது என்னும் வாசகத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டாம் என்று நிர்வாகம் நினைத்து விட்டது போலிருக்கிறது. அவர்கள் சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது மணி நாலு. இருவரும் வீட்டுக்குப் போக ஓலாவுக்குப் போன் செய்தார்கள்.
அவனை நாலரை மணிக்கு வீட்டில் பார்த்து அலமேலு ஆச்சரியம் அடைந்தாள். “அட, சீக்கிரம் ரிலீஸ் பண்ணிட்டாளே” என்று கண்களை அகல விரித்து அவனிடம் சொன்னாள்.
“ஏதோ ஜெயில்லேர்ந்து வரவன்கிட்டே பேசற மாதிரின்னா இருக்கு” என்றான் பத்து.
“நானும் இப்பதான் ஆத்துக்குள்ளே நுழைஞ்சேன்.”
“எங்கே போயிருந்தே? சிவசு வரலியா?”
“சிவசுவோடதான் வெளியிலே போயிட்டு அந்தப் பக்கம் சிவசு போக நான் இந்தப்பக்கம் வந்தேன்” என்றாள் அலமேலு.
அவன் பதில் எதுவும் அளிக்காது அவளைப் பார்த்தான்.
“சிவசு வந்ததும் நீங்க இல்லைன்னு சொன்னேன். ‘அப்ப நீ எதுக்காக அடுப்பைக் கட்டிண்டிண்டு அழறே? ஒரு சேஞ்சுக்கு வெளியிலே போய் சாப்பிடலாம். நீ வின்சர் மேனருக்குப் போயிருக்கியா? இல்லாட்டா வெஸ்ட் என்ட் போகலாம்’னான். நான்தான் ‘சும்மா கிட , காசுக்குப் பிடிச்ச கேடு. இன்னிக்கி பீன்ஸ் பருப்பு உசிலியும் வெத்தக் குழம்பும் பண்ணிருக்கேன்னேன். சாப்பிட்டு விட்டு ரொம்ப சந்தோஷம் அவனுக்கு. நன்னா இருக்கு, வாசனையா இருக்குன்னு மாஞ்சு போயிட்டான். அதுக்கப்புறம் நாட்டு மருந்து சாமான்லாம் கொஞ்சம் வாங்கணும்னான். சரின்னு கிளம்பி எய்ட்த் கிராஸ் இந்தியன் டிரக் ஸ்டோருக்குக் கூட்டிண்டு போனேன். சுண்டக்கா வத்தல், மணத்தக்காளி வத்தல்ன்னு ஆரமிச்சு பனங்கருப்பட்டி, மிளகு, பெருஞ்சீரகம் சித்தரத்தை தூள், திப்பிலி, அதிமதுரத் துண்டு, சுக்குன்னு எல்லாத்தையும் வாங்கிப் போட்டுண்டான். நான் இருக்கற இடத்திலே இந்த மாதிரி சாமான் ஒண்ணும் கிடைக்கிறதில்லேன்னான்.”
“சிவசுவோட அசிஸ்டன்ட்டா ஆயிட்டேன்னு சொல்லு” என்றான் பத்து.
அவள் அவனைப் பாத்து “ஒரு சிநேகிதம் சொந்தம்னா இதெல்லாம் கூடப் பண்ண மாட்டமா?” என்றாள் அலமேலு சற்றுத் தாங்கலான குரலில்.
அவளைச் சமாதானப்படுத்துவது போல “என்கிட்டே இதெல்லாம் வாங்கணும்டான்னு சொல்லிருந்தான்னா முழிச்சிருப்பேன். நீதான் வெட்டிண்டு வான்னா கட்டிண்டு வரவளாச்சே” என்றான் பத்து.
“அப்புறம்’உன்னைஇத்தனைசிரமப்படுத்தியாச்சு. வா, உனக்குஒருஐஸ்க்ரீம்வாங்கித்தரேன்’னான். பதினாறாம் கிராஸ்லேஇருக்கற
நேச்சுரல்ஸ் போனோம். பக்கத்திலேயிருக்கற காலேஜ்லேந்து பாய்ஸும் கேர்ள்ஸுமா பசங்க கூட்டம் நெரிஞ்சுண்டு நின்னது. ஒருத்தர் மேலே ஒருத்தர் இடிச்சிண்டு போய் வாங்கறதுக்குள்ளே உன்னைப் பாரு என்னைப் பாருன்னு ஆயிடுத்து” என்று சிரித்தாள் அலமேலு.
“நீ எதுக்கு இடிச்சிண்டு போய் நிக்கணும்? கடை வாசல்லே நீ நின்னா அவன் போய் வாங்கிண்டு வரான்” என்றான் பத்து.
“எனக்கும் அங்கே உள்ளே என்னென்ன வெரைட்டி வச்சிருக்கான்னு பாக்க ஆசை. டென்டெர் கோகனட் ஐஸ்க்ரீம்னு ஒண்ணு போட்டு விக்கறான் பாருங்கோ. அதுக்கு அப்படி ஒரு டிமாண்ட். ஆளுக்கு ரெண்டு வாங்கிண்டு வந்து சாப்பிட்டோம். என்னமா இளநி வாசனை வரதுங்கறேள் ! நீங்க இல்லையேன்னு நான் கூடச் சொன்னேன். சரி அடுத்த வாரம் பத்துவையும் கூட்டிண்டு இங்க வரலாம்னான் சிவசு.”
“அடுத்த வாரமா?” என்றான் பத்து.
“ஆமா. அடுத்த ஞாயித்துக் கிழமை நீங்க எதாவது வெளி வேலை வச்சுக்க வேண்டாம்” என்ற அலமேலு “சரி, நான் காப்பி போட்டுண்டு வரேன்” என்று சமையலறையை நோக்கி நடந்தாள்.
அடுத்த வாரம் நாள்கள் சில சமயம் பறந்தும் சில சமயம் நகர்ந்தும்
சென்றன. சனிக்கிழமை பத்து ஆபிசிலிருந்து சிவசுக்குப் போன் செய்தான்.
“ஹலோ சிவசு, எப்படியிருக்கே? லாஸ்ட் சண்டே உன்னை மிஸ் பண்ணிட்டேன். ஸாரி. பிடுங்கல் ஆபீஸா ஆயிடுத்து. இப்பகூடப் பாரு நாளைக்கு ஞாயத்துக் கிழமை ஏர்போர்ட்டுக்குப் போயி எங்க டைரக்டரை அழைச்சுண்டு ஆபீசுக்குக் கூட்டிண்டு வரணும். ஆமா. அவர் கல்கத்தாலேர்ந்து வரார். ஃபிளைட் பனிரெண்டரைக்கு வரது. உன் வீடு ஏர்போர்ட் கிட்டதானே? நான் ஏர்போர்ட் போறதுக்கு முன்னாலே உன்னை வந்து பாத்துட்டுப் போறேன். உன் கிட்ட வாங்கின பணத்தில்
ஐயாயிரம்பாக்கிஇருக்கில்லியா? ரொம்பத் தள்ளிப்போயிடுத்து. நாளைக்குவரச்சேபணத்தையும் எடுத்துண்டுவரேன். நீயும்சரியான
நேரத்திலே ஹெல்ப் பண்ணினே. ரொம்ப தேங்க்ஸ். நாளைக்குப் பாக்கலாமா? வச்சிடறேன்” என்று சொல்லி விட்டுப் போனைக் கீழே வைத்தான்.
அப்போது அறைக் கதவைத் திறந்து கொண்டு பியூன் உள்ளே வந்தான்.
“சார், டைரக்டரு உங்களை பே ரிவிஷன் பைலை எடுத்துக்கிட்டு வரச் சொல்றாரு” என்றான்.