
“இன்று எழுதப்படுவது இலக்கியம் அல்ல, பொழுதுபோக்கு மட்டும்தான் இருக்கிறது”” – மரியோ வர்காஸ் லோசா நேர்முகம் – டிம் மார்டின்

பதாகை – “உங்கள் கவிதைகள் எதை உண்மையாகக் கொள்கின்றன, அவை எத்தகைய உண்மைகளை வெளிப்படுத்த முனைகின்றன?”
றியாஸ் குரானா – இப்படி ஒரு கேள்வியைக் கேட்பதற்கு எது உங்களைத் தூண்டியது என்பதை நான் அறிவேன். நீங்கள் மட்டுமல்ல தமிழ் சூழலில் இலக்கியப் பரிச்சயம் இருக்கின்ற அனைவரும் இப்படி அல்லது இதற்கு நெருக்கமான சொற்களால் இந்தக் கேள்வியை கேட்பவர்களாகவே இருப்பர். அந்தக் கேள்விகள் இப்படி இருக்கலாம். எத்தகைய யதார்த்தத்தை வெளிப்படுத்த முனைகின்றன என்றோ எத்தகைய சூழலை பிரதிபலிக்க முனைகின்றன என்றோ இருக்கலாம். அல்லது இப்படி இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்தக் கேள்வி நமது இலக்கிய பெருவெளியின் நெடுங்கால மனச்செயலாக இருக்கின்ற ஒன்றாகும். இலக்கியத்தின் பயன், இலக்கியத்தின் பணி, இலக்கியம் இயங்குவதற்கான ஒரு பொதுத் தடம் போன்றவற்றை விசாரணைக்குட்படுத்தும்போது கண்டடையப்பட்ட ஒன்றாகும். வாழ்தல் வாழ்விலிருந்து பெறுதல் என்ற ஒரு வறண்ட புரிதலில் இருந்து உருவான ஒன்றாகும். அது மாத்திரமல்ல, அந்தப் புரிதலினால்தான் இன்னும் இது காப்பாற்றப்பட்டு புழக்கத்திலிலும் இருக்கிறது. (more…)
பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்துகொண்டு
ஹிந்து நாளிதழை படித்துக் கொண்டிருக்கிறார்
பக்கவாட்டு ஜன்னல் வழியே வெளிச்சம்
ஆபிச்சுவரி பக்கத்தில் உள்ள புகைப்படங்களை
ஒளிரச்செய்கிறதோ என்னவோ, ஆனால்-
அப்பாவின் மனதை அவர் போட்டிருக்கும்
தடிமனான கண்ணாடி மறைக்கிறது
காலை எழுந்ததும் ஏன் மரணத்தை எதிர்கொள்கிறார்?
ஒவ்வொருவராக மறைந்து கொண்டிருக்கும் நண்பர்களுக்காகவா?
தான் இன்னும் மறையவில்லை என்பதை மறக்காமல் இருக்கவா?
ஒளி ஒழுகும் இருட்டுச் சமையலறையிலிருந்து
அம்மா காபி டம்ப்ளருடன் அப்பாவை நோக்கி வருகிறாள்.
காபி சுவை நாவினில் இறங்க, மரண பயம் மெல்ல விலக,
நாற்காலியை விட்டு மெதுவாக எழுந்து நிற்கிறார்
க்ளிக் க்ளிக்
ஒளிப்பட உதவி – artofday.com