ஓவியம்

பாரதி என்னும் பற்றுக்கோடு

– கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியம்: யாத்ரீகன்

yathrigan-agni

 

‘அக்னி அண்ட் அதர் போயம்ஸ் அண்ட் ட்ரான்ஸ்லேஷன்ஸ்….”

கரகரகொரகொரவென அவ்வப்போது அலையடித்து கலைத்துக் கொண்டிருந்த தொலைபேசிக் குரலில் பத்மநாபன் சொல்லிக் கொண்டே இருந்தான்.

‘என்னடா’ என்று நான் சற்று உரக்கவே கேட்டு மூன்று நொடிகள் தாமதத்தில் அவன் காதுக்கு போய் சேர்ந்ததிருக்க வேண்டும்.

மீண்டும் ‘அக்னி அண்ட் அதர் போயம்ஸ் அண்ட் ட்ரான்ஸ்லேஷன்ஸ் அண்ட் எஸ்ஸேஸ் அண்ட் அதர் ப்ரோஸ் ஃப்ராக்மெண்ட்ஸ்… இந்த பொத்தவம்தாம்டே. பாரதி பிரசுராலயம் வெளியீடு. மொத பதிப்பு ஆயிரத்தி தொள்ளாயிரத்து நுப்பத்திரெண்டுல வந்திருக்கு. அங்கன ஏதாச்சும் லைப்ரரில இருக்கான்னு பாருடே. நம்ம பாரதிப் புலவர் அய்யாவோட காப்பிய எவனொ கோண்டுட்டு போயிட்டான்னு ரொம்ப நாளா சொல்லிட்டிருந்தாவ. அங்கதான் அல்லா பளய பொத்தவத்தையும் மைக்ரோ பிலிமில் போட்டு வச்சிருக்கானுவளாமே. அய்யாவுக்கு ஒண்ணு வாங்கிட்டு வாடே’

மேலே சொன்னது முழுவதுமாக எனக்கு போனில் கேட்க முடியாமல் பத்மநாபனின் குரல் துண்டு துண்டாக வெட்டித்தான் கேட்டது. தொலைபேசி இணைப்பக பிரச்னையால் காணாமல் போனவற்றை நானாக இட்டு நிரப்பி புரிந்துகொள்வதற்குள் என் காலிங் கார்டின் இருப்பு தீர்ந்து போய்விட்டதாக அறிவிப்பு வந்து அழைப்பு நின்று போனது.

ஏற்கெனவே திகைப்பும் வியப்புமாக ஒரு பிரமிப்பு நிலையில் இருந்த எனக்கு இப்போது சற்று எரிச்சலும் சேர்ந்து கொண்டது. (more…)

மோசமான ரசனையின் பிறப்பு – பாரி ஷ்வாப்ஸ்கி

The Nation என்ற தளத்தில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரையின் சற்றே தளர்ந்த தமிழாக்க வடிவம் 

Henri Matisse குறித்து ஒரு சம்பவம் சொல்லப்படுவதுண்டு. மாட்டிஸ் வரைந்த உருச்சித்திரங்கள் (portraits) ஒன்றில் உள்ள ஒரு பெண்ணின் கை மிக நீளமாக இருக்கிறது என்று அவரைச் சந்தித்தவர் ஒருவர் குறை கூறினாராம். “மேடம், நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்,” என்று பதில் சொல்லியிருக்கிறார் மாட்டிஸ். “இது பெண்ணல்ல, ஓவியம்”. மாட்டிஸ் இப்படிச் சொன்னதற்கு அவள் இது போன்ற ஒரு பதில் சொல்லியிருக்கலாம், “இது வாதமல்ல, பிடிவாதம்”. ஓவியரின் இந்தக் கேலிப் பேச்சைக் குறித்து ஈ.ஹெச். கோம்ப்ரிச் (E.H. Gombrich) இவ்வாறு எழுதுகிறார்: “நெடுங்காலமாக இவர்களைச் சகித்துக் கொண்டிருக்கும் பொதுமக்களோடு நவீன ஓவியர்களும் விமரிசகர்களும் விளையாடிப் பார்க்கும் முரணுரைகளில் (paradox) இதுவும் ஒன்று” (கோம்ப்ரிச்சின் மிகச் சிறந்த ஆய்வு நூலான ஆர்ட் அண்ட் இல்யூஷனில்தான் மேற்கண்ட சம்பவம் பற்றிய குறிப்பு இருக்கிறது).

இது போன்ற முரணுரைகளைத் தவிர்ப்பது மிகக் கடினம். ஓவியங்களைக் கொண்டு உருச்சமைத்தல் (pictorial illusionism), அதாவது, “நம்பும்படி காட்சியளிக்கத் தவறிய பிம்பங்கள் குறித்து மேற்கத்திய நாகரிகம் குறிப்பிட்ட சில காலகட்டங்களில் அடைந்த அதிருப்தியின் தூண்டுதலால்” உண்மை போல் தோற்றமளிக்கும் ஓவியங்களின் ஐரோப்பிய ஆதர்ச தொகுப்பு ஒன்று (European canon of realistic representation) உருவானது என்று கோம்ப்ரிச் கருதினார். அவரது கூற்றே முரணுரைத்தன்மை கொண்டதாக இருக்கிறது. காரணம், ஒரு பிம்பத்தை நம்ப விழைந்தவர்கள் எவர் என்ற கேள்வியை இது தவிர்க்கிறது. மாட்டிஸ் வருவதற்கு வெகு காலம் முன்னரே, மானரிஸ்ட்டுகள் (Mannerists) என்று அறியப்பட்ட பதினாறாம் நூற்றாண்டு இத்தாலிய ஓவியர்கள் தங்கள் ஓவியங்களிலுள்ள உருவங்களைப் பிறழச் செய்து பிழை பரிமாணங்களில் வரையத் தயாராய் இருந்தனர். அவர்கள் இப்படிச் செய்தது, நம்பத்தகுந்த பிம்பங்களைத் தோற்றுவிப்பதற்கல்ல, மாறாய், நம்பத்தகுந்த ஓவியங்களைப் படைக்கும் நோக்கத்தில் இதைச் செய்தனர். (more…)

இருளைப் பார்த்தல் – கோயாவின் ஓவியங்கள்

உடல்நலம் குன்றியபின், மனநிலை பாதிக்கப்படும்வரை கோயா பேனிஷ் அரசவையில் ஒரு சாதாரண ஓவியராகதான் இருந்தார். ஆனால், அவரது அல்டாமிரா குடும்ப உருச்சித்திரங்களில் கோயாவை பின்னர் சூழ்ந்த இருளின் நிழல்கள் சாயத் துவங்கிவிட்டனவா என்ற கேள்வியை எழுப்புகிறார் மார்கன் மீஸ், ஸ்மார்ட் செட் என்ற பத்திரிக்கையில்.

அக்கட்டுரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் தமிழாக்கம்:

1780களிலேயே தான் பின்னர் அளிக்கப்போகும் படைப்புகளைப் பற்றி கோயா கனவு காணத் துவங்கிவிட்டாரா? மிகவும் வழக்கமான முறையில் வரையப்பட்டிருக்கும் இந்த உருச்சித்திரங்களில் பிற்காலத்திய கோயாவின் சாயல்கள் உள்ளனவா? 18ஆம் நூற்றாண்டின் பிற்காலத்துக்குரிய ஸ்பெயினின் அரசவைச் சூழலில் வலம் வந்த இளம் கோயா, முன்னேறத் துடிக்கும் இந்த ஓவியர், அப்போதே வினோத காட்சிகளைக் காணத் துவங்கிவிட்டாரா? (more…)

மானுடர்க்கு அழகால் மேன்மையுண்டா? : வடிவும் உணர்ச்சியும் – இரு உந்துவிசைகள்

புனைவுலகைப் பேசும் தளத்தில் இக்கட்டுரையில் உள்ள சிந்தனைகளுக்கு நேரடி பொருத்தம் உண்டா என்ற கேள்வி எழலாம். படைப்பில் உணர்ச்சிக்குச் சமமான இடம் வடிவத்துக்கும் உண்டு, கற்பனைக்கு உள்ள முக்கியத்துவம் யதார்த்த உண்மைக்கும் உண்டு, மன நிறைவும் நீதியுணர்வும் வெவ்வேறல்ல. அழகுணர்வில் இவையனைத்தும் சீர்மையடைகின்றன என்கிறார் ஷில்லர். இவ்விரு விசைகளும் பிளவுபட்ட நிலையின் சீரழிவை விவரித்து, அழகணுபவத்தில் சாத்தியமாகக்கூடிய மேன்மையை முன்னிறுத்துகிறதுஜான் ஆர்ம்ஸ்ட்ராங் எழுதிய இக்கட்டுரை. இதன் முற்பகுதிச் சுருக்கமும் பிற்பகுதியின் சற்றே சுதந்திரம் எடுத்துக் கொண்டு செய்யப்பட்ட தமிழாக்கமும் இனி.
 
முற்பகுதிச் சுருக்கம்: சிந்தனையாளர் ஷில்லர் மனித மனதை இரு பெரும் உந்துவிசைகள் பொருதும் களமாகக் கண்டார். உணர்ச்சி விசை நிகழ் கணத்துக்கு உரியது, உடனடி சுக நாட்டம் கொண்டது. வடிவ விசை காலக்கணக்கில் வடிவ நாட்டம் கொண்டது, அருவச் சிந்தனையும் தர்க்க ஒழுங்கும் தேடுவது. அது தன் அனுபவ புரிதல்களை விட்டுச் செல்லவும் பொது கொள்கைகளை நிறுவவும் முனைகிறது. நீதியுணர்வின் பிறப்பிடம் அது. இவ்விரண்டு உந்துசக்திகளும் சமநிலையடைதலே மனித வாழ்வுக்கு அமைதியை அளிக்கிறது. அழகுணர்ச்சி இவ்விசைகளை, நம்மைப் புரிந்துகொள்ள ஒரு வழியாகிறது. 

(more…)