பட்டியல்

சிறந்த இருபது மலையாள நாவல்கள்- II 11-20

தனுஷ் கோபிநாத், ஷிம்மி தாமஸ்

Enipadikal (Ladder steps) – Thakazhi

கேசவப்பிள்ளையையும் திருவாங்கூர் செயலகத்தில் அவரது வளர்ச்சியையும் விவரிக்கும் கதை. அப்போது திருவாங்கூர் சமஸ்தானமாக இருந்த காலத்தில் நிகழும் கதை. கேசவப்பிள்ளை ஒரு குமாஸ்தாவாக வேலையில் சேர்கிறான், அதன்பின் அதன் படிநிலைகளில் மெல்ல மெல்ல ஏறி முதன்மைக் காரியதரசியாக உயர்கிறான். வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்களோடு தனக்கு ஏற்படும் தொடர்புகளைச் சரியாக பயன்படுத்திக் கொள்வது அவனது வளர்ச்சிக்குக் காரணமாகிறது. தன் வெற்றிக்கு உதவுமென்றே உறவுகளைப் பேணுகிறான் கேசவப்பிள்ளை. இது குறித்து அவனுக்கு எந்த குற்றவுணர்ச்சியும் இல்லை. ஆனால் அத்தனையும் ஒரு நாள் முடிவுக்கு வருகிறது. ஏணிப்படிகள் ஸர் சி,பி.யின் திவான் ஆட்சி முதல் கேரள மாநிலத்தில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அரசு வரையிலான காலகட்டத்தின் வரலாற்றை தெளிவாக விவரிக்கிறது.

பரிந்துரைக்கப்படும் இவரது பிற நூல்கள் : Chemmeen, Randidangazhi (more…)

சிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10

தனுஷ் கோபிநாத், ஷிம்மி தாமஸ்

மலையாள இலக்கியத்தின் சிறந்த இருபது நாவல்கள் இவை என்று நம்புகிறோம்.

நாங்கள் வாசித்த நாவல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் இது.

1 கஷக்கின்தே இதிஹாசம் (The Legend of Khasak)– O V Vijayan

மலையாள இலக்கியத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கிய நாவல் என்று இதைக் கருதுகிறேன் – கஸக்கிற்கு முன், கஸக்கிற்குப் பின் என்று பிற நாவல்களை வகைமைப்படுத்தும் அளவுக்கு வலிமையான தாக்கத்தை ஏற்படுத்திய நாவல் இது. விஜயன் இந்த நாவலை முன்னரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தாலோ, அல்லது Gregory Rabassa போன்ற ஒரு மொழிபெயர்ப்பாளர் அவருக்குக் கிடைத்திருந்தாலோ இது உலக அளவில் போற்றப்பட்டிருக்கும். கஸக்கில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ரவி அதன் தொன்மங்கள், மக்கள், அவன் கஸக்கைவிட்டு பின்னர் வெளியேறுவது என்று ரவியின் பயணத்தை விவரிக்கும் நாவல். ரவியின் பௌதிக, ஆன்மிக பொருளை வரையறுக்கும் நாவல் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். மூச்சுத்திணற வைக்கும் அவமானத்தைவிட்டுத் தப்பிச் செல்லும் ரவி, மிக அசாதாரணமான இந்த இடத்தில் அடைக்கலம் புகுகிறான், அவனால் புரிந்து கொள்ள முடியாத மனிதர்களைச் சந்திக்கிறான். இதை எழுத பன்னிரெண்டு ஆண்டுகள் ஆயிற்றாம், மலையாள இலக்கியத்தில் தடம் பதித்த நாவல் இது.

ஆங்கில மொழிபெயர்ப்பு – ஓ வி விஜயன்

பரிந்துரைக்கப்படும் பிற நூல்- Dharmapuranam (more…)

திகைத்த பத்து – எஸ். ராஜ்மோகனின் பத்து புத்தகங்கள் பட்டியல்

எஸ். ராஜ்மோகன்

நீங்கள் படித்த புத்தகங்களில் சிறந்த பத்து அல்லது இருபது புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள் என்றால் அது யாருக்குமே மிகக் கடினமான காரியமாக இருக்கும்.

எவ்வளவு புத்தகங்களைப் படித்திருந்தாலும், அல்லது அந்த அளவுக்குப் படித்திருக்காவிட்டாலும் இப்படிப்பட்ட ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலை வெளியே சொல்வது கஷ்டம்தான். இதைச் செய்வதில் எப்போதும் ஒரு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது – முதன்மை நூலோ புகழ்பெற்ற நூலோ விட்டுப் போகலாம், அல்லது, பட்டியலில் இடம்பெறும் தகுதி இல்லாத ஒரு புத்தகத்தை நாம் பரிந்துரைக்கும் அபாயம் இருக்கிறது.

ஆனால் இயல்பிலேயே இந்த வேலை தனிநபர் விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தது எனும்போது அகவயத்தன்மையை முழுமையாய் தவிர்க்கவும் முடியாது. அதிலும் என்னைப் போன்றவர்களுக்கு, நாங்கள் செய்யும் பணி காரணமாக இது இமாலயச் சாதனையாகிறது. நானிருக்கும் பணியில் பல துறைகளைச் சார்ந்த புத்தகங்களில் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சொற்கள் படித்துக் கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் மற்ற எதையும்விட நமக்கு விருப்பமான துறை சார்ந்த புத்தகங்களையே வாசிக்க முற்படுகிறோம் எனும்போது நாங்கள் பல்வகைப்பட்ட புத்தகங்களைப் படித்தாக வேண்டியிருப்பதாலேயே, சிறந்த பத்து அல்லது இருபது புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் பட்டியலிடுவது கிட்டத்தட்ட முடியாத காரியம் என்று சொல்லி விடலாம்.

முப்பத்தைந்து வருடங்களாக தொடர்ந்து புத்தகங்கள் படித்து வந்ததில் எது மிகவும் எரிச்சலூட்டும் விஷயமாக இருந்திருக்கிறது என்று பார்த்தால், அவ்வப்போது யாராவது ஒருவர், “என் வாழ்க்கையை மாற்றிய பத்து புத்தகங்கள்,” என்றோ அது போன்ற வேறு ஏதோ மூளையில்லாத கட்டுரையோ எழுதியிருப்பதைப் பார்ப்பதுதான். புத்தகங்கள் மட்டுமே நம் வாழ்வைத் தகவமைத்துவிடக் கூடுமா? புத்தகங்கள் பண்பாட்டுக் கூறுகள், மனிதனின் வாழ்வுக்கும் பணி மேம்பாட்டுக்கும் உருவம் கொடுக்கும் பல கருவிகளில் ஒன்று. அதேபோல், பண்பாடு என்று சொல்லும்போது, உருவமற்ற, உள்ளீடற்ற ஏதேதோ விஷயங்களைக் கற்பிதம் செய்துகொள்ள முற்படுகிறோம். பழக்க வழக்கங்கள், விழுமியங்கள், பாரம்பரியம், அமைப்புகள், சமூக கருவிகள், சட்டங்கள் என்றும் இன்னும் பலவும் கொண்டதே பண்பாடு. இப்படியிருக்கும்போது, புத்தகங்களை மட்டும் சிறப்பிப்பது போலித்தனமான, கவனம் ஈர்க்கும் உத்தியாகத்தான் எனக்குப் படுகிறது. (more…)

எஸ் சுரேஷ் – தாக்கம் ஏற்படுத்திய பத்து கவிதை நூல்கள்

  எஸ். சுரேஷ் –

“கவிதை வாசிப்பதுதான் நல்ல இலக்கிய ரசனையை வளர்த்துக் கொள்ளும் வழி|”- ஜோசப் பிராட்ஸ்கி

புத்தகங்கள் எப்போதும் அந்தரங்கமானவை, ஒருவர் தேர்ந்தெடுக்கும் “சிறந்தவை” வேறொருவரின் தேர்வைப் போலிருக்காது. கவிதை விஷயத்தில் இதற்கான வாய்ப்புகள் மேலும் குறைகின்றன. பல கவிஞர்களை நான் ரசித்து வாசித்திருக்கிறேன், ஆனால் வெகு சிலரிடம் மட்டுமே மீண்டும் மீண்டும் திரும்புகிறேன். இந்தப பட்டியல் நான் திரும்பத் திரும்ப வாசிக்கும் கவிதை நூல்களின் பட்டியல். இதில் மாபெரும் கவிஞர்கள் சிலர் இல்லாதிருக்கலாம், ஆனால் எனக்குப் பிடித்தவர்கள் இவர்கள்:

1. குறுந்தொகை

சங்கக் கவிதைகளில் அகம், புறம் என்ற இரு பிரிவுகள் உண்டு. அகக்கவிதைகளின் மிகச் சிறந்த தொகுப்பு குறுந்தொகை. அகநானூறு சற்றே நெடியதாக இருக்கிறது, ஐங்குறுநூறு மிகக் குறுகியதாக இருக்கிறது. குறுந்தொகைதான் கச்சிதமான உருவம் கொண்டிருக்கிறது. இந்தக் கவிதைகளில் காணப்படும் நவீனத்துவம் என்னை மிகவும் இம்ப்ரெஸ் செய்ததால் இவற்றை ஒவ்வொன்றாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆரம்பித்தேன். ஏறத்தாழ 70 கவிதைகளை ஆங்கிலப்படுத்தினேன், அவற்றில் 13 சாகித்ய அகாதெமி பிரசுரமான ‘Indian Literature’ என்ற பத்திரிக்கையில் பிரசுரமாயின. தமிழ் இலக்கியத்தின் உச்சங்கள் இவை. ஏ கே ராமானுஜம் சரியாகவே சொன்னதுபோல், இவற்றைக் காட்டிலும் சிறந்த கவிதைகள் இன்னும் தமிழ் இலக்கியத்தில் எழுதப்படவில்லை. (more…)

பத்து புத்தகங்கள் – எஸ் சுரேஷ் பட்டியல்

 
 
அண்மையில் பல நண்பர்கள் குறிப்பிடத்தக்க பத்து புத்தகங்கள் என்று ஒரு பட்டியலை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டனர். நண்பர் ஸ்ரீதர் நாராயணன் எனக்கும் அழைப்பு விடுத்திருந்ததால் நானும் பட்டியலிட்டேன்.  “போரும் அமைதியும்”, “குற்றமும் தண்டனையும்” போன்ற இலக்கிய உச்சங்களைத் தொட்ட நாவல்களைதான் அதில் பேச வேண்டியிருந்தது. இது போன்ற பட்டியல்களில் ஒரு சிக்கல், நாம் சொல்லும் எல்லா புத்தகங்களும் எல்லாருக்கும் சுவையாக இருக்காது என்பதுதான். என்னா ஆனாலும், எல்லாரும் “போரும் அமைதியும்”, அல்லது, “யூலிஸ்சஸ்” நாவலை எடுத்துப் படித்து முடிக்கப் போவதில்லை. பட்டியலில் உள்ள பல புத்தகங்களின் பெயர்களைப் பார்த்ததுமே இலக்கியப் படைப்புகள் என்றால் கனமாக இருக்கும், போர் அடிக்கும், பொறுமை இருந்தால்தான் படிக்க முடியும் என்ற எண்ணம் எழுகிறது. இலக்கியம் வாசிப்பதில் நாட்டம் இருப்பவர்களுக்கு இந்தப் புத்தகங்கள் சுவாரசியமாக இருக்கலாம், ஆனால் மற்ற அனைவருக்கும் இதை எல்லாம் படித்து முடிப்பது ஒரு கடமை போலதான் இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே, நான் இந்தப் பட்டியலைத் தொகுக்கும்போது இது விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டேன் – இவை இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படும் படைப்புகள், அதே சமயம் புதுமையானவை, சுவாரசியமானவை. என் ரசனையும் உங்கள் ரசனையும் வேறுபடலாம், எனக்கு நன்றாக இருப்பது உங்களுக்கு நன்றாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் அளப்பரிய பொறுமைக்கான அவசியம் இல்லாமல், கொஞ்சம் பொறுமையாகவும் ஓரளவு ஆர்வமாகவும் இவற்றை நீங்கள் வாசிக்க நேர்ந்தால், நிச்சயம் இந்தப் புத்தகங்களைப் பாராட்டுவீர்கள்.
 
என்ற சிறு முன்னுரையோடு, என் பரிந்துரைப் பட்டியலை அளிக்கிறேன்:

(more…)