-அதிகாரநந்தி-
உலகம் உய்யவேண்டி
யார் யாரோ
என்னென்னவோ
செய்கிறார்கள்
பாவம்! அது தான்
உய்தபாடில்லை.
ஒருவேளை அது உய்துவிட்டாலும்
பாவம் இவர்கள்
பிறகு என்ன தான் செய்வார்கள்
-அதிகாரநந்தி-
உலகம் உய்யவேண்டி
யார் யாரோ
என்னென்னவோ
செய்கிறார்கள்
பாவம்! அது தான்
உய்தபாடில்லை.
ஒருவேளை அது உய்துவிட்டாலும்
பாவம் இவர்கள்
பிறகு என்ன தான் செய்வார்கள்
இந்தக் கரிய இருளின் நேர்த்தியை
இதுவரை நான் அறிந்திருக்கவில்லை
நிலவை நோக்கிக் கொண்டிருந்தவனுக்கு
இருளின் தண்மை பிடிபடவில்லை
கண்ணுக்குத் தெரியாத பெரிய இருள்
அதனுள் படர்ந்த சிறு வெளிச்சம்
இருளும் ஒளியும் இணைந்த இரவு
அங்கே விழும் ஒர் நட்சத்திரம்
எதை வேண்டிக்கொள்ள?
இருளைத் தெரிந்து கொண்டவனுக்கு
ஏதேனும் வேண்டியும் இருக்குமோ?
வெளிச்சம் தேடித் தோற்பதை விட
பரந்து விரிந்த இருள் இருக்கிறது
அது போதும்.
ஒளிப்பட உதவி – techsupportalert.com
நான் ஏறிக் கெண்டேன்
ஏன் என்றெல்லாம் கேட்காதீர்
ஏறிக் கொண்டேன் அவ்வளவு தான்
இப்படி ஓடுமென்று யார் கண்டார்கள்
விழுந்துவிடலாம்
ஆசை விடவில்லை
வேகமுமில்லை
திசையுமில்லை
ஒன்றுமில்லை என்கையில்
ஒருபிடி பிடறி மயிரைத்தவிர
பிடித்திழுக்கலாம்
கட்டி முத்தமிடலாம்
இது எனது சவாரி
எனது விருப்பப்படி
அந்நாளின் இரண்டாம் விதியை நோக்கி
சாலையில் நடந்து கொண்டிருந்தேன்
திடீரென்று புதரிருந்து ஒரு உருவம்
அறைந்துவிடத் தூண்டும் ஒரு இளிப்பு
கைகளில் சங்கு சக்கிரம் கதை தாமரை
சில்லரையைத் தேடினேன்
‘நான் கடவுள்’ என்றது உருவம்
பாவமாக இருந்தது
‘நிஜமாகவே நான் கடவுள்தான்’
ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு
ஒரு பக்கமாக விலகி ஓடினேன்
’டேய்! நில்லு நில்லு’
ஹாண்ட் டிரில் கூட கையில் இல்லை
இவனெல்லாம் என்ன கடவுள்?
நான் கத்துகிறேன்
அங்கேயும் குரல் உயர்கிறது
நான் இன்னும் உயர்த்துகிறேன்
அங்கே என்னைவிட உயர்கிறது
உச்சஸ்தாயில் குரல் வடிவம் சிதைகிறது
குரல்கள் கலந்து இரைகின்றன
அக்கம்பக்க கதவுகள் திறந்து மூடுகின்றன
அறை முழுதும் சிதறிய வார்த்தைகள்
நடுவே நானும் அவரும்
ஒவ்வொரு வார்த்தையாக எடுத்துப் பார்க்கிறோம்
எதுவும் எங்களுடையதாக இல்லை.
ஒளிப்பட உதவி – Tatiana Iliina