எஸ். சுரேஷ்
தெருவின் பெயர் – நீங்கள் தெருப்பலகையில் காணலாம்,
எனக்குஅதன் பெயர் சுவர்க்கம், என் தொலைந்த சுவர்க்கம்.
ஊரின் பெயர்- நீங்கள் வழிப்போக்கர்களிடம் கேட்கலாம்,
எனக்கு அதன் பெயர் சுவர்க்கம், என் தொலைந்த சுவர்க்கம்.
தொலைந்து போனதால், அதன் பூங்காக்கள் பூத்திருக்கின்றன,
என் இதயம் துடிக்கிறது, தெறிக்கிறது, தூண்டில் மீனாய் துள்ளுகிறது.
மின்னும் நதியின் கரையோர வளைகளில் கருப்பு எலிகள்,
வரவேற்று அனுமதிக்கப்பட்ட அவற்றின் பூலோக சுவர்க்கம் அழிவற்றது.
பீர் குடிக்கையில் கண்ணாடி விளிம்புகளில் உப்பு பூசச் சொல்லி,
முன்யோசனையுடன் நீ அறிவுறுத்தும்போதும் உற்சாகமாயிருந்தாய்.
என்னவொரு காலம் – காலண்டரில் பார்க்க வேண்டும்,
நீ நைட்டி மாதிரி, அணிந்திருக்கையில் உள்ளும் புறமும் ஆண்டவன்.
நீ மென்மையானவன், பீங்கான் கிண்ணம் போல் உடைகிறாய்-
கடவுளின் ஒளி அதன் வழி வருகிறது, எல்லாம் தெளிந்து வருகிறது.
உன் கண்முன்னரே அவன் உன் காயக்கூட்டினுள் எட்டிப் பார்க்கிறான்,
கூனியிருக்கிறாய்- ஆச்சரியமில்லை- தோள்களில் அமர்ந்திருப்பது யார்!
உன் சுமை ஏற்றுக் கொள்வேன், ஆனால் என் பெயர் எழுதப்படவில்லை,
மழையில் ஒலிக்கும் இசை கேட்டபடி, பூமரப் பாதையில் போவோம் வா-
இளஞ்சூட்டு அருவியென சாக்கடையில் நீர் விழுகையில்
மலையிலிருந்து இறங்குவதுபோல்,
ஸ்லாவ்யன்கா வாசிக்கின்றனர்கீழே வீழ்கிறது,
என் “சுவர்க்கம்”
– Elena Shvarts
வாழ்வில் நாம் பல பிணைப்புகளை உருவாக்கிக் கொள்கிறோம் : பெற்றோர், மனைவி, மக்கள், நண்பர்கள், வாகனங்கள், புத்தகங்கள், இசை, திரைப்படம் என்றும் இன்னும் பலவும். ஆனால் பிணைப்புகள் அனைத்தினும் மிகவும் வலிமையான பிணைப்பு மண் மீதானது.
(more…)
Like this:
Like Loading...