Enipadikal (Ladder steps) – Thakazhi
கேசவப்பிள்ளையையும் திருவாங்கூர் செயலகத்தில் அவரது வளர்ச்சியையும் விவரிக்கும் கதை. அப்போது திருவாங்கூர் சமஸ்தானமாக இருந்த காலத்தில் நிகழும் கதை. கேசவப்பிள்ளை ஒரு குமாஸ்தாவாக வேலையில் சேர்கிறான், அதன்பின் அதன் படிநிலைகளில் மெல்ல மெல்ல ஏறி முதன்மைக் காரியதரசியாக உயர்கிறான். வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்களோடு தனக்கு ஏற்படும் தொடர்புகளைச் சரியாக பயன்படுத்திக் கொள்வது அவனது வளர்ச்சிக்குக் காரணமாகிறது. தன் வெற்றிக்கு உதவுமென்றே உறவுகளைப் பேணுகிறான் கேசவப்பிள்ளை. இது குறித்து அவனுக்கு எந்த குற்றவுணர்ச்சியும் இல்லை. ஆனால் அத்தனையும் ஒரு நாள் முடிவுக்கு வருகிறது. ஏணிப்படிகள் ஸர் சி,பி.யின் திவான் ஆட்சி முதல் கேரள மாநிலத்தில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அரசு வரையிலான காலகட்டத்தின் வரலாற்றை தெளிவாக விவரிக்கிறது.
பரிந்துரைக்கப்படும் இவரது பிற நூல்கள் : Chemmeen, Randidangazhi (more…)