நம்பி கிருஷ்ணன்

அருண் கொலாட்கர்- தமிழாக்க கவிதைகள் இரண்டு

நம்பி கிருஷ்ணன்

மகராண்ட்:

பூஜை செய்வதற்காக
சட்டையைக் கழற்றிவிட்டு
உள்ளே செல்ல வேண்டுமா
யார், நானா?

நன்றி. ஆனால் வேண்டாம்
நீங்கள் தாராளமாக உள்ளே செல்லுங்கள்
உங்களுக்கு அப்படியொரு விருப்பமிருந்தால்.

போகுமுன்
வத்துப்பெட்டியை என்னிடம்
தந்துவிட்டு போக முடியுமா ?

நான் வெளியே முற்றத்திலிருக்கிறேன்.
அங்கு யாருமே கண்டு கொள்ளமாட்டார்கள்
நான் புகை பிடிப்பதை.

மனோஹர் :

கதவு திறந்திருந்தது.
இன்னொரு கோவிலா?
மனோஹர் நினைத்தான்.

உள்ளே எட்டிப் பார்த்தான்
எந்த சாமி எங்கிருக்குமோ என்பதை
கற்பனை செய்தபடியே.

சட்டென தலையை திருப்பிக்கொண்டான்
கன்றொன்று அகல்விழிகளுடன்
அவனைத் திரும்பிப் பார்த்த போது.

இது கோவிலே இல்லை
வெறும் மாட்டுக்கொட்டில்
என்று கூறிக்கொண்டான்.

கொலாட்கரின் ஜெஜூரி, ஓர் அறிமுகம் – அமித் சௌத்ரி

(நியூ யார்க் ரிவ்யூ ஆப் புக்ஸ் கிளாசிக் பதிப்புக்கு அமித் சௌத்ரி எழுதியுள்ள ஓர் அறிமுகம்)

1976ஆம் ஆண்டில் ஜெஜூரி பதிப்பிக்கப்பட்டபோது என் வயது பதினான்கு. அதைப் பற்றி அடுத்த ஆண்டுதான் கேள்விப்பட்டேன். அப்போது அந்த நூல் காமன்வெல்த் கவிதைப் பரிசு வென்றிருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் செய்தி வந்திருந்தது, அதனுடன் அருண் கொலாட்கர் பற்றிய ஒரு கட்டுரையையும் அந்தப் பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. என் நினைவு சரியாக இருந்தால், அதன்பின் ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று, கவிஞர், புத்தகம், மற்றும் மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள யாத்திரைத் தலமான ஜெஜூரி பற்றிய கட்டுரைகள் அந்தச் செய்தித்தாளில், வந்திருந்தன. அப்போது அதில் பார்த்த ஒரு புகைப்படத்தால்தான் கொலாட்கரின் தொங்கு மீசையும் நீண்ட தலைமுடியும் எனக்குப் பரிச்சயம் ஆகியிருக்க வேண்டும்.

இலக்கியம் என்ற ஒன்றே இல்லை என்பதுபோல் இப்போது கடந்த பத்தாண்டுகளாக பாவனை செய்து கொண்டிருக்கும் அந்தச் செய்தித்தாள், ஒரு கவிஞருக்காக அத்தனை நியூஸ்பிரிண்ட்டை அப்போது செலவு செய்தது என்பது இன்று அசாதாரண விஷயமாகத் தெரிகிறது; ஆனால், பம்பாயின் பண்பாட்டுச் சூழல், ஆங்கிலத்தில் எழுதப்படும் இந்திய கவிதைகளின்பால் அன்றெல்லாம், ஏறத்தாழ எதுவுமே யோசிக்காமல், வரையறைத்துக் கொள்ளாமல், நட்பு பாராட்டுவதாகத்தான் இருந்தது, தான் பொழுதுபோக்கு கேளிக்கைகளாகக் கொண்ட பலவற்றுக்கும் காட்டிய அதே இணக்க உணர்வுதான் இங்கும் அதற்கிருந்தது. (more…)

மேலே சில பறவைகள்/ Up above, a few birds

மேலே சில பறவைகள்
– கால சுப்ரமணியன்
 
சூரியன் கூட
மேற்கில் மறைந்தான்.
நேரத்தோடு
கூடு நோக்கி
பறந்து சென்றன நாரைகள்.
கீழே
இன்னும் வேலை முடியாத மனிதர்கள்
அக்கம் பக்கம் பார்த்து
(மேலே பார்க்க அவகாசமற்று)
ஆட்கள்
மிருகங்கள் 
வாகனங்கள் 
இல்லையென்று நிச்சயித்துக் கொண்டு
பாறைகளைப் பிளக்க வெடியை வெடித்தனர்.
 
சப்த அதிர்ச்சியில்
ஒரு கணம்
       அரண்டு
       தயங்கிக்
       குழம்பிச்
        சிதறி
மீண்டும் தன் வழியே வரிசைகொண்டு
சாவகாசமாய்
மிதந்து சென்றன பறவைகள் 

(more…)

இரு மொழிக் கவிதை – தேவதச்சனின் “ஆண்டாள் என் பள்ளித் தோழி”

dd

A poem by Devadatchan

மொழியாக்கம்- நம்பி கிருஷ்ணன்

Andal my school friend
elegantly
listens to my arguments
about Gods and Ghosts
as if accepting my arguments
Her skin glows
Next day
just like that
She would have written
a poem in response.
All around
the basketball court
I will fling
my rage.
Her hands
carrying my school bag
Her eyes
running around fervently like a pumpkin creeper
listening to the cawings of
King Crows
Her fingers
draw on my record notebook
while
I
wander around
Like a small red ant
in the five cornered yellow flower.
Like a cuckoo in winter
I hibernate
in the library’s desolation.
Having bought
brooms
germ killers
I walk along the main street
in which
rolling in rain water
a pig
approaches
vegetable bag in hand
picking a way
Andal turns
from one or two grey wisps of her hair
come floating
four five
Swans.