நம்பி கிருஷ்ணன்

பாரின் ரிட்டர்ன் – ராண்டோ

(பிரபல மொழிபெயர்ப்பாளர் திரு கல்யாணராமன் அவர்களின் அவதானிப்பைத் தொடர்ந்து 26.11.2014 அன்று, சங்கப் பாடல் மற்றும் ஏ கே ராமானுஜன் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை இணைத்து இப்பதிவு திருத்தப்பட்டது)

ஏ கே ராமானுஜம் செய்துள்ள ஆங்கில மொழிபெயர்ப்புகள், இடைவெளிகளுக்கு முக்கியத்துவம் தருபவை, அவற்றின் உணர்வுச் செறிவில் மௌனத்துக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால், மூல மொழியில் உள்ளதையும் மொழிபெயர்ப்பில் உள்ளதையும் ஒப்பிட்டு நோக்கும்போது, சில விடுபடல்கள் கேள்விக்குறியனவாகத் தெரிகின்றன, தமிழறியாத ஒருவர் ஆங்கிலச் சொற்களை மட்டுமே கொண்டு அடையக்கூடிய பொருள், தமிழில் உள்ளதற்கு இணையாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.

ஒரு சோதனை முயற்சியாக, ஏ கே ராமானுஜனின் ஆங்கிலக் கவிதைகளை நெருக்கமாக ஒட்டி, அவர் மொழிபெயர்த்த சில சங்கப் பாடல்களின் தமிழாக்கம் இங்கு அளிக்கப்படுகிறது. சரி தவறுகளுக்கு அப்பால், ஏ கே ராமானுஜனின் மொழிபெயர்ப்பை மீண்டும் வாசிக்கச் செய்ததெனில், இந்தச் சோதனை முயற்சி வெற்றி பெற்றதாக எடுத்துக் கொள்ளலாம்.

கௌவை யஞ்சிற் காம மெய்க்கும்
எள்ளற விடினே யுள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை யொசிய லற்றே
கண்டிசிற் றோழியவ ருண்டவென் னலனே.

Look, friend,
fear of scandal will, only thin out passion.
And if I should just give up my love
to end this dirty talk,
I will be left only with my shame.

My virgin self of which he partook
is now like a branch half broken
by an elephant,
bent, not yet fallen to the ground,
still attached to the mother tree 
by the fiber of its bark.

கேள், தோழி,
பழிச்சொல் பயம், காமத்தை குறைக்கத்தான் செய்கிறது.
என் காதலை விட்டுக் கொடுத்தாலாவது
இந்த இழிபேச்சை நிறுத்தலாம் என்றால்,
எனக்கு அவமானம் மட்டுமே மிஞ்சும்.

அவன் கொண்ட என் பெண்மை
பெரும் களிற்றால்,
பாதி முறிந்த கிளைபோல
வளைந்து, ஆனால் மண்ணில் விழாது,
அதன் பட்டையின் நாரால்
இன்னமும் தாய்மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீதர் நாராயணன் (“Fear of Scandal” ) (more…)

ஹைகேகாணி

 

நம்பி கிருஷ்ணன்

குருதிக் கறைகள்
நதியில்
கரையும் கனவில்
கழிகிறது
ஹைகேகாணிக்களின்
ஆழ்கடல்
அணிவகுப்பு.

புலியின் வாயில் – ராண்டோ

 

புலியின் வாயில் சிக்கிய முள்கரண்டி.
வாய்மூட முடியாதபடி படுவேதனை.
மரத்தடியில் இளைப்பாறிய புலி
சங்கடவிழிகள் மின்னுவதை
ஊரார் கண்டனர்.

அன்று ஒரு நாளைக்கு
அடர்கானகம் சற்றே தளர்ந்தது.

நீர் சொட்டி சடைதரித்த
பக்கத்து காட்டுப் புனுகுப்பூனை
அடங்கமாட்டாமல் சிரித்தது.

தலையைத் தூக்கி முதலைகள் விசாரித்தன.
இளைய இருமுயல்கள்
சற்றே கூடிநின்று ஒளிமணி மூக்கு
சுழித்துச் சென்றன.

மரக்கிளைமேல் குரங்கு;புதர் மறைவில் மான்
ராச்சுற்றி திரும்பிய ஓநாய்.

சில நிமிட சிரிப்புக்குப்பின்
எல்லாவற்றுக்கும் ஒரே கேள்வி
மீதமிருக்கும் கேக் எங்கே?

(ரா கிரிதரன்) (more…)

காமம் – இரு தமிழாக்கக் கவிதைகள்

நம்பி கிருஷ்ணன்

புல்லட்டுமா என்றான்

புல்லட்டுமா என்றான்
(கத்துவேன் என்றாள்
ஒரே ஒரு முறை என்றான்)
ஜாலி தான் என்றாள்

(தொடட்டுமா என்றான்
எவ்வளவு என்றாள்
நிறையவே என்றான் )
குடியா முழுகிவிடும் என்றாள்.

(போதருக என்றான்
தொலை தூரம் வேண்டாம் என்றாள்
எது தொலைவென்றான்
நீ இருக்குமிடம் என்றாள் )

தங்கி விடவா என்றான்
( எவ்வழி என்றாள்
இதோ இப்படி என்றான்
நீ முத்தமிட்டால் என்றாள்

முன்னேறவா என்றான்
இது தான் காதலா என்றாள் )
நீ சம்மதித்தால் என்றான்
(கொல்லாதே என்றாள்

ஆனால் இது தான் வாழ்க்கை என்றான்
ஆனாலும் உன் மனைவி என்றாள்
இதோ இப்போதே என்றான்)
ஆ அம்மா என்றாள்
(அமர்க்களம் என்றான்
நிறுத்தாதே என்றாள்
மாட்டவே மாட்டேன் என்றான்)
மெதுவாக என்றாள்

(வந்ந்து… விடவா? என்றான்
உம்…ம்ம் என்றாள்)
இன்பத்தின் உச்சமடி நீ என்றான்
(எனக்கு சொந்தமடா நீ என்றாள் )

(may i feel said he, e e cummings)

oOo
புணர்ச்சி

கழட்டினாள்!
வெறும் ஆடைகளை மட்டும் அவள் களையவில்லை.
முலை, புட்டம்,
பொன்னாய் மினுக்கும் தொடைகளை

அல்ல

மெல்லிய நுரையீரல், குடலின் ஊதாக்கூடு,
எலும்பின் ஒளிரும் தந்தம்,
வாஞ்சையுடன் துடிக்கும் இதயத்தையே

காட்டும்படியாக

உள்ளிருப்பதை வெளியே கொணரும்
சிக்கலானச் செயலை அவள் நிகழ்த்த
நான் அவளைக்
கைகளில் அள்ளினேன்

என்னையே திடீரென்று அவள் குடிகொண்டதைப் போலொரு
மெல்லதிர்ச்சி!

மௌனம்.
வெளியே ஜன்னலில்
மழையின் தாழ்ந்த வியப்பொலிகள்.

கவலையுடன் வரைபடமின்றி பயணித்தேன்
சதையின் நகரத்தில்:
அவளது நடைபாதைகளின் நீல நிழல்களில்
தொலைந்து இடறினேன்.
கனவின் அமைதி
ஊசலாட்டம்
நீரில், துடுப்பின் சிதறடிப்பு!

திடீரென, சற்றும் எதிர்பாராமலே
வெய்யில் நிரம்பிய சதுக்கத்தில்
நான் வந்தடைகையில்,
என் கரங்களில்,
மெல்லிய கரைதல்களுடன்,
பறவைத் திரளாக
அவள் சிதறினாள்.

நிர்பந்தங்களே இல்லாமல்
ஓருடல் அளிக்கப்படுகையில்:
கனிவான இரக்கம்,
ஆனாலும் பொறுமையின்மையும்கூட.
கொஞ்சம் அலட்சியத்துடன் கலந்து.
இதையெல்லாம்விட,
பெயரிடவே முடியாத ஏதோவொன்று:
ஒருவிதமான சோகம்.

பின்கழுத்தில் விரல்களால்
விரைவாக மும்முறை தட்டிவிட்டு
அவள் எழுந்து உட்காரும் வரையில்
நாங்கள் கிடந்தோம்:
நசுநசுத்து, குளிருடன்,
கரையில் தனித்த மீன்களைப் போல்.

(After John Banville, The Newton Letter)