பத்ரி சேஷாத்ரி

புத்தக கண்காட்சி – பத்ரி சேஷாத்ரியுடன் ஒரு நேர்முகம்

kizhakku-publication-pathipagam-logo

வலைத்தள கட்டுரைகள், ஃபேஸ்புக் பதிவுகள், தொலைக்காட்சி நேர்முகங்கள் என்று இடையறாது  மும்முரமாக செயலாற்றிக் கொண்டிருப்பவரிடம், புத்தக கண்காட்சியை முன்னிட்டு உரையாட இயலுமா என்று கேட்டதும் தயங்காது திறந்த மனதுடன் பேட்டி அளித்தார்.   கிழக்கு பதிப்பகத்தின் நீண்ட பயணத்தின் ஒரு சிறு பரிமாணத்தை பத்ரி சேஷாத்ரியின் சொற்களில், பதாகை வாசகர்களுக்காக – 

பதாகை: புனைவு, கவிதை, இலக்கிய விமரிசனக் கட்டுரைகள் விஷயத்தில் கிழக்கு பதிப்பகத்தின் தேர்வுக் கொள்கை என்ன? அதாவது, எந்த அடிப்படையில் என்பதை விட, எந்த நோக்கத்தில்- லட்சியம் என்றே சொல்லலாம்- புத்தகங்களைப் பதிப்பிக்கத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

பத்ரி சேஷாத்ரி: நாங்கள் பதிப்பிப்பவை பெரும்பாலும் (1) மறு பதிப்பு (2) நன்கு அறியப்பட்ட மூத்த எழுத்தாளரின் நூல்களின் முதல் பதிப்பு (3) அதிகம் அறியப்படாத எழுத்தாளர்களின் சோதனை முயற்சிகள் என்பதற்குள்ளாகவே அடங்கும். முதல் இரண்டிலும் ஆள்களைத் தேர்வு செய்துவிடுவதால் எழுத்துகளைத் தேர்வு செய்யவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. மூன்றாவதில் மிக மிகச் சில முயற்சிகளை மட்டுமே வெளியிடுகிறோம். அதில் பெரிதாக கொள்கைகள் எதையும் வைத்துக்கொள்வதில்லை. இந்த மூன்றாவதில் நாவல்கள் மட்டுமே வரும். அது முடிந்த அளவு வெகுஜன வாசகர்களை ஈர்க்கக்கூடியவையாக இருக்கவேண்டும். அவ்வளவுதான். (more…)