ஷாலமோவ்

கலங்கிய நதி- வர்லாம் ஷாலமோவின் கொலிமா கதைகள்

கார்டியன் இதழில் முன்னோடிச் சிறுகதைகள் குறித்து ஒரு தொடர் வெளியிடுகிறார்கள். அந்த வரிசையில் வர்லாம்  சிறுகதைகள் குறித்து கிரிஸ் பவர் எழுதிய பகுதி இது.
“நான் இலக்கியத்தை வெறுக்கிறேன்,” என்று 1965ஆம் ஆண்டு கடிதம் ஒன்றில் எழுதினார் வர்லாம் ஷாலமோவ். “நான் என் வாழ்க்கை அனுபவங்களை எழுதுவதில்லை; நான் சிறுகதைகளும் எழுதுவதில்லை. நான் சிறுகதை எழுதுவதை, இலக்கியமாய் இருக்கக்கூடியதை எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்கிறேன்”. ஷாலமோவ்வின் தயக்கங்கள் இவ்வாறு இருப்பினும், கொலிமா கதைகள் (Kolyma Tales) என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு, குலாக் அனுபவத்தில் உருவான மிகச் சிறந்த எழுத்துகளில் சிலவற்றைக் கொண்டிருக்கிறது.

(more…)