ஒரு பிரச்சாரக் கவிதை

யாரேனும் சன்னமான குரலில்
கருணைக் கதாகாலேட்சபம் நடத்தினால்
கேட்பதற்கு இதமாகத்தான் இருக்கிறது

அப்பாவிடம் இரைந்து பேசும் போதும்
மாமனார் சுட்ட அப்பளம் கேட்கும் போதும்
அம்மாவிற்கு விஷயங்களைப் புரியவைக்கும் போதும்
சின்னஞ்சிறு குழந்தை அழும் போதும்
இந்தக் கருணையெல்லாம் எங்கே

ஒரு தேரையை விடவும்
நாம் என்ன முன்னேறிவிட்டோம்
என்று நினைக்கிறீர்கள்?

                                                                – அதிகாரநந்தி

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.