‘வேதாளத்தின் மோதிரம் – காலத்துகள் சிறுகதை தொகுப்பு’ வெளியீட்டு அறிவிப்பு

காலத்துகளின் சிறுகதைகள் சில, 12, ‘வேதாளத்தின் மோதிரம்’ என்று தொகுப்பாய் இன்று மாலை வெளிவர இருக்கின்றன. பதாகை நூல்கள் அனைத்தும் யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து வெளியிடப்பட்டவை. இதுவும் அப்படியே.

காலத்துகளின் மொழிநடை தனித்தன்மை கொண்டது. அவரது வாக்கிய அமைப்பு உற்று நோக்கத்தக்கது, சிறுகதைகள் பரிசோதனைத்தன்மை கொண்டவை. அவர் எழுதியுள்ள பல சிறுகதைகளுள் முழுமையடைந்த சில மட்டுமே இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. அத்தனை கதைகளையும் அனைவரும் விரும்பி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றாலும், வெவ்வேறு வாசகர்களுக்கு வெவ்வேறு கதைகள் விருப்பமானவையாக இருக்கும். எந்த ஒரு கதையும் இதில் உள்ள மற்ற கதைகளுடன் ஒப்பிடுகையில் குறைபட்டதில்லை, இன்று தமிழில் எழுதப்படும் சிறுகதைகளுடன் ஒப்பு நோக்குகையிலும் இதைச் சொல்லலாம்.

“நாஞ்சில்நாடனின் ‘என்பிலதனை வெயில் காயும்’ நாவலை தமிழின் மிக சிறந்த வயதடைதல் வகை நாவல் எனச் சொல்வேன்‌. அறுபது எழுபதுகளில் பள்ளியும் கல்லூரியும் படித்த முதல் தலைமுறை கிராமத்து பட்டதாரிகளின் கதை. உலகமயமாக்கலை பள்ளிப்பருவத்தில் எதிர்கொண்ட தலைமுறையின் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் கதை என இத்தொகுதியை சொல்லலாம். நாஞ்சில் நாடனுடன் ஒப்பிடுவதற்கு இன்னும் இரண்டு காரணங்களும் உண்டு. ஒன்று, கான் சாகிப், தன்ராம் சிங் போன்ற நாவல் தன்மை கொண்ட வாழ்க்கைச் சித்திர கதைகள் என ‘கிளி ஜோசியம்’, ‘யாருமற்ற மனை’, ‘மரிசா’, மற்றும் ‘வேதாளத்தின் மோதிரம்’ போன்ற கதைகளை சொல்லலாம். கதை வழியாக இந்த மனிதர்களை எந்த அளவிற்கு அறிகிறோமோ அதேயளவு கதைசொல்லியைப் பற்றியும் அறிகிறோம்.”

பதாகை – யாவரும் வெளியீடாக இன்று வெளிவரும் ‘வேதாளத்தின் மோதிரம்’ சிறுகதை தொகுப்புக்கு எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அளித்துள்ள முன்னுரை, அகழ் 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.