“எது நல்ல கவிதை என்று கேட்கிறார் கிரி
கோட்பாடு ஒன்றைச் சொல்கிறார் பாஸ்கர்
கோட்பாட்டை மீறியதுதான் கவிதை என்கிறார் ஸ்ரீதர்
நீ என்ன சொல்கிறாய்?”
என்று என் வீட்டு கிளியிடம் கேட்டேன்
‘மியாவ்’
“அதுவும் சரிதான். எங்கே நீ ஒரு கவிதை சொல்”
“மியாஆவ்வ்வ்,
மியாவ்வ்வ்,
மியாஆவ்”
ரைட்டு விடு.