காத்திருத்தல்

-அதிகாரநந்தி-

பொறுப்புகள் எல்லம் முடிந்தாயிற்று

பேரன் பேத்திகள் பார்த்தாயிற்று
அவளும் போய்ச் சேர்ந்தாயிற்று
போதும் போதும்
மானசீகமாக ஒரு நன்றி
இதுவரை பலம் கொடுத்ததற்கு

பெரியவர் கண் மூடி
இருந்தார்

மறுபிறப்பு பயம் மட்டும்
அடி ஆழத்தைக் கலக்கிக் கொண்டிருந்தது

*************

எத்தனையோ
பேருந்து நிறுத்தங்களில்
தெரு முனைகளில்
தேர்வு மையங்களில்
அவனுக்காக நான் காத்துக் கொண்டிருந்திருக்கிறேன்

தாமதத்தை அவன் கொள்கையாகவே
வைத்துக் கொண்டிருந்தான்

நாங்கள் மீண்டும் சந்திக்கும்போது
அவன் கேட்கக்கூடும்
“கொங்கப்பன்மவனே! உனக்காக எத்தன
நாள்தான் காத்துக்கிட்டிருக்கிறது”

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.