‘அப்பாவின் சட்டை’ ராம் மேஸ்திரி குறித்து தி. வேல்முருகன்

இந்தக் கதையில் வரும் பெரியவர், ராம் மேஸ்திரியை நான் முதலில் இரண்டாவது படிக்கும்போதிலிருந்து பள்ளி இறுதி வரை பார்த்திருக்கிறேன். மெயின் ரோட்டை ஒட்டி, சுற்றி தென்னைகள் சூழ அவர் வீடு இருக்கும். எப்போதும் வீட்டு வாசலில் ஆட்கள் வேலை கேட்டு நிற்பார்கள். சுற்று வட்டாரத்தில் அறியப்படுகிற கட்டிட மேஸ்திரியாக இருந்தார் அவர்.

மச்சு வீடு கட்டும் எல்லாருக்கும் கிணறு சுற்ற வராது. ஓட்டு வீடு, மச்சு விடு என்று எல்லா வேலைகளையும் தெரிந்த கைராசிக்காரர், பணமும் புகழும் என்று செல்வாக்காக இருந்தவர். அவர் கை தொட்டு கரணை கொடுத்த கொத்தனார் எல்லாம் மேஸ்திரி ஆகி பேர் சொல்கின்றனர். அவர் பிள்ளைகள் எல்லாரும் கொத்தனார்கள்தான், ஆனால் சோபிக்கவில்லை- மற்றவர்களிடம் வேலை செய்கிறார்கள்.

கால ஒட்டத்தில் ரோட்டோர மனை கைவிட்டுப் போய், வயலை ஒட்டிய மகன் வீட்டில் மருமகளின் கையை எதிர்பார்த்து தன் வயதான காலத்தில் சிறுவர்கள் விளையாடுவதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். மருமகள் மேல் பிரியம் இருந்தாலும் காலம் பூராவும் மேஸ்திரியாக இருந்ததால் அவரால் அப்படிதான் பேச இயலும்.

தி. வேல்முருகனின் சிறுகதை, ‘அப்பாவின் சட்டை’ இங்கே

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.