– விக்கி –
கர்நாடக இசை கற்றுக் கொள்வதில் வர்ணம் ஒரு முக்கியமான கட்டம். கீதங்களில் ‘ஸ்ரீ கண நாதா’வுக்குப் பிறகு, ஸ்வர ஜதியில் ‘ராரா வேணுகோபாலா’வுக்குப் பிறகு, வர்ணத்தில் நுழைவது பயிற்சிப் பிராயத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்ட மைல்கல்.
“எத்தன வர்ணம் போட்டுருக்கு?” என்பது இசை தெரிந்த பாட்டி, பெரியப்பாக்கள், சித்தப்பாக்கள், மாமா மாமிகள் தவறாமல் கேட்கும் கேள்வி. நீங்கள் கீர்த்தனைகள் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பின்னும் இந்தக் கேள்வியைத் தப்ப முடியாது.
ஐஐடியில் படிக்கும் மாணவனிடம், “உன் ப்ளஸ் டூ மார்க் என்ன?” என்று கேட்டு தெரிந்து கொள்வது போன்ற விஷயம் இது. வர்ணங்கள் அத்தனை முக்கியம். வித்வான்கள்கூட துவக்கத்தில் ஒரு வர்ணம் பாடிவிட்டுதான் கச்சேரியைத் துவக்குகிறார்கள். ஏனென்றால் மேளம் கட்ட இதுதான் உசிதம். (more…)