கரளைகற்கள் உறுத்தும்
வெட்டிவைத்த பாத்திகளில்
காட்சிக்கென மட்டும்
வளர்க்கப்பட்டிருக்கும்,
பெயர் தெரியாத
வெளிறிய ஊதா வண்ணப்பூக்களை
படமெடுத்து சேமிக்கையில்
‘டிசம்பர் பூக்கள்’
எனப் பெயரிடுகிறேன்.
பெயர் தெரிந்து கொள்ளாமலேப் போன
புதுமண்டபத்து பூக்கார அம்மாளின்
பூதொடுக்கும் தாளகதியையும்
வாயோர வெற்றிலை சிவப்பையும்
எப்படிப் பெயரிடுவது