நம் அனைவராலும் அழகான ஓவியங்கள் வரைய முடியாது – ஆனால் அழகான போட்டோக்கள் எடுக்க முடியும். தொழில்நுட்பம் அழகிய ஆர்டிஃபாக்ட்டுகளை எல்லாரும் உற்பத்தி செய்யலாம் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது.
ஆனால் எது அழகு, எது கொண்டாடத்தக்கது என்ற கேள்விகளை நாம் யாரும் கேட்டுக் கொள்வதில்லை. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியே பதாகை, “சாமானியர்களின் முகங்கள்” என்ற புகைப்படத் தொகுப்பு.
விளிம்பில் உள்ள விஷயங்களை மையத்துக்குக் கொண்டு வரும் முயற்சி இது. எது அழகு, எது புகைப்படம் எடுக்கத்தக்கது என்ற சிந்தனையைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்ட படங்கள் இவை.
இந்த வாரப் புகைப்படக் கலைஞர் திரு. விக்டர் லிங்கன் அவர்கள்.
audio credit: Moogies Bloogies, Delia Derbyshire & Anthony Newley, Ubuweb