சிகந்தர்வாசி

உல்லு

– சிகந்தர்வாசி – 

“டேபிளில் முட்டிக் மோதிக் கொண்டு ஒருவன் சிட்டி லைட் ஹோட்டலிலிருந்து வெளியே ஓடி வந்தான்,” என்று சொல்லிக் கொண்டே அக்பர் ஹோட்டலில் இருந்த சூர்யாவின் முன் உட்கார்ந்தான் வெங்கட். “இரு டம்ப்ளர்கள் உருண்டு விழுந்து நொறுங்கின. தரையெல்லாம் தண்ணீர். அதிர்ச்சியில் ஒரு பெரியவர் தான் குடித்துக் கொண்டிருந்த டீயைக் கொட்டிவிட்டார். ஓடி வந்தவன் நேராக என் மீது வந்து மோதினான். நாங்கள் இருவரும் கீழே விழுந்து உருண்டோம். என்னை அழுத்திக் கொண்டிருந்தவன் எழுந்திருக்கப் பார்த்தான், நான் விடவில்லை. ஒரு ஆள் வந்து அவன் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துக் கொண்டு போகும்வரை நான் என் பிடியை விடவில்லை. அவன் யார் தெரியமா? யூகிக்க முடிகிறதா பாரேன். இழுத்துக் கொண்டு போனவன் மஃப்டியிலிருந்த போலீஸ்காரன். என்னுடன் மோதியவன் ஒரு தாதா. யார் என்று சொல்ல முடியவில்லையா? ஹஹா! நான் யாரைப் பிடித்துக் கொடுத்தேன் என்று உன்னால் கண்டுபிடிக்கவே முடியாது – ஜகாங்கீர்கான்! ஹஹா!” (more…)