பீட்டர் பொங்கல்

ஆகக்கூடிய இருண்மையின் அதியற்புத அற்ப எழுத்து – லோரி மோரின் ‘பார்க்’: ஜெஃப் டயர் நூல் மதிப்பீடு

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : எத்தனை இலை தழைகள் மற்றும் இதர வஸ்துக்கள் போட்டு கொதிக்க வைத்துச் சாப்பிட்டாலும் கனிபலைஸ் செய்வது சுவைக்காக அல்ல. கொடுஞ்சுவையாக இருக்குமென்றாலும் இதயத்தை எடுத்துத் துண்டம் போட்டுச் சாப்பிடுவது அன்னிய அடையாளத்தை அழித்து ஆற்றல்களை உட்கொள்ளவே. இத்தகைய கனிபலியங்கள் பிற மொழி படைப்புகளின் இதயத்தைக் கொணரும் நோக்கத்தில் செய்யப்படுகின்றன, சுவையின் பொருட்டல்ல.

ஊர்வலத்தில் பெய்யும் மழையாய் இருக்கும் விருப்பம் எனக்கில்லை- அதிலும், நான் இந்த அளவுக்கு எதிர்பார்க்கும் ஓர் ஊர்வலத்தில், ஒப்பீட்டளவில் அபூர்வமாய் நிகழும் ஊர்வலத்தில். ஆனால் குளிரிலும் மழையிலும் வரிசை கட்டி நின்றிருந்த அனைவரின் சார்பிலும் பேசுவதானால், ஒரு சிறு விஷயத்தைப் பதிவு செய்தாக வேண்டும். சரியாகச் சொல்வதானால் இதை ஒரு குற்றமாகச் சொல்ல முடியாதுதான், இந்த ஊர்வலத்தின் சில பகுதிகள் ஏற்கனவே இந்த வட்டாரங்களைக் கடந்து சென்றிருக்கின்றன என்பதை மட்டும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். (more…)

“நாவலில் காலம் ஒரு பாத்திரம்” – லோரி மோர் நேர்முகத்தின் சில பகுதிகள்

Anagrams, Who Will Run the Frog Hospital?, A Gate at the Stairs என்று மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார் லோரி மோர். இவரது சிறுகதைகள் Self Help, Like Life, Birds of America, Bark என்று நான்கு தொகுப்புகளாக வெளியிடப்பட்டிருகின்றன. இவை தவிர புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி பற்றி ந்யூ யார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸில் இவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். தற்போது நாஷ்வில்லில் உள்ள வான்டர்பில்ட் யுனிவர்ஸிட்டியில் புனைவெழுத்துக் கலை கற்பிக்கிறார்.

யுவர் ஹிட்டன் செல்ஃப் என்ற தளத்தில் பதிப்பிக்கப்பட்ட நேர்முகத்தின் சில பகுதிகள் இங்கு தமிழாக்கம் செய்து அளிக்கப்படுகின்றன. நேர்முகம் கண்டவர் – டீர்ட்ரி

நீங்கள் இந்தக் கதைகளை எழுதுவதற்கான உந்துதல் என்ன?

எனக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. உண்மையில் இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி வந்தன. நபகோவ் கதையைப் பொருத்தவரை, மீண்டும் “Signs and Symbols” வாசித்தேன். ஆசிரியையாக ஒவ்வொரு மறுவருடமும் நான் அதைப் படித்துக் கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது. இப்போது திடீரென்று நான் அதில் வெவ்வேறு பல விஷயங்களை கவனித்தேன். அதைத் தொடர்ந்து என் மனதில் ஒரு கதை நிழலாடத் துவங்கிற்று. ரே கார்வார் கதைக்கு நாதன் இங்க்லாண்டர் இதைச் செய்தது எனக்கு உந்துதல் அளித்திருக்கலாம். கார்வர் கதைக்கு நெருக்கமான நிழலாக இல்லாத ஒரு கதையை அவர் எழுதினார். நான் எந்தக் கதையைச் சொல்கிறேன் என்று தெரிகிறதா? (more…)

கதைகளை எடிட் செய்தல் – ஆலிஸ் மன்ரோ

ஆங்கில மொழியில் எழுதுபவர்களில் மிகத் துல்லியமாக எழுதுபவராக இருக்கக்கூடிய ஆலிஸ் மன்ரோ எழுதுவதையும் யாராவது எடிட் செய்ய முடியுமா என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நார்மன் மெய்லர் அல்லது சல்மான் ருஷ்டி முதலானவர்கள் நிறைய எழுதுபவர்கள். அவர்களைப் போல் ஒரு வாக்கியத்தையடுத்து இன்னொரு வாக்கியம் என்று எழுதிக் கொண்டே செல்பவர் அல்ல ஆலிஸ் மன்ரோ – எந்தச் சொற்கள் தேவையில்லை என்று தேர்ந்தெடுப்பவர் அவர், தான் எழுதியதை இன்னும் நறுக்கு தெறித்தாற்போல் கத்தரிப்பதை வழக்கமாகக் கொண்டவர்.

ஆனால்கூட மன்ரோவுக்கு ஒன்றல்ல, மூன்று பதிப்பாசிரியர்கள் இருக்கின்றனர். மூவரும் அவரது ஆக்கங்கள் உருவாவதில் கைகொடுத்து உதவுகின்றனர்: ந்யூ யார்க்கரில் Deborah Treisman இருக்கிறார், அங்குதான் மன்ரோவின் கதைகளில் பலவும் பதிப்பிக்கப்படுகின்றன; McClelland & Stewartஐச் சேர்ந்த Douglas Gibson, Who Do You Think You Are?, என்ற 1978ஆம் ஆண்டு தொகுப்புக்குப்பின் அவரது கனடிய பதிப்பாசிரியராக இருக்கிறார், மன்ரோவின் நீண்ட கால அமெரிக்க பதிப்பாளர் Knopfல் Anne Close இருக்கிறார். (more…)

காப்பி எடிட்டரின் வேலை – சொற்தேர்வு, வாக்கிய அமைப்பு, தகவல்கள் – இவற்றைச் சரிபார்த்தல் குறித்த நேர்முகம் – ஈடன் லெபுகி

கைப்பிரதியின் படியைத் திருத்தும் காப்பி எடிட்டர்கள் சொற்தேர்வு, வாக்கிய அமைப்பு, தகவல்களின் துல்லியம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துபவர்கள். பொது எடிட்டரின் உதவியுடன் உள்ளடக்கம் தீர்மானிக்கப்பட்டபின் காப்பி எடிட்டர்களின் துணையுடன் படி திருத்தம் செய்யப்பட்டு ப்ரூப் ரீடரால் மெய்ப்பு பார்க்கப்படுகிறது. முன்னிலை ஆங்கில பதிப்பகங்கள் பலவற்றில் நீண்ட காலம் படிதிருத்தப் பதிப்பாசிரியராக பணியாற்றிய சுசன் ப்ராடனினி ப்ரெட்ஸின் நேர்முகம் இது. நேர்முகம் கண்டவர் ஈடன் லெபுகி. நன்றி- மில்லியன்ஸ் தளம்.

பதிப்புத்துறையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றியிருக்கிறீர்கள் – படிதிருத்த பதிப்பாசிரியர் மற்றும் பதிப்பாசிரியப் பணி சார்ந்த வேறு பல துறைகளிலும் பணிபுரிந்திருக்கிறீர்கள். இவற்றில் உங்களுக்குப் பிடித்த வேலை காப்பி எடிட்டிங் செய்வதுதான் என்று சொல்கிறீர்கள். ஏன்?

படைப்புகளைத் தருவித்துத் தரும் பதிப்பாசிரியராய் இருந்தபோது இயன்றதைவிட படி திருத்தம் செய்யும்போது என்னால் கைப்பிரதியை இன்னும் நெருக்கமாக அணுக முடிகிறது. இப்போது நான் ஒவ்வொரு சொல்லையும் வாசிக்கிறேன், ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்து வாக்கிய அமைப்பின் வடிவத்தைச் சரி பார்க்கிறேன். படி திருத்தும்போது வாக்கியங்களைக் கடந்து செல்லும் மேம்போக்கான வாசிப்பைச் செய்வதில்லை. கைப்பிரதியை முழுமையாய் பாதிக்கக்கூடிய திருத்தங்களைச் சொல்வதோ, அதன் தரம் குறித்து என் கருத்துகளைப் பகிர்வதோ ஒரு காப்பி எடிட்டராக என் வேலையல்ல. எனவே கதை என்ன என்பதில் என் முழு கவனத்தையும் செலுத்த முடிகிறது, மொழியைச் சொற்கள் மற்றும் வாக்கியங்களின் தளத்தில் கவனிக்கிறேன். வாசகனை மனதில் வைத்துக் கொண்டு வாசிப்பதால் அவருக்கு எது குழப்பமாகவோ சிக்கலாகவோ இருக்கக்கூடும் என்பதை முன்கூட்டியே கணிக்க முயற்சிக்கிறேன். தகவல்களையும் தேதிகளையும் சரி பார்க்கிறேன், பாத்திரங்களும் நிகழ்வுகளும் முரண்பாடுகளற்ற ஒழுங்கு கொண்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்கிறேன். என்னால் எவ்வளவு முழுமையாக வாசிக்க இயலுமோ அவ்வளவு முழுமையாக வாசிக்கிறேன். படைப்புகளைத் தருவித்துக் கொடுக்கும் காலத்தில் சாத்தியப்படாத ஆழமான புரிதல் எனக்கு இப்போது கிடைக்கிறது. (more…)

கவிதையைத் திருத்தி எழுதுதல் – எலியட்டும் பவுண்டும் – ஹ்யூ கென்னர்

(எலியட், பவுண்ட் மற்றும் பாழ்நிலம் கவிதையின் முக்கியத்துவம் குறித்து எம். டி. முத்துக்குமாரசாமி மிகச் சிறப்பான ஆவணப் பதிவொன்றைச் செய்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு சிறந்த கவிதையும்கூட பிறருடன் கலந்தாலோசித்து, முழுமையாகத் திருத்தி எழுதப்பட்ட ஒன்றுதான் என்பதை உணர்த்தும் நோக்கத்தில் ஹ்யூ கென்னர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி தமிழாக்கம் செய்யப்படுகிறது.)

எலியட்டை விட வயதில் மூத்த பவுண்ட் எலியட்டை விட எராளமாக எழுதிக் குவித்த பவுண்ட், எலியட்டையே கவி என்று கொண்டாடினார். நவீன காப்பியமான யுலிசஸ் எழுதிய ஜாய்ஸ், தத்துவ அறிஞரும் கடவுள் மறுப்பாளருமான ரஸ்ஸல், எலியட்டையே கவி என்றறிந்திருந்தனர். எதனால்? எலியட்டின் கவிதையிலே வாசகனின் அகத்தோடு ஆத்மார்த்தமாய் பேசக்கூடிய குரல் இருந்தது. முதலாம் உலகப்போருக்குப் பின் எழுதுகிற எலியட்டின் கவிதையில் பேசுகிற குரல் ஐரோப்பிய சமூக ஆன்மாவின் குரல். பாழ் நிலத்தில் அந்தக்குரல் தெள்ளத்தெளிவாய் Four quartets ஐ விட அணுக்கமாக வாசகனிடத்தே பேசுகிறது. அந்தக் குரல் உடைந்து போயிருக்கிறது; அவநம்பிக்கையுடனிருக்கிறது. கடவுள் கைவிட்டுவிட்ட குரல் அது. அல்லது கடவுளை கை விட்டு விட்டதால் பாதுகாப்பற்று அமைதியின்மையில் அலைவுறும் குரல். எதையாவது பற்றிக்கொள்ள முடியாதா என்று பரிதவித்து இலக்கிய பிரதிகளெங்கும் அலைந்து உகந்த வரிகளைத் தேடி அவைகளை கோர்த்து கோர்த்து சில சமயம் உரையாடலாய் சில சமயம் பிதற்றலாய் சில சமயம் தெருச்சொல்லாய் பிருகதாரண்ய உபநிடத்திலிருந்து சில வரிகளையும் சேர்த்துக்கொண்டு ஹிரானிமோ மீண்டும் பைத்தியமாகிவிட்டான் ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஒரு collage ஆக அமைகிறது. போருக்குப் பிந்ததைய சமூகத்தின் தீவிர நெருக்கடி ஒவ்வொரு பிரஜையின் மனத்திலிருக்க அந்த மனத்தின் குரலாகவே எலியட்டின் கவித்துவ குரல் பாழ் நிலத்தில் அந்தரங்க சுத்தியுடன் பேசுகிறது. எலியட்டின் ஆத்மார்த்தமாகப் பேசும் கவித்துவ குரலை பவுண்டின் மேதமையே உடனடியாக அடையாளம் காணுகிறது.

“ஆத்மார்த்தமாக பேசும் கவிக்குரல்கள்: பாரதியும் டி.எஸ்.எலியட்டும்”, எம். டி. முத்துக்குமாரசாமி

(more…)