
சூன்யத்தின் இசை
பெருமுற்றம் திறக்கப்பட்டு பொதுமக்கள் எல்லாரும் உள்ளே வர ஆர்ம்பித்திருக்கிறார்கள். கௌமுதி உற்சவம் நடக்கும்போது ராஜகிருகம் முழுவதும் மக்கள் கூட்டம் வந்து போய்க்கொண்டே இருக்கும்.
‘அமாத்யர் வருவதாக எதிர்பார்த்திருந்ந்தோம்’
வேகசர்மனை வரவேற்றபடிக்கு விஷ்ணுகுப்தர் சொல்கிறார். அதிகாரமையத்தின் ஆணிவேர் அமைச்சகத்தின் தலைமையிடத்தில்தான் இருக்கிறது என்பது அவருடைய பாடங்களில் ஒன்று.
கனமான கருத்த சரீரத்தின் மேல் போர்த்திய பட்டு சீலையுடனும், முத்துச்சரங்கள் தைத்த சரிகை பாகை பறைசாற்றும் அதிகாரதோரணையோடும், சபாமண்டபத்தில் நுழைந்த வேகசர்மன், விஷ்ணுகுப்தரின் முகமனுக்கு சிரந்தாழ்த்தி பதில் முகமன் செய்துவிட்டு, சூரசேன வம்சத்தின் பராக்கிரமங்களை எடுத்துரைக்கும் வாழ்த்துகளைக் கூறி மகதத்தின் அரசவைக்கு வந்தனம் கூறுகிறான். யவனர்களை புறம்காட்டிய பர்வதவர்த்தனின் புகழ் பெருமதிப்புடன் எட்டுதிக்கும் பரவியிருந்தது. அவன் பின்னால் அணிவகுத்து நின்ற தூதுக்குழுவின் முகப்பில் பாசரின் வர்ணனைகள் மெய்யாகி வந்து நின்றது போல் இருக்கிறாள் வாசவதத்தை. அதுவரை அபிநயத்தில் லயித்திருந்த சபை நடுவே, புத்துருக் கொண்டு காப்பியத்திலிருந்து கிளம்பி வந்தது போல் நின்றிருக்கிறாள். (more…)

