பெல்லந்தூர் ஃபளை ஓவர் சம்பவம்- கதை எழுதிய கதையைச் சொல்கிறார் சிகந்தர்வாசி–
சமீபத்தில் திருப்பதி சென்றிருந்தேன். அங்கு ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
ஒருவன் நாங்கள் போய்க் கொண்டிருந்த ஆட்டோ முன்பு வந்து ஏதோ கத்தினான். ஆட்டோ டிரைவர் சற்று முன் சென்று நிறுத்திவிட்டு அவன் வருவான் என்று திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவன் வரவில்லை. நாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்றோம்.
இரண்டு நாட்களில் அந்தச் சம்பவம் கதையாகி வர வேண்டிய இடத்துக்கு வந்து விட்டது.