புலரி

சிகந்தர்வாசி

கடற்கரையோரம் உட்கார்ந்துக்கொண்டு
அவன் கால் தடங்களை பார்க்கிறான்

சம்ஸார சாகரத்தில் ஒரு துளி ரத்தம் போல்
நீர் மேல் காலைச் சூரியன்

கண்ணுக்கு தெரியாத இலக்கை
நோக்கிப் பறக்கும் ஒற்றைப் பறவை

அவன் எழுந்து நடக்கிறான்

காலதேவன் மெல்லிய காற்றாய்
கால் தடங்களை அழிக்கத் துவங்குகிறான்

கிழக்கு வெளுக்கிறது

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.