நெடுமரம்

ஸ்ரீதர் நாராயணன் 

 

tree-life-18184847

என் வழியில் நின்று கொண்டிருக்கும்
நெடுநெடுவன உயர்ந்திருக்கும் விருட்சம்.

இலைஇலையாக விரித்து
என்னைப் பற்றியிழுக்கிறது.
கிளைகிளையாகப் பற்றி
மேலேறுகிறேன்.
கணுக்கணுவாய் பிளந்து
கையில் எடுக்கிறேன்.
துகள்துகளாக்கி தொகுத்துக் கொள்கிறேன்.
செதில்செதிலாக சிதறடித்து
சேர்த்து எடுக்கிறேன்.

அள்ளிஅள்ளி உண்டு
ஆற்றல் பெருக்குகிறேன்.

நிமிர்ந்து எழுந்து வேரூன்றி
கிளைகள் பரப்பிக் காத்திருக்கிறேன்,
நீ கொண்டுவரும் கோடலிக்கென.

 

Picture courtesy: Deviant Art

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.