வெறும் சொல் – செல்வசங்கரன் கவிதை

கீழே என்பதற்கு இருக்கும் ஸ்திரத்தன்மை மேலேக்குக் கிடையாது
கீழே என்பதைப் போட்டால் அப்படியே கீழேயே கிடக்கும்
மேலே ஒரு கிளர்ச்சியான சொல்
அதனால் தான் பரந்து விரிந்த மணற்பரப்பை வியந்து பார்த்துக்
கிளம்புகிற சமயத்தில் என்ன செய்கிறது பார்ப்போமென
மேலே என்பதை அதற்கு மேலே வைத்து விட்டு வந்தேன்
மேலே என்றவுடன் கடற்கரை அந்தச் சொல்லுக்குக்
கீழே போய்க் கொண்டது
கால்களால் மணலை அளைந்தவாறு நடக்கும் போது
அவ்வளவு பெரிய மணற்பரப்பு ஒரு சின்ன சொல்லுக்குக் கீழேயிருந்தது
வினோதமாய் இருந்தது
அத்தனை பெரிய மணல் வெளியை இயல்பிற்கு கொண்டுவர எண்ணி
மேலேயை திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென முயலுகையில்
அருகே ஒரு எச்சரிக்கை பலகை கீழிருந்து மேல் நோக்கி முளைத்திருந்தது
அதை விட மேலே போலீஸார் அமருகின்ற கண்காணிப்பு கோபுரம்
நீண்டிருந்தது
அதையும் விட மேலே சிவப்பு கலரில் ஒரு பலூன் மிதந்தது
அதற்கும் மேலே பறவைக் கூட்டமொன்று வலசை போனது
கடலின் பிரமாண்டம் படுக்கை வசத்தில் இருந்தபடியால் அப்பொழுது
கீழேக்கு மேலே எளிதாக வைத்துவிட்டேன்
இது அது மாதிரி இல்லை
மேலேயென்று எழுதுவது போல இட வலமாக கூட்டிப் போகுமென்றால்
ஏமாந்துவிடுவோம்
மேலே மேலேயென அடுக்கி அப்படியே மேலேயே கூட்டிப் போகிறது
வெறும் சொற்களால் தான் கட்டுவது ஆனாலும்
கட்ட கட்ட அந்தரத்தில் குத்து வசமாக எழும்புவதென்னவோ
ஒரு பேனிக் வே

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.