பாமரம்

பானுமதி ந 

என் வீட்டருகே ஒரு மாமரம்
கீழ்க் கிளைகளில் கொத்துக் காய்கள்
மேலே வாசம் வீசி குறும் பூக்கள்
பட்டுச் சிறகுடன் அமரும் கிளிகள்
பதினாலாம் நாள் இரவில்
செய்தி என்னவென்றேன் மரத்திடம்
சிறகுகள் சுமப்பது பல்லுயிரின் சாரம்
இடம் வலமென அசைவது மகிழ்ச்சி
வல இடமென அசைவது துயரம்
பறக்கும் துடுப்புகள் பாரமென ஆகும்
பறத்தலும் அமைதலும் காலத்தின் கடன்
நிலைத்தல் எதிலென அலைவதும் கடன்
இயல்பென அதைப் பற்றுதல் எது
இயலாமையின் வெஞ்சிரிப்பு தானது

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.