Author: பதாகை

தமிழகம் கண்ட காந்தியர்கள் – பாவண்ணனின் ‘சத்தியத்தின் ஆட்சி’ நூல் குறித்து எஸ்.ஜெயஸ்ரீ

இன்று நம்மில் பல பேர், சுற்றுலா செல்லத் திட்டமிட்டால், வெளி நாடுகளோ, வெளி மாநிலங்களோ செல்லவே விரும்புகிறோம். நம் மாநிலத்திலேயே பார்க்காத இடங்கள் எத்தனையோ இருக்கிறதே என்று நினைப்பதேயில்லை. எந்த ஊரில் இருக்கும் கோவில்களூக்கோ சென்று வருவோம். அவரவர் சொந்த ஊரிலோ, அல்லது அருகிலோ இருக்கும் கோவில்களுக்குச் சென்று தரிசிக்க வேண்டும் என்றோ, அந்தக் கோவிலிலும் அழகாக உள்ள சிற்பங்களை நின்று ரசிக்க வேண்டும் என்றோ தோன்றுவதேயில்லை. நாம் இங்குதானே இருக்கிறோம்; பார்த்துக் கொள்ளலாம் என்ற மனோபாவமோ அல்லது உள்ளூர் பற்றிய ஒரு அலட்சிய மனப்பான்மையோ என்று பிரித்தறிய முடிவதில்லை. அது போல அண்ணல் காந்தியடிகள் பற்றி நமக்கெல்லாம் தெரியும். காந்தி தேசப் பிதா என்று தெரியும். அதை விட்டால், கோகலே, ..சி. பாரதி என்று மிகப் பிரபலமான தலைவர்கள் பற்றி மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறோம். காந்தியின் கொள்கைகள் வெற்றி பெற்றது, அவரது அற வழி, சத்தியாக்கிரகப் போரே என்று சொல்கிறோம். ஆனால், காந்தியின் அற வழிப் போராட்டத் திட்டங்கள் இந்திய நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவி செயல்படுத்தப்பட்டதற்கு எத்தனையோ மாபெரும் மனிதர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் அப்படியே.காந்தியக் கொள்கைகளை இம்மியளவும் பிசகாமல் சுவீகரித்துக் கொண்டு செயல்படுத்தியிருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் கூட அதிக வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறது.அப்படி செயல்படுத்தியவர்கள் பற்றித் தெரிந்து கொண்டால் கூட அதை ஒரு சாதாரண செய்தியாகக கடந்து போகிறோம். ஆனால், அவர்கள் அந்தந்தப் பகுதியில் இயக்கங்களைக் கட்டியிராவிட்டால், சுதந்திர வேட்கை நாடு முழுவதும் பரவுவதற்கு வாய்ப்பே இருந்திருக்காது. அதோடு, காந்தியின் கொள்கைகளான, கிராம சுயராஜ்ஜியம், மது விலக்கு, அந்நியத் துணி பகிஷ்கரிப்பு, சத்தியாக்கிரகம் போன்றவை நாட்டின் மூலை முடுக்குகளில் பரவியிருக்காது. அப்படிப்பட்ட ஆளுமைகளை எல்லோர்க்கும் அறிமுகப்படுத்தும் உயரிய நோக்கத்தோடு, பாவண்ணன் அவர்கள், அத்தகையோரைப் பற்றிய குறிப்புகளையும், ஆவணங்களையும், புத்தகக் குறிப்புகளையும் தேடித் தேடிப் படித்து, அதன் சாராம்சத்தைப் பிழிந்து சிறிய கட்டுரைகளாக எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே சமீபத்தில் வெளி வந்துள்ள அவரது “ சத்தியத்தின் ஆட்சி “ என்ற புத்தகம்.

இந்தத் தொகுப்பை எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்ட காரணத்தை பாவண்ணன் அழகாக முன்னுரையில் சொல்லியிருக்கிறார். அதுவே ஒரு கட்டுரையின் சுவாரசியத்தைக் கொடுக்கிறது. அவரது நண்பரும், எழுத்தளருமான விட்டல்ராவ், இவரோடு பகிர்ந்து கொண்ட சுவையான சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். சாவி இதழுக்காக மலர் தயாரிக்கும் பணியில் விட்டல்ராவுக்கும் ஒரு பங்கேற்பு கிடைத்தபோது, அவர், சென்னையை மையமாக வைத்தே, ஆழ்வார்பேட்டை மலர், வண்ணாரப்பேட்டை மலர் என் தயாரிக்கலாமே என்ற ஆர்வத்தில், அந்தப் புகுதியில் வசிக்கின்ற சில குறிப்பிடத்தக்க மனிதர்களை சந்தித்து உரையாடி,மலருக்கான கட்டுரைகளைத் தயாரித்தபோது, அது நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்படவேயில்லை. மைசூர் மலர், உதகை மலர் என்று தயாரிப்பதிலேயே ஆர்வம் காட்டப்பட்டது. இந்தச் சிறு பொறியே பாவண்ணனை ஆங்காங்கே தோன்றி மறைந்த காந்தியர்களைப் பற்றித் தொகுக்க வேண்டும் என்ற மன எழுச்சியை அவருக்குக் கொடுத்தது.

காந்தி ஒரு சுதந்திரப் போராளி என்பவர் மட்டுமல்லர். அவர் ஒரு சத்குருவுக்கு ஒப்பானவர். சத்குரு என்பவர் யாருக்கும் எந்த போதனைகளையும் ஓதுவதில்லை. தன் வாழ்க்கை நடைமுறைகள் மூலம், தன் பண்புகள் மூலம், தன் அனுபவங்களிலிருந்து தன் வாழ்க்கையைத் தான் தகவமைத்துக் கொண்டு, தன் வாழ்க்கையே மற்றவர்களுக்குப் போதனையாக அமையும்படிச் செய்பவர். அவர்.வழியாக தங்கள் வாழ்க்கையின் திசையைத் தீர்மானித்துக் கொண்ட ஆளுமைகள் பலர். .வே.சாமிநாதய்யர் தமிழ் நூல்களைத் தேடித் தேடிச் சேகரித்தது போல, பாவண்ணன், காந்திய ஆளுமைகளத் தேடித் தேடிப் படித்து தொகுப்பாக்கியுள்ளார்.

இந்தத் தொகுப்பில், பதினான்கு காந்திய ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள் உள்ளன. இவர்கள் அனைவரும் காந்தியை ஒரே ஒரு முறை சந்தித்தோ, கடிதத் தொடர்பு கொண்ட பிறகோ உடனே தங்களையும் அப்படி மாற்றிக் கொண்டு இந்த சமுதாய மாற்றத்திற்கும், சுதந்திரத்திற்கும் பாடுபட்டவர்களாகின்றனர்.

பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என்ற வார்த்தைகள் கூட அதிகம் புழங்காத அந்தக்காலத்தில்,பெரிய பணக்காரக் குடும்பத்திலிருந்து வெளிவந்து, போராடிய பெண் ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள் மூன்று இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. சௌந்திரம் அம்மா டி.வி.எஸ். குடும்பத்திலிருந்து வந்த பெண்மணி. அவருடைய இளமை வாழ்க்கை வெகு சீக்கிரமாகவே கருகி விட, அப்போதே அவர் காந்தியின் முன், மறுமணம் செய்து கொண்டார். காந்தியே அதை நடத்தி வைத்தார். காந்தியின் கொள்கையான கிராம சுயராஜ்ஜியம், சுய சார்பு இவற்றை நடைமுறப்படுத்தியதில் இவருக்கு பெரும்பங்குண்டு. பெண்களுக்குக் கைத்தொழில்கள் பயிற்சி மையங்களும், ஆரோக்கியத்தை சொல்லித்தரும் மையங்களும் என் கிட்டத்தட்ட அறுபது மையங்களை இவர் ஏற்படுத்தியிருக்கிறார். இவரது சேவைக்கு சாட்சியாக இன்றும் மதுரையில்,டி.சுப்பலாபுரத்தில் சௌந்திரம் காலனி இருப்பது பெருமைக்குரியது. காந்தியின் வழியைப் பின்பற்றுபவர்கள், நாட்டின் சேவையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்களே ஒழிய, தங்களுக்குப் பெருமை தேடிக் கொள்வதற்காக அல்ல அவருக்கு ஒரு சிலை நிறுவ ஒருவர் அனுமதி கேட்டபோது, அதை மறுத்ததோடு, அப்படி சிலை நிறுவினால், தான் அந்தச் சிலை முன்பாக அமர்ந்து உண்ணாவிரதமிருந்து உயிர் விடுவேன் என்றார். புகைப்படத்துக்காக குப்பை தள்ளுவது போல பாவனை செய்து, உடனே அந்த இடத்தில் தனக்கு சிலை நிறுவிக்கொள்ளும் காரியவாதத் தலைவர்கள் இருக்கும் இந்த நாட்டில், சௌந்திரம் போன்ற ஆளுமைகள் நினைந்து நினைந்து போற்றத் தகுந்தவர்கள்.

அது போலவே, கோதைநாயகி அம்மாள், அம்புஜம்மாள். இவர்கள் மூவருமே, ஏதோ சாப்பாட்டுக்கு வழி இல்லாமல், தேசிய சேவை என்ற பெயரில் காந்தியுடன் இணைந்தவர்கள் அல்லர். பெண்களுக்கென்று இயற்கையாக நகை, பணம் என்ற ஆசைகளை ஒதுக்கி, வீட்டில் அடைபட்டுக் கிடப்பதே நல்ல பெண்களுக்கு லட்சணம் என்ற கட்டுக்களையெல்லாம் உடைத்து, தம் பகட்டாடை, ஆபரணங்கள் துறந்து, வீதியில் இறங்கிப் போராடியதை மிகச் சாதாரண விஷயமாகத் தள்ளி விட்டுப் போக முடியாது. இந்தப் பெண்மணிகள், தங்கள் கல்வி எல்லாமே கிராமப்புற பெண்களுக்குப் பயன்படும் விதத்தில் காந்திய வழியில் ஆசிரமங்களை நிறுவியிருக்கிறார்கள். அதற்குத் தங்களுக்குச் சொந்தமான இடங்களையே பயன்படுத்தியிருக்கிறார்கள். மது ஒழிப்பு என்ற காந்தியின் கொள்கைகளச் செயலாற்ற இவர்கள் பெண்களைச் சேர்த்துக் கொண்டு, கள்ளுக் கடைகள் முன்னால் நின்று கொண்டு, கள்ளுக் கடைகளுக்குச் செல்வோரைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்தை செய்திருக்கிறார்கள். இதற்காக கள்ளுக்கடை உரிமையாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாயிருக்கிறார்கள். துணிக்கடைகளுக்கு முன்னால் நின்று கொண்டு அந்நியத் துணிகளைப் பகிஷ்கரிபோம் என்று போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அதற்காகச் சிறை சென்றிருக்கிறார்கள். அம்புஜம்மாள், தன்னிடம் இருந்த தங்க ஆபரணன்களை அப்படியே காந்தியின் தேசிய சேவைக்கு முழுவதுமாகக் கொடுத்து விட்டார். கோதைநாயகி அம்மாள், சிறந்த பேச்சாளராக இருந்ததோடு, நன்றாகப் பாடும் திறமையும் கொண்டிருந்தார். அவர், கதராடை, மது அருந்தாமை ஆகியவற்றை வலியுறுத்தி மேடைப் பேச்சுகள் பேச ஆரம்பிக்கும்போது, சுதந்திர உணர்வைத் தட்டி எழுப்பும் பாடல்களைப் பாடுவார்.காந்திக்கு மிகவும் பிடித்த குஜராத்திக் கவிஞர் நரசிங்க மேத்தா அவர்கள் எழுதிய வைஷ்ணவ ஜனதோ பாடலை, சங்கு சுப்பிரமணியன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்ததை, கோதைநாயகி அம்மாள் மேடை தோறும் பாடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

வேதரத்தினம் பற்றிய கட்டுரையில்,உப்புச் சத்தியாக்கிரக போராட்டத்தின்போது, வேதாரணயம் நோக்கிப் போகும் தொண்டர்களுக்கு ஆங்காங்கே மரங்களில் உணவுப் பொட்டலங்கள் கட்டித் தொங்க விட்டிருக்கும் என்ற தகவல் மிகவும் சுவாரசியமானது திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் நிலச்சுவான்தாரர்களிடமிருந்து நிலங்களைப் பெற்று ஏழைகளுக்கு வழங்கினார் .அது போல வேதாரண்யம் அருகில் புயல் தாக்கி, மக்கள் வீடு வாசலை இழந்து நின்றபோது, ராமகிருஷ்ணா மடத்தின் உதவியோடு அவர்களுக்கு வீடுகளைக் கட்டித் தந்தார். இவரோடு உப்புச் சத்தியாக்கிரக் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் நாராயணசாமி ஐயர். சுதந்திரப் போராட்டத்திற்காக தன் சொத்துகள் முழுவதையும் இழந்து விட்டார். 1945 ல், தன் இறுதிக்காலம் நெருங்கிவிட்டதாகக் கூறி, தன் இரு மகள்களையும் வேதரத்தினத்திடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியை வாசிக்கும்போது, இது சங்க காலத்தில் பாரி மகள்கள், கபிலரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது.

மற்ற ஆளுமைகளான தி.சே.சௌ.ராஜன், குமரப்பா, ராஜாஜி, மதுரை வைத்திய நாதய்யர், அவனாசிலிங்க செட்டியார் என்று ஒவ்வொருவரப் பற்றியும் வாசிக்கும்போது, சுதந்திரப் போராட்டத்தின் வீச்சு எப்படி இருந்தது என்பதை நம்மால் உண்ர்ந்து கொள்ள முடிகிறது. காந்தியர்கள் எப்படி ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மதுரை வைத்தியநாதய்யர், ஹரிஜன மேம்பாட்டுக்காவும், ஹரிஜனங்களும் ஆலயங்களுக்குள் செல்ல வேண்டும் போராட்டம் நடத்தும்போது, மாகாணப் பொறுப்பு வகிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததை ராஜாஜி அருமையாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஆலயப் பிரவேசச் சட்டம்,மது விலக்குச் சட்டம், விவசாயிகள் கடன் நிவாரணச் சட்டம் போன்றவற்றை இயற்றியிருக்கிறார். காந்தி தண்டி யாத்திரையை தொடங்கியபொழுது, ராஜாஜி, திருச்சி தி,சே.சௌ.ராஜன் வீட்டிலிருந்து வேதாரண்யம் நோக்கி தன் உப்புச் சத்தியாக்கிரக யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார். அதைப் போல, காந்தி சென்னைக்கு வரும்போதெல்லாம் தங்கும் இந்தியன் ரிவ்யூ பத்திரிகையின் ஆசிரியர் ஜி. நடேசன் வீட்டில்தான் கோ.சுவாமிநாதன், காந்தியைச் சந்தித்திருக்கிறார். நடேசன் தான், அம்புஜம்மாள் அவர்களின் தந்தையார் சீனிவாச ஐயங்காரின் வீட்டுக்கு காந்தியை விருந்துக்கு அழைத்து வந்திருக்கிறார். அங்குதான், அம்புஜம்மாள் காந்தியைச் சந்தித்ததும், மன மாற்றமும் நிகழ்ந்தது.

திருப்பூரைச் சேர்ந்த அவினாசிலிங்கம் கோவையில் குருகுல முறையில் ஒரு பள்ளியை நடத்தி வந்தார். காந்தி கோவைப் பகுதிக்கு வரும்போது அங்குதான் தங்குவார். அவினாசி, தமிழ்நாட்டில் காந்தி பயணிக்கும்போது அதிகமாக உடனிருந்திருக்கிறார்.அப்போது தான் கவனித்த சிலவற்றை காந்தியடிகள் பற்றிய குரிப்பாகக் குறித்து வைத்துள்ளார். ஒரு கூட்டம் முடித்து, மதிய உணவு சாப்பிட்டு ஆனவுடன், இலைகளை எடுத்தவர் அப்படியே சிதறலாக போட்டு விடுகிறார். காந்தி அவற்றையெடுத்து குழிக்குள் போட்டு சுத்தம் செய்தார்.இன்னொரு முறை, அவினாசி மழையில் சேற்றில் இறங்கி நடக்கத் தயங்கும்போது காந்தி அதில் இறங்கி நடந்து வருவதைக் கவனித்தார். அவருக்கு காந்தியைக் கூடவே இருந்து அவருடைய பழக்க வழக்கங்களை உற்றுக் கவனிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது

அது போல டங்கன் காந்தியைச் சந்திக்கும்போது, அவர்கள் நடந்து வரும் வழியில் பலர் மலம் கழித்துவிட்டுச் சென்றிருப்பார்கள். காந்தி சிறிதும் தயங்காமல், அவற்றை மண்ணில் தள்ளி புதைப்பார்.

தக்கர் பாபா, முழுக்க முழுக்க காந்தியின் ஹரிஜன சேவாவைக் கைக் கொண்டு வாழ்ந்தார். கோ. சுவாமிநாதன், கல்லூரி மாணவராகக் காந்தியடிகளைக் காண வந்தார். சென்னைக்கு காந்தி வரும்போதெல்லாம், அவருக்குக் கூடவே இருந்து ,கூட்டம் நடக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்வது, எழுதும்போது உடனிருந்து உதவி செய்வது என ஒரு சீடன், குருவுக்கு சேவை செய்வது போல செய்தார். ஆனால், கல்லூரி மாணவர்களில் ஆசிரமத்துக்கு அழைத்துப் போவதற்காக அவர் காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப் படவில்லை. தக்க தருணம் வரும்போது நானே அழிப்பேன் என காந்தியடிகள் கூறி விட்டார். காந்தியடிகள் மறைவு வரை அவருக்கு அழைப்பு வரவேயில்லை. காந்தியின் மறைவுக்குப் பிறகு, காந்தியடிகளின் கடிதங்கள், கட்டுரைகள், பேச்சுகள் என் எல்லாவற்றையும் தொகுக்கும் பணி அவருக்குக் கிடைத்தது. அப்போது அவருக்கு வயது 63. அதையே அவர் தனக்கு காந்தி கொடுத்த அழப்பாகவே எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக செய்தார். கிட்டத்தட்ட 50000 பக்கங்கள். ஆனால், அவருடைய அந்த அர்ப்பணிப்பு மிக்க வேலை மிகச் சரியாகக் கண்டு கொள்ளப்படவேயில்லை. காந்தியின் ஆக்கங்களை நூறு தொகுதிகளாகத் தொகுத்தவர் சுவாமிநாதன். நூறவது தொகுதியில் தொகுத்தவர்கள் பட்டியலில் அவருடைய பெயரும் பத்தோடு பதினொன்றாகச் சேர்க்கப்பட்டிருந்தது. அவ்வளவே. வெளியீட்டு விழாவில் எந்தத் தலைவரும் சுவாமிநாதன் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடவில்லை.தன் பெயரை ஒருபோதும் முன் வைத்துக் கொள்ள விரும்பாத தொண்டர் இவர். இது காந்திய சிந்தனைகளை தன் வாழ்க்கை முறையாகக் கைக் கொண்டவர்களால் மட்டுமே முடியும்.

லண்டனிலிருந்து மருத்துவம் பயின்று இந்தியா திரும்பிய தி.செ.சௌ. ராஜன், திருச்சி பகுதியில், கதர்ப்பிரச்சாரம்., மது ஒழிப்பு போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டதோடு, காங்கிரஸுக்கு உறுப்பினர்கள் சேர்ப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டார். அவரி சிறை வாழ்க்கையை அனுபவித்தபோது, சிறையில் பலருக்கு மலத் தொற்று ஏற்பட, இவர் மருத்துவராக இருந்ததால், தானே, பலருக்கும் மல மாதிரியை சோதிக்கும் பணியைச் செய்தார்.அதனால், அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது.அதனால், மருத்துவமனையில் சேர்ந்து சிக்கிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவரை, மருத்துவமனையில் வந்து பார்க்க வந்த மாகாண சிறை அதிகாரி அவர் செய்த சேவையைப் பற்றி பாராட்டாமல், உடனடியாக மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட உத்தரவிட்டார். இப்படி எந்த எதிர்பார்ப்புமில்லாமல், துன்பங்களை அனுபவித்த ராஜன் போன்றவர்கள் காந்தி என்ற அந்த ஈர்ப்பு மையத்தில் மட்டுமே நின்றிருந்தார்கள்.

இதைப்போலவே, இங்கிலாந்திலிருந்து வணிக நிர்வாகவியல் படித்து முடித்த இளைஞராக வந்த ஜே.சி.குமரப்பா, தான் எழுதிய பொருளாதாரக் கட்டுரைகளைக் காட்டுவதற்காக வந்தவர்தான். ஆனால், காந்தியால் ஈர்க்கப்பட்டு யங் இந்தியாவில் பல கட்டுரைகளை எழுதினார். இங்கிலாந்து அரசு கோடிக்கணக்கில் வரிப்பணத்தை வசூலித்துக் கொண்டு, இன்னும் இந்தியா, இங்கிலந்துக்குக் கடன் பட்டுள்ளது என் அறிவித்தது. குமரப்பா, இங்கிலாந்து, தன் போர்ச் செலவுக் கணக்கையெல்லாம் இதில் சேர்த்துள்ளது என்க் கண்டுபிடித்து அறிக்கை சமர்ப்பித்தார். அத்னால், அவர் சிறை செல்ல நேர்ந்தது. குமரப்பா, பொது நிதி மிகச் சரியாகக் கணக்கு வைக்கப்பட வேண்டும் என்பதிலும், நிதியைக் கையாள்வதிலும் மிகவும் கறாராக இருந்தார். பீகார் நிவாரணப்பணிகள், மற்றும் காந்தி திரட்டிய நிதியை கணக்கு வைத்துக் கொள்வது போன்ற பணிகளை அவர் மிகச் சரியாக செய்து வந்தார். கிராமியத் தொழில்கள், கால்நடைகளின் நல்வாழ்க்கை போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்தினார். இப்படி காந்தியின் அடியொற்றித் திறமையாக பணியாற்றியவர் குமரப்பா.

1928 ஆம் ஆண்டு காந்தியடிகள் இலங்கைக்குச் சென்றிருந்தார். அங்கு காந்தியால் கவரப்பட்ட ராஜகோபால், இந்தியா வந்தார். வைத்தியநாதய்யரின் பரிந்துரையின் பேரில் காந்தி ராஜகோபாலை ஆசிரமத்தில் சேர்த்துக் கொண்டார். அந்நியத் துணிகள் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். உப்புச்சத்தியாக்கிரகத்தில் பங்கெடுத்துக் கொண்ட பிறகு, நானூறு மைல்கள் நடைப்பயணமாகவே சென்னை வந்தார். வரும் வழியெல்லாம் மக்கள் சந்திப்பு பிரச்சாரங்களை நிகழ்த்தினார். இவர் தன் வரலாற்றுக் குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். அதில் காந்தியடிகள் கண்ணீர் விட்டு அழுத இரண்டு நிகழ்ச்சிகளைப் பதிவு செய்துள்ளார். புரட்சிகர இளைஞர் ஒருவர் சிறைக் கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆங்கிலேய அதிகாரி ஒருவரை சுடுவதற்குப் பதிலாக, வேறொரு அதிகாரியைச் சுட்டு விடுகிறார். இதை எதிர்த்து காநதி அகமதாபாத் காங்கிரஸ் கூட்டத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். யாரும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது அகிம்சைக் கொள்கைகளை தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கே புரிய வைக்க முடியவில்லையே என்று கண்ணீர் விட்டு காந்தி அழுதார்.

மற்றொன்று, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, எங்கு பார்த்தாலும் மத மோதல்கள். ஒரு சீக்கிய கிராமத்தினை பகைக் கும்பல் முற்றுகையிட்டு, அங்கிருந்த 74 இளம்பெண்களை மணமுடிக்கத் திட்டமிட்டனர். அந்தப் பெண்கள் குளித்து வருகிறோம் என்று சொல்லி சென்று, தண்ணீரில் மூழ்கி உயிர் விட்டனர்.உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரே ஒரு பெண்ணை சுசிலா நய்யார் உயிர் பிழைக்க வைத்தார். அப்போதும், காந்தி அகிம்சை வழிக் கொள்கைகளை யாருமே சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே என்று கண்ணீர் விட்டு அழுதார்.

காந்தியோடு பழகும் வாய்ப்போ, இருக்கும் வாய்ப்போ கிடைக்கப் பெற்றவர்கள், தன்னெழுச்சியாக அவரைப் போல தாங்களும் மாறி விடுகிறார்கள். அது அவரது ஆளுமையின் பலத்தையே காட்டுகிறது.அவினாசிலிங்கம், காந்தியுடனான தன் அனுபவங்களை, :நான் கண்ட மகாத்மா” என்று ஒரு நூலாகத் தொகுத்துள்ளார். அதில் குறிப்பிடுகிறார்: அவரிடம் பேசும் விஷயங்களை விட, அவர் நம் மீது காட்டும் அன்பும்,அதன் வழியாக நம் மனத்தில் உருவாகும் எழுச்சியும் மிகமிக முக்கியமானவை. அவரிடம் சென்று வரும் ஒவ்வொரு முறையும், உயர்ந்த லட்சியங்களப் பின்பற்றும் மனவலிமை தோன்றுகிறது.உயர்வான செயல்களில் நம்பிக்கை பிறக்கிறது. சோர்வு அகன்று விடுகிறது. வெறுப்பு மறைந்து விடுகிறது எல்லாவற்றுக்கும் மேலாகநாமும் உயர்ந்த செயல்களைச் செய்து சாதிக்க முடியும் என்கிற எண்ணமும் துணிச்சலும் உருவாகிறது. அதுதான் காந்தியடிகளிடம் இருக்கும் சக்தி அது நம்மையும் அறியாமல் நம்மை உயர்த்துகிறது” என்று குறிப்பிடுகிறார். அவினாசி குறிப்பிட்டுள்ள இந்த வரிகளே காந்தி எப்படி ஒரு காந்த விசையாக இருந்து தன்பால் தொண்டர்களை ஈர்த்திருக்கிறார் என்பதை நமக்கு புரிய வைக்கும்.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆளுமைகள் பற்றிய புத்தகங்களைத் தேடி எடுத்து பாவண்ணன் தொகுத்துள்ளதை வாசித்து இப்படி பல தகவல்களப் பெற்றுக் கொள்ள முடிகிறது. புத்தகங்களையே வாசிக்கும்ஆவல் எழுகிறது. ஒரு சில கட்டுரைகளில் மட்டுமே புத்தகங்களின் பெயர் கிடைக்கின்றன..

இப்படி வெளியில் அறியப்படாத ஆளுமைகளை தெரிய வைப்பதில் ஈடுபட்டிருக்கும் பாவண்ணன் பாராட்டுக்குரியவர். ஒரு கட்டுரை எழுத அவர் எத்தனை நூறு, ஆயிரம் பக்கங்கள் படித்திருக்க வேண்டும் என்ற மலைப்பு எழுகிறது. அடுத்த தொகுதியையும் கொண்டு வரப்போவதாக முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். பாவண்ணன், எப்போதுமே, தான் படித்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள அதிக விருப்பமுள்ளவர். தனக்குப் பிடித்த கதைகள், நாவல்கள், கவிதைகள், நல்ல சினிமாக்கள், நல்ல ஓவியங்கள், நல்ல இசை என பலவற்றைப் பற்றியும் கட்டுரைகளாகவும்,, தொகுப்புகளாகவும் கொண்டு வந்திருக்கிறார். அந்த வரிசையில் இப்போது இந்தத் தொகுப்பு. பல தலைவர்கள் பற்றிக் கூட தெரிந்து கொள்ளாத, கொள்ள முடியாத, இருட்டடிப்பு செய்யப்படுகிற இன்றைய சூழலில், தேடித் தேடி அவர் காந்திய ஆளுமைகள் பற்றி தொகுத்திருப்பது மிகுந்த போற்றுதலுக்குரிய செயல்.

சிறப்பான முறையில் வெளியிட்டிருக்கும் சந்தியா பதிப்பகத்தினர் பாராட்டுக்குரியவர்கள். அட்டை வடிவமைப்பு சிறப்பு. அட்டையில் பதிதிருக்கும் முகங்களை அந்தந்தக் கட்டுரையின் தலைப்பிலும் பதித்திருந்தால் புரிதலுக்கு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அது போல கட்டுரைத்தலைப்புகளில் அடைப்புக் குறிக்குள் எந்த தலைவர் பற்றியது என்ற பெயரையும் போட்டிருக்கலாம். புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது காந்தியக் கொள்கைகளின் மீது பற்று ஏற்படுவது உறுதி.

 

( சத்தியத்தின் ஆட்சிஆசிரியர்: பாவண்ணன்வெளியீடு : சந்தியா பதிப்பகம், விலை: ரூ. 175/- பக்கங்கள்;176)

சுற்றுலா – ராம்பிரசாத் சிறுகதை

நான் ஒரு முறை ஆழ மூச்சிழுத்து விட்டேன். அது எனக்கு தேவையே இல்லை எனினும், நானே என்னை ஒரு அந்நிய மண்ணில் வேறுபடுத்திக் காட்ட விரும்பவில்லை என்பதால் அதை அவ்வப்போது நேரம் பார்த்துச் செய்ய வேண்டி இருந்தது.

பிறகு நான் அந்த பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தை அண்டினேன். அங்கு ஊரே கூடி இருந்தது. ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்தது அந்தப் பள்ளிக்கூடம். கடந்து போகும் மேகங்கள் அந்த மலையின் இடுப்பைத்தான் தொட முடிந்தது. அத்தனை உயரம் அந்த மலை. இருப்பினும் ஜவ்வாது மலையின் உச்சி பனிக்குல்லாய் உடுத்தியிருக்கவில்லை. இந்த கிரகத்தின் இந்தப்பகுதி பூமத்திய ரேகைக்கு வெகு கீழே அமைந்திருப்பதால் அப்படி இருக்கலாமென்று தோன்றியது.

இன்னும் இரவு கனிந்திருக்கவில்லை. நிலாவொளி அந்த இடத்தில் வெளிச்சமூட்டியிருந்தது. விளக்கு வெளிச்சப்புள்ளிகளால் பண்டிகைக்கென அலங்காரப்படுத்தப்பட்டிருந்த அந்த இடம் ஒரு அழகான ஆயில் பெயிண்டிங் போலிருந்தது. மேடை நாடகம் துவங்க இன்னும் நேரமிருந்தது. அங்கே கூடியிருந்தவர்களை பொழுதுபோக்குவிக்கும் நோக்கில் கரகாட்டம் என்றொரு கலாச்சார நடனம் நடந்தேறிக்கொண்டிருந்தது.

அங்கே கூடியிருந்த குழந்தைகளை, அளவில் அத்தனை பெரியதாக இல்லாத ரங்கராட்டினம் ஒன்று மேலும் கீழுமாக ஒரு வட்டப்பாதையில் நகர்ந்து விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தது. சக்கர வண்டிகளில் அமைக்கப்பட்டிருந்த நடமாடும் கடைகளில் கையால் செய்யப்பட்ட இனிப்புகள் விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. அவைகள் சற்றே வினோதமான கடைகள். நான்கு மறுங்கிலும் சைக்கிள் சக்கரங்களால் தாங்கி நிறுத்தப்பட்டிருக்கும் இரும்புக்கூடொன்றின் மேல் மரப்பலகைகளால் அமைக்கப்பட்ட தட்டி அது. அதன் மீது லாந்தர் ஒன்று வெளிச்சம் கூட்ட வைக்கப்பட்டிருந்தது. இந்த லாந்தர்களிலிருந்து வெளிப்படும் குறைவான வெளிச்சம் அந்த ஆரோக்கியமற்ற இனிப்புகளை விற்றுவிட உதவியது. நான் அந்த உணவுகளைச்சுற்றிலும் நிறைய ஈக்கள் இருக்கப் பார்த்தேன். ஆயினும், மெல்லிய வலை போன்ற துணியால் செய்யப்பட்ட குடையால் அந்த இனிப்புகள் ஈக்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டிருந்தன.

நான் அந்த கடைகளினூடே, அவைகளைச்சுற்றிலும் சிறு சிறு குழுக்களாய் நின்றுகொண்டிருந்த மக்களைக் கடந்து நடந்தேன். நான் பூமி ஆண்கள் குறித்து கேள்வியுற்றிருக்கிறேன். என் போன்றவர்களுக்கு பூமி கிரகம் ஒரு நல்ல சுற்றுலாத்தளம். என் போன்று சிலர் தெற்காசிய பகுதிகளில் சுற்றுலா பயணப்பட்டிருக்கிறார்கள். வேறு சிலர் ரஷ்ஷியாவுக்கும் கூட சென்றிருக்கிறார்கள். பூமி மனிதர்கள் அழகானவர்கள் என்று கேள்வியுற்றிருக்கிறேன். இந்த பூமி கிரகம் சிலிக்கானால் உருவானது, இங்குள்ள மனிதர்கள் கார்பனால் உருவானவர்கள்.

சில காரணங்களால், பிரபஞ்சத்தில் உள்ள உயிர்கள் உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட பிற கிரகங்களில் உள்ள உயிர்களுள் எதுவும் பூமி மனிதர்கள் போல் அழகானவைகளாக இல்லை. இது தான் பிற கிரகங்களிலிருந்து பூமி கிரகத்தை பிரத்தியேகமானதாக, தனிச்சிறப்புமிக்கதாக ஆக்குகிறது. அதனால் தான் எங்களைப்போன்றவர்களுக்கு பூமி கிரகம் ஆகச்சிறந்த சுற்றுலாத் தளமாகவும் இருக்கிறது.

தெற்காசியாவின் இந்தப்பகுதியில் ஆண்கள் சற்று கருப்பாக இருந்தாலும், நிலாவின் சன்னமான ஒளியில் அவர்களின் தோல் மின்னுகிறது. நான் பூமிக்கு வருவதற்கு முன்பே இவர்களை பார்த்திருக்கிறேன். எங்கள் கிரகத்தில், சில குறிப்பிட்ட சமூக இடங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பிற கிரகங்களுக்கு பயணிக்க முடியும். அவர்களே பூமிக்கு வந்து, பூமியின் சுகங்களை அனுபவித்துவிட்டு திரும்பியிருக்கின்றனர். சிலர் ஒரு படி மேலே போய், தங்கள் மரபணுக்களைக் கொண்டு பூமிப்பெண்களின் மரபணுக்களை வைத்து கலப்பினங்களை உருவாக்க முயன்றிருக்கின்றனர். அந்தக் குழந்தைகள் பூமி கிரகத்தின் தன்மைகளோடு தங்களை பொருத்திக்கொள்ள இயலாமல் மரணித்தும் இருக்கின்றன. அவைகளை பூமியிலேயே புதைத்துவிட்டு அவர்கள் திரும்பியுமிருக்கிறார்கள்.

கருப்புச் சந்தையில் இது போன்ற அனுபவங்களை நாங்கள் பெற்று, பார்த்து ரசித்திருக்கிறோம். அவைகளிலிருந்து பூமியில் மனிதர்கள் வெவ்வேறு நிறங்களில் இருக்கிறார்கள் என்று கண்டுகொண்டோம். அதிலும் பூமிப் பெண்களின் தேகம் அத்தனை வசீகரமாக இருக்கிறது. பூமிப்பெண்ணின் குலுங்கும் ஸ்தனங்களில் எந்த கிரகவாசியும் சொக்கிப்போவான். கார்பன் சார்ந்த சிலிக்கானை அடிப்படையாகக்கொண்ட உடல்கள் பிரபஞ்சத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருப்பினும் பூமி கிரகத்தில் இருப்பது போல் வேறெங்கும் இத்தனை வசீகரமாக இல்லை.

எனக்கு குறிப்பாக கருப்பான, அதே நேரம் புஜங்கள் உயர்ந்த, மார்பு விடைத்த ஆண்களைத்தான் பிடிக்கிறது.

பூமி கிரகத்திற்கு வர திட்டமிடுகையில் தெற்காசியா, தெற்காப்பிரிக்கா இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டி இருந்தது. நான் தெற்காசியாவை தேர்வு செய்தேன். அதற்கு காரணம் இருந்தது. இங்குதான் நறுமணப்பொருட்களும், மூலிகைகளும் விளையக்கூடிய மண் இருந்தது. ஆம். பூமிக் கிரகத்தில் எல்லாமும் எல்லா இடத்திலும் விளைவதில்லையாம். நான் இந்த மூலிகைகள் குறித்து கேள்வியுற்றிருக்கிறேன். இந்த மூலிகைகள் இந்த கிரகத்து ஜீவராசிகளை என்னவெல்லாம் செய்கின்றன என்பதை பார்க்க ஆர்வமாக இருந்தேன்.

எனக்கு பூமி மனிதர்களிடம் மிகவும் பிடித்த விஷயம், அவர்களின் அப்பாவித்தனம் தான். நூற்றாண்டுகளாக நாங்கள் அவர்களை சந்திக்க தொடர்ந்து பூமிக்கு வருகிறோம், ஆயினும் அவர்களுக்கு நாங்கள் இன்னமும் பேய்கள் தான். பிசாசு, பிடாரி என்று பல்வேறு பெயர்களை எங்களுக்கு வைத்திருக்கிறார்கள் அவர்கள். அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள அனுப்பிய அத்தனை செய்திகளையும் நாங்கள் புறக்கணித்திருக்கிறோம். நூற்றுக்கு தொண்ணூறு சதவிகித பூமி மனிதர்களுக்கு இன்னொரு கிரகம் இருக்கலாம் என்பது குறித்த எந்த பிரஞையும் இல்லை. அவர்கள் பெண்களுடனும், மதுவுடனுமே தங்கள் காலத்தை போக்குபவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். அது எப்படி அவர்களுக்கு சாத்தியமாகிறது என்று நான் வியந்திருக்கிறேன்.

அவர்களின் தர்க்கம் என்னானது? அவர்களின் எதையும் தெரிந்துகொள்ளத்தூண்டும் ஆர்வம் என்னானது?

எங்களைப்பற்றி பூமி கிரகத்தில் யாருக்கும் தெரியவில்லை என்பது முழுக்க உண்மையும் இல்லை. சிலருக்கு எங்கள் மேல் சந்தேகங்கள் இருக்கிறது. சிலர் எங்களை பார்த்தும் இருக்கிறார்கள். அதாவது, எங்களை என்றால், எங்களை அல்ல, எங்கள் நிழல்களை. ஆனால் அவைகள் எல்லாம் ஐயங்கள் தான். ஐயங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை. அவர்களுக்கு இரவுகளில் வரும் பற்பல கனவுகளுக்கும் ஐயங்களுக்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கப்போவதில்லை. நாங்கள் எதையுமே செய்ய வேண்டியதில்லை. அவர்களே அவர்களுக்கு தெரிந்ததை வைத்து தங்களைத் தாங்களே குழப்பிக்கொள்வார்கள். ஆகையால், அவர்களை அவர்களின் ஐயங்களை நாங்கள் பொருட்படுத்தியதே இல்லை.

நான் ஒரு புடவையும், ரவிக்கையும் அணிந்திருந்தேன். அது அவர்கள் என்னை தங்களில் ஒருவராக பார்க்க வேண்டித்தான். அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் போல என்னை நான் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டிய என்னுடைய பிரயத்தனங்கள் சற்று சுலபமாகத்தான் இருந்தது. ஒரு ஒன்பது கஜ புடவையை என்னைச் சுற்றி, சுற்றிக்கொண்டாலே போதுமானது.

என் கூந்தலில் ஜாதி மல்லிப்பூ சரத்தை சூடியிருந்தேன். இந்த பூவின் வாசம் ஆண்களை ஈர்க்குமாம். இந்தப் பகுதியில் புடவைகள் தான் பெண்களுக்கான மிகச்சிறந்த ஆடையாக கருதப்படுகிறது. இங்குள்ள ஆண்கள் புடவை அணிந்த பெண்களை, அதில் தெரியும் அவளில் சதைத்திரளை, வளைவுகளை, ஏற்ற இறக்கங்களை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள்…. இல்லையில்லை.. வெறிக்கிறார்கள்.. இந்தப் பெண்கள் குனிய நேர்கையிலெல்லாம் இந்த ஆண்கள் அவளின் மார்புப்பகுதியில் எதையோ தேடுகிறார்கள். இந்த நடத்தையெல்லாம் எனக்கு கேளிக்கையாக, நகைப்பைத் தருவனவாக இருந்தது.

இந்த கிரகத்தின் பிற பகுதிகளின் பெண்கள் மிகக்குறைவாகத்தான் ஆடைகள் அணிகிறார்கள். இதிலிருந்து நான் ஒன்றை புரிந்துகொண்டேன். பூமி கிரகத்தின் இந்தப் பகுதியில் , ஒன்று எத்தனை மறைக்கப்படுகிறதோ அத்தனைக்கு எதிராளியின் ஆர்வத்தை தூண்டுகிறது என்பதுதான்.

எனக்கு நேரமிருக்கவில்லை என்பதால் நான் மார்புக்கச்சை அணியவில்லை. நாளை, நான் என் கிரகத்திற்கு திரும்ப வேண்டிய நாள். நான் சற்றே உயரமான, இரட்டை நாடி உடல் ஒன்றை தேர்வு செய்து அதை என் உடலாக்கியிருந்தேன். அந்த உடலில் கண்கள் பெரிதாகவும், இதழ்கள் சற்றே தடித்தும், முகம் வட்டமாகவும், தோள்கள் அகண்டும், மார்பு திரண்டு விம்மியும், இடை சிறுத்தும், பிருஷ்டம் பெறுத்தும், அடிவயிறு உள்வாங்கியும், தொடைகளில் சதைத்திரள் கூடியும் இருந்தது. இந்த கிரகத்திலிருக்கும் ஆண்கள் இப்படிப்பட்ட உடலென்றால் பித்தாகிவிடுவார்கள் என்று கேள்வியுற்றிருந்தேன்.

நான் அந்த திருவிழா பூண்ட இடத்தினூடே நடந்து சென்றபோது ஆண்கள் என்னை வெறிப்பது தெரிந்தது. பிற பெண்கள் மார்புக்கச்சை அணிந்திருந்தார்கள். தங்கள் தோழிகளுடன் சின்னஞ்சிறு குழுக்களாக நின்றிருந்தார்கள். எனக்கு யாரையும் தெரியாது என்பதால் அந்தத் திடலில் எங்கு நின்று பார்த்தால் அந்த இடம் முழுமையும் தெரியுமோ அங்கு நான் தனியாக நின்றுகொண்டேன். எனக்கு பின்னால் மலை அடிவாரத்துக்கு இட்டுச்செல்லும் காடு இருந்தது.

சில நாழிகைகள் கழித்து என் உடலின் ஸ்தனங்கள் மீது சில ஆண்களின் கண் பார்வை படர்வதை நான் அவதானித்தேன். அவர்களின் பார்வைக் கோணத்தை அவதானித்ததில் அது என் உடலின் மார்பின் மீதும், பிருஷ்டத்தின் மீதும் மேய்வதை உணர முடிந்தது. அந்தக் காட்சி அவர்களுக்கு எப்படி இருக்குமென்று என்னால் ஊகிக்க முடிந்தது. அந்த காட்சியை அவர்களின் உடல் எப்படி மொழிபெயர்க்கிறது, எவ்விதம் அவர்களின் சுரப்பிகளை தூண்டிவிடுகிறது, எப்படி அவர்களின் உள் உடல் உறுப்புகள் ஒருங்கிணைந்து காமத்தின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி அவர்களை செலுத்துகிறது என்று நான் தெரிந்துகொள்ள விரும்பினேன்.

அவர்களின் பார்வையை நான் பார்த்தும் பாராமல் தொடர்ந்து அங்கேயே நின்றிருந்தேன். ஆனால், என்னை அவர்கள் தங்களின் மனதுக்குள் எப்படியெல்லாம் கற்பனை செய்திருப்பார்கள் என்று என்னால் கிரகிக்க முடிந்தது. அது ஒரு விசித்திரமான அனுபவம். போதை தரக்கூடிய ஒன்றுதான்.

அவர்கள் மூன்று பேராக இருந்தார்கள். அவர்களின் ஒருவன் என்னை நோக்கி நகர்ந்து வந்தான். அதை நான் எதிர்பார்த்தேன். ஏனெனில், ஏனைய பெண்கள் போல் நான் மார்புக்கச்சை அணிந்திருக்கவில்லை. தவிரவும், நான் அங்கே பெண்கள் கூட்டத்தில் ஒருத்தியாகவும் நிற்கவில்லை. தனித்திருந்தேன். அதை அவர்கள் அவதானித்திருக்க வேண்டும். தலை நிறைய மல்லிகைப்பூ. அடர்ந்த உதட்டுச்சாயம். பூமியின் இந்தப்பகுதியில் விலைமாதர்கள் இப்படித்தான் தோன்றுவார்களாம். அதை அப்படியே என் உடலில் பிரதிபலித்திருந்தேன். அது கச்சிதமாக வேலை செய்வதாகத் தோன்றியது.

என்னை நோக்கி வந்தவன் உயரமாக, ஒல்லியாக, அகண்ட தோள்களுடன், புஜங்களுடன் இருந்தான். மார்பு கட்டாக இருந்தது. கத்தியின் இதழ் போல வசீகரமாக இருந்தது. அவனுடைய சதைத்திரள் கூடிய தொடைகளை அவன் அணிந்திருந்த, காற்றில் விலகி படபடக்கும் லுங்கியினூடே என்னால் பார்க்க முடிந்தது. அதில் ரோமங்கள் இருந்தன. புழுதி லேசாக இருந்தது. உடல் வலு தேவைப்படும் ஒரு செயலை தொடர்ந்து செய்வதின் மூலமாக சதைகள் பக்கவாட்டில் ஒதுங்கி, முட்டிப்பகுதியில் ஒருங்கிணைந்து ஒரு விதமான வசீகரம் கூடி இருந்தது. அவனின் அடி வயிற்றுப்பகுதி உள்ளடங்கி இருந்தது. அவன் நடையில் இருந்த லேசான தள்ளாட்டம் அவன் மது அருந்தியிருக்கவேண்டும் என்று என்னை ஊகிக்கவைத்தது. அவனைத்தொடர்ந்து இன்னும் இருவர். மூவரின் நடையிலும் ஒரே விதமான தள்ளாட்டம்.

“நான் நடராஜ். நீ என்னை நட்டி என்று கூப்பிடலாம்” என்றான் முதலாவதாக வந்தவன் என்னை அண்டி.

“நான் கணேஷ். கன்ஸ் என்று கூப்பிடு”

“நான் வேந்தன். வெட்டி என்று கூப்பிட்டு என் தொழிலை உலகறியச்செய்யாதே”

கணேஷும், வேந்தனும் தொலைவிலிருந்தே உரக்கச் சொல்லி சிரிப்பூட்டினார்கள்.

“ஹாய்” என்று நான் பொதுவாகச் சொன்னேன்.

“நீ வெளியூரா?’ என்றான் நட்டி.

“ஆமாம்.. திருவிழா பார்க்க வந்தேன்” என்றேன்.

“எந்த ஊரு?” என்றான் நட்டி தொடர்ந்து.

நான் அதைப்பற்றியெல்லாம் பேசக்கூடாது என்று எனக்கு தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் தொடர்ந்து பூமிக்கு வந்து போக வேண்டுமானால், நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்பது குறித்து யாருக்கும் சொல்லக்கூடாது என்பது எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் விதிகளுள் ஒன்று.

“பக்கத்துலதான்” என்றேன் நட்டியிடம்.

அது அவனை ஆச்சர்யமூட்டியிருக்க வேண்டும். அவனது புருவங்கள் சுருங்கின. அவன் அதற்கு மேல் என் பூர்வீகம் குறித்து பேசாமல் இருந்தால் போதுமென்று இருந்தது.

நட்டி என் வலது கையை பிடித்தான். அவனது கரம் கரடு முரடாக இருந்தது. அவன் தொடர்ந்து காட்டுக்குள் நுழைந்தான். நான் ஒத்துழைத்தேன். உடன் நடந்தேன். லேசாக திரும்பிப் பார்த்தேன். பின்னால் வேந்தனும், கணேஷும் சற்று தொலைவில் நடந்து வந்துகொண்டிருந்தனர். நடையில் லேசான தள்ளாட்டம். திருவிழா கூட்டத்தின் இரைச்சல் மெல்ல மெல்ல தேய்ந்துகொண்டிருந்தது.

நட்டி ஒரு சின்னப் பையை காட்டினான். சன்னமான ஒளியில், என்னால் அது ஒரு ஆணுறை என்று பகுக்க முடிந்தது. அது அவனது உள்நோக்கத்தை எனக்கு உணர்த்தியது. நான் பூமியில் இருக்கும் காலகட்டத்தில் என்னை எவ்வித பூமத்திய நோயும் பீடித்துவிடக்கூடாது. அப்படி ஏதும் பீடித்துவிட்டால் நான் என் கிரகத்திற்கு திரும்பிப்போக முடியாது.

நடந்து நடந்து நாங்கள் வந்து சேர்ந்துவிட்டிருந்த இடத்தில் பறவைகளின் கீச்சுக்குரல்கள் மட்டுமே கேட்டது. நட்டி அவன் அணிந்திருந்த லுங்கியை கழற்றி தரையில் விரித்தான். காட்டின் தின்மையால் அங்கே இருளாக இருந்ததால் அந்த லுங்கிதான் அவன் அணிந்திருந்த ஆடைகளில் கடைசியா என்பது எனக்கு சரிவர ஊர்ஜிதமில்லாமல் இருந்தது. அங்கே ஒரு மங்கலான லாந்தராவது இருந்திருக்கலாம் என்று ஒரு கணம் தோன்றியது. அவன் அந்த சின்னப் பையைப் பிதுக்கி ஆணுறையை எடுத்து தன்னுறுப்பில் அணிவதை நான் பார்த்தேன்.

பின் அவன் என் கையை பிடித்து இழுத்தான். அவன் கால்களில் தடுக்கி நான் அவன் லுங்கியில் விழுந்தேன். அவன் என்னை வேண்டுமென்றே தான் தடுக்கிவிழ வைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது. தொடர்ந்து அவன் என் மீது விழுந்தான். பின் படந்தான். அவன் ஏதோ ஒரு அவசரத்தில் இருப்பது போல் பட்டது. எங்கள் இதழ்கள் தழுவின. எங்கள் காமத்தின் இந்தப் பகுதி குறித்து எனக்கு எவ்வித அறிவுருத்தலும் இல்லை.

அங்கும் இங்குமாய் தடவிப்பார்த்துவிட்டு, “நீ கன்னி கழியாதவளா?” என்றான் நட்டி.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆதலால் மத்திமமாக தலையசைத்தேன்.

அவன் என் மீது சுற்றிக்கிடந்த புடவையை அவிழ்த்தான். பின் என் ரவிக்கையை விலக்கினான். அவன் முகத்தை என் கழுத்தின் மீதும் மார்பின் மீதும் தேய்த்தான். அதில் ஒரு அவசரம் இருந்தது. அவன் விரல்கள் என் உடலெங்கும் ஊர்ந்தன. தடவின. ஆங்காங்கே கசக்கின. பிசைந்தன. அவனின் செய்கை எல்லாமும் எனக்குள் நகைப்பை உண்டாக்கின.

நானும் அவனுக்கு ஈடாக என் விரல்களை அவன் உடல் மீது செலுத்தினேன். அவனின் சருமம் உணர்ந்தேன். என் புற உடலின் சருமம் போன்றே அதுவும் இருந்தது. அவனின் எலும்புகளை உணர முடிந்தது. அவன் ஒல்லியான தோற்றத்துடன் இருப்பினும் மிகவும் கனமாக இருந்தான். அவனுடைய கைகள் என் புற உடலின் மார்புப்பகுதியிலும், பிருஷ்டத்திலும் அதிக கவனம் செலுத்தியது. சற்று நேரத்தில் வேந்தனும், கணேஷும் சேர்ந்து கொண்டார்கள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அவர்களை நான் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் வரவை நான் ஒரு தொந்திரவாகவே கருதினேன். கணேஷும், வேந்தனும் என் கால்களை வலுவாக அழுத்திப் பிடித்துக்கொண்டனர். நான் எதிர்க்க முற்பட்டேன். அப்போதுதான் அவர்களில் ஒருவன் என் முகத்தில் ஓங்கிக் குத்தினான். நான் அதை எதிர்பார்க்கவில்லை. நான் நினைவிழந்தது கூட எனக்கு நினைவிருக்கவில்லை.

எத்தனை நேரம் சுய நினைவற்று இருந்தேன் என்று நினைவில்லை. நான் எழுந்த போது, வேந்தன் என் கால்களை இறுக்கமாக பிடித்திருந்தான். நட்டியின் கையில் ஒரு நீளமான மரத்தாலான முனை ஒடுங்கப்பட்ட சிறிய கட்டை இருந்தது. தோராயமாக அது ஒரு பத்து இன்ச் நீளம் இருந்தது. அதை அவன் என் புற உடற்கூட்டின் துளையின் உள்ளே செலுத்தினான். அந்தத்துளை வெறும் ஒரு ஏற்பாடு மட்டுமே. அதன் நோக்கம், பூமிப்பெண்ணை உடல் அளவில் ஒத்திருப்பது மட்டுமே. அந்த துளையில் ஒரு பத்து இன்ச் நீளமுள்ள ஒரு பொருள் செலுத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பது என் அவதானமாக இருந்தது, அந்தத் துளை மேலும் ஆழமாக கிழிக்கப்பட்டாலொழிய.

என் புற உடற்கூட்டில் எதுவோ கிழியும் சத்தம் லேசாக மிக மிக சன்னமாக கேட்டது. சற்றைக்கெல்லாம் அந்த பொருளை உறுவிவிட்டு நட்டி என் மீது மீண்டும் விழுந்தான்.

பின் அவன் என் உடலை மூர்க்கமாக குலுங்கச்செய்தான். எனக்கு அவன் செய்தது பிடிக்கவில்லை. ஆனால் இப்போது இந்த நிகழ்வில் எனக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. நான் அதை அதன் போக்கிலேயே தான் இயங்கி அதிலிருந்து என்னை மீட்டுக்கொள்ள வேண்டும். சற்றைக்கெல்லாம் நான் கட்டுப்பாடிழந்தேன். என் புற உடற்கூட்டின் உள்ளே எதுவோ அன்னியமாக நுழைந்துவிட்டதைப்போல் உணர்ந்தேன்.

அது நடந்திருக்கக்கூடாது என்று மட்டும் எனக்கு ஊர்ஜிதமாகத்தான் தெரியும். என் புற உடற்கூடு என் உடலை பாதுகாக்கத்தான். என் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி, அவனை தள்ளிவிட்டு நான் எழுந்தேன். என்னை பலவந்தமாகப் பிடித்திருந்த அந்த இருவரும் அதிர்ந்து இரண்டடி தள்ளிப்போனார்கள். நட்டி என்னை ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்து பார்த்தான். நான் என் புற உடற்கூட்டின் மீது என் விரல்களை செலுத்தினேன். சற்று நேர திணறலுக்குப்பின் அந்த கிழிசலை நான் கண்டுபிடித்தேன்.

நட்டி என் அருகே மீண்டும் வந்து என்னை இறுக்கமாக பிடிக்கப்பார்த்தான். என் உடல் பலத்தையெல்லாம் ஒன்றுகூட்டி அவனை நான் தள்ளிவிட்டேன். என் போன்றவர்களின் உடல் தகுதியின் தரத்தில் அது ஒரு மூர்க்கமான உதறல். நான்கைந்து பூமி மனிதர்களின் பலம் ஒட்டுமொத்தமாக. அவன் பத்துப்பதினைந்து அடி தள்ளிப்போய் விழுந்தான். மற்ற இருவரும் என்னையும் நட்டியையும் மாறி மாறிப் பார்த்தார்கள். அவர்கள் முகத்தில் பீதி படர்ந்தது.

நட்டி பயன்படுத்திய ஆணுறை அங்கே கிடந்தது. அதை எடுத்துப்பார்த்தேன். திரவத்தின் பிசுபிசுப்பு அதில் இருந்தது. அதன் முனையில் லேசாக கிழிந்திருந்தது. என் புற உடற்கூட்டில் கிழிசல் நேர்ந்த இடத்தை தொட்டுப்பார்த்தேன். அங்கும் அதே பிசுபிசுப்பு. அந்த இடம் கல் போல் இருந்தது. அது நான் எதிர்பார்த்தது தான். அப்படித்தான் என் போன்றவர்களின் சருமம், அன்னிய திரவங்களை எதிர்கொள்ளும்.

சற்று நேரத்தில் நான் உடல் சுகவீனமாக உணர்ந்தேன். எது என் அசலான உடலை தீண்டியதோ அது என் உட்புற உறுப்புகளின் இயக்கங்களை சிதைக்கத்துவங்கியிருந்தது. அது ஒரு தொற்று தான். அந்த தொற்றோடு நான் என் கிரகத்திற்கு திரும்ப வாய்ப்பில்லை.

அவர்கள் மூவரும் இப்போது என்னை நோக்கி வந்தார்கள். நான் ஓட முயற்சித்தேன். அவர்கள் சற்று தொலைவில் என்னை பின் தொடர்ந்து ஓடி வந்தார்கள். நான் என் புற உடற்கூட்டை களைத்து கீழே வீசி அதன் மீது ஏறி நின்றுகொண்டேன். பின் திரும்பி அவர்கள் வருகிறார்களா என்று பார்த்தேன்.

“அவள் எங்கே போனாள்?” என்றான் நட்டி.

“தெரியலை. ஆனால் அதிக தொலைவு போயிருக்க முடியாது” என்றான் வேந்தன்.

அவர்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்தார்கள். என்னைத் தேடினார்கள். அவர்களில் கணேஷ் ஒரு சிகரெட் பெட்டியைத் திறக்க, ஆளுக்கொன்று எடுத்துக்கொண்டார்கள். பின் வேந்தன் அந்த சிகரெட்டுகளை பற்ற வைக்க, அந்த மெல்லிய ஒளியில் அவர்களின் முகங்களை நான் திருத்தமாகப் பார்த்தேன்.

“ஆளுக்கொரு திசையில தேடுவோம். யாரு அவளை பாத்தாலும் விசிலடிக்கணும்” என்றான் நட்டி.

“சோர்வா இருக்கு நட்டி. ” என்றான் வேந்தன். அவன் முகத்தில் களைப்பு அப்பிக்கிடந்தது.

“இந்தா.. இந்த பாறையில கொஞ்சம் நேரம் உக்காரு” என்றான் கணேஷ் என்னைக்காட்டி.

“நான் இங்க நிறைய தடவை வந்திருக்கேன். ஆனா, இந்தப் பாறையை பாத்தது இல்லையே” என்றான் வேந்தன்.

“எங்க மாமா சொல்வாறு. மலையிலேர்ந்து அப்பப்போ பாறை உருண்டு வருமாம்” என்றான் நட்டி.

சற்று நேரத்தில், புலி ஒன்று உறுமுவது கேட்டது. அது அவர்களை பீதியடையச் செய்திருக்க வேண்டும். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின் கிராமத்தை நோக்கி அவர்கள் ஓடினார்கள்.

அவர்கள் பார்வையிலிருந்து அகல, புலி ஒன்று என் மீது தாவி ஏறி கால்கள் பரப்பி அமர்ந்தது. தொலைவில், திருவிழாக் கோலம் பூண்ட திடலிலிருந்து லாந்தர் ஒளி தெரிந்தது. அந்த ஒளி, விண்வெளியில் என் கிரகத்திலிருந்து வெளிப்படும் ஒளியை ஒத்திருந்தது.

கண்ணாடியின் மிளிர்வு – கா.சிவா சிறுகதை

அம்மாவுடன் மலர்க்கொடி அத்தை வீட்டிற்கு சென்றபோது பத்துமணியாகிவிட்டது.சுற்றுச் சுவரையொட்டி வைக்கப்பட்டிருந்த பூத்திருந்த செம்பருத்தி  செடிகளுக்கு காலையில் ஊற்றிய நீரின் ஈரம்  காயாமல் இருந்த மண்ணில் இளஞ்சிவப்பு நிறத்திலிருந்த புழு தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு நகர ஆரம்பித்தது.  எனக்கு இங்கு  வர விருப்பமேயில்லை.இம்மாதிரியான நேரத்தில் யார் வீட்டிற்கும் செல்வதற்கு பிடிப்பதேயில்லை.இன்று ஊருக்கு கிளம்புகிறார்களாம்..பிறகு ஒரு மாதத்திற்கு மேலாகுமாம் வருவதற்கு, கேட்டுவிட்டு உடனே வந்துவிடலாம் என அம்மா, நச்சரித்தவுடன் வரவேண்டியதாகிவிட்டது.

வாசலோரம் கிடந்த காலணிகளைப் பார்த்தபோது  வேறு சிலரும் வந்திருப்பார்கள் எனத் தோன்றியது.எனக்குத்தான் தயக்கமாக இருந்தது.பத்து வருடங்களுக்குப்பின் வருவது கேதம் கேட்பதற்காகவா இருக்கவேண்டும்.கடைசியாக நான் வந்தது சிங்கப்பூர் செல்வதற்கு விடை பெற்றுச்செல்ல.அப்போது தேனம்மையை எனக்கு மணமுடித்துத் தருவார்கள் என நானும் என் குடும்பமும் நம்பிக்கொண்டிருந்த சமயம்.அவர்களுக்கும் விருப்பம் என்பதுபோலவே அவர்கள் நடவடிக்கைகளும் இருந்தன. அத்தை மாமாவிடம் எவ்விதமான குறிப்புகளையும் என்னால் உய்த்தறிய முடியவில்லை.தேனம்மையின் பேச்சிலும் எதுவும் தென்படவில்லை.சென்று வருகிறேன் எனக் கூறியபோது அவளுடைய அடையாளமான காகிதமலர்ப் புன்னகையுடனேயே தலையாட்டினாள்.

சிங்கப்பூர் சென்று மூன்று மாதங்களுக்குப் பின் என் சின்னக்கா  தொலைபேசும்போது சொன்னார்கள், தேனம்மையை அத்தையின் ஒன்றுவிட்ட அண்ணன் மகனுக்கு நிச்சயம் செய்துவிட்டார்கள் என.அத்தையின் அம்மா மரணத்தருவாயில் அவர்கள் ஊரில்தான் தேனம்மையை மணமுடிக்க வேண்டுமென சத்தியம் வாங்கிக் கொண்டார்களாம்.தசாவதாரத்தில் கமல் சொல்லும் “கேயாஸ் ” தியரியை அப்போதுதான் உணர்ந்தேன். அத்தை எப்போதுமே உற்சாகமானவர்.அவர் முகம் சோர்ந்தோ,புன்னகையின்றியோ பார்த்த நினைவில்லை.குறையாக இருந்தாலும் அதிலொரு நிறையைக் கூறி பெருமைப்படுவார்.ஊருக்குச் செல்ல ரயிலில் இருக்கை கிடைக்காதபோது, ரயிலில் சென்றால்  பேருந்துபோல வீட்டருகிலேயே இறங்கமுடியுமா எனக் கூறியபடி கடந்துவிடுவார்.வாங்குவதற்கு சிறிய வீடாக அமைந்தபோது இப்படி இருந்தால்தான் சுத்தமாக பராமரிக்க இயலும் எனக் கூறினார்.மூத்த பையன் காதல் மணம் செய்துகொண்டபோது பொண்ணு தேடும் கஷ்டத்தைக் கொடுக்காமல் அவனே அருமையான பெண்ணை பார்த்துவிட்டான் என விழிவிரியச் சமாளித்தார்.மாமா சீட்டுப் பிடிக்கிறேனென சில லட்சங்களை இழந்தபோது, கண்டம் இருப்பதாக ஜாதகத்தில் இருந்தது,ஆளுக்கு ஏதுமில்லாமல் பணத்தோடு  போயிற்றே என மகிழ்ந்தார்.தேனம்மையின் கணவர் பணியாற்றிய பெரும் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு சிறு தொழிற்சாலையில் பணியாற்ற நேர்ந்தபோது சம்பாத்தியம் குறைவாக இருந்தால்தான் மாமியார் வீட்டினரை தாழ்த்திப் பேசாமல் கொஞ்சமாவது மதிப்போடு நடத்துவார் என மெல்லிய குரலில் கூறினாராம்.

நாங்கள் இப்போது வந்திருப்பது, தேனம்மையின் கணவர் சில நாட்களுக்குமுன் இறந்ததற்கு கேதம் கேட்பதற்காக. விருப்பம் இல்லாமல் வந்தாலும் உள்ளுக்குள் ஓர் ஆர்வம் ஊறிக்கொண்டிருந்தது. தற்கொலை செய்துகொண்டு மருமகன்  மாய்ந்தற்கு  எம்மாதிரியான காரணம் கூறப்போகிறார் என. வாசலுக்கருகில் சென்றதுமே ஒளி மாறுபாட்டை கவனித்து திரும்பிய அத்தை “வாங்க ” என்று  எழுந்தார்.”பரவாயில்ல அத்தாச்சி , உக்காருங்க” என்றபடி நுழைந்து காலியாக இருந்த நாற்காலியில் அம்மா அமர்ந்து , அருகில் அமர எனக்கு கை காட்டினார். எங்களைப் பார்த்ததும் அங்கு அமர்ந்திருந்த தம்பதியர் போன்றிருந்தவர்கள் “பிள்ளைகள் பள்ளியிலிருந்து வரும்முன் சென்றுவிடவேண்டும் “என்றபடி எழ அத்தை மெல்ல தலையசைத்தவுடன் கிளம்பினார்கள். அத்தையின் உடல் சற்று பருத்திருந்தபோதும் தளரந்திருந்தார்.   அத்தை எழுந்துபோய் இரண்டு சிறிய தம்ளர்களில் காபி எடுத்துவந்தார்.நான்,இன்றைய தேதியைக் காட்டிய காலண்டரையும் சற்று தள்ளி மாட்டியிருந்த பெரிதாக்கப்பட்ட அவர்களின் குடும்பப் புன்னகையைக் காட்டிய புகைப்படத்தையும் , மேசை மீீீது சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டிருந்த பூச்சாடியையும் நோக்குவது போல அம்மாவின் உரையாடலுக்காக செவியைக் கூர்ந்திருந்தேன்.

“எப்படி அத்தாச்சி, திடீர்னு இம்மாதிரி முடிவுக்கு போனாரு..விசயத்தை கேள்விப்பட்டப்ப என்னால நம்பவே முடியல.வேற யாராவது இருக்கும்னு இவனப்பாக்கிட்ட கோபமா திட்டினேன்.அவருதான் நல்லா விசாரிச்சிட்டேன்.மலரோட மாப்பிள்ளைதான்னு சொன்னாரு.அப்பயிருந்து இன்னும் மனசே ஆறல.அழகுபெத்த புள்ள இப்ப நாதியத்து நிக்குதே.எப்படித்தான் நீங்க தாங்கிக்கிட்டு இருக்கீங்களோ ” என்றபடி அத்தையின் கைகளை தன் பருத்த கைகளுக்குள் வைத்து அழுத்தியபடி விசும்பினாள்.எப்போதுமே எனக்கு ஆச்சர்யம்தான், பயணம் முழுக்க  கூடவேயிருந்து  ஏதாவது விபரங்களை உற்சாகமாக பேசிக்கொண்டே வருபவர்கள் கேத வீட்டின் அருகில் வந்தவுடன் சட்டென சன்னதம் வந்ததுபோல கதறியபடி வீட்டை நோக்கி ஓடுவதும் நெருங்கிய உறவினரை கட்டிக்கொண்டு ஓங்கிய குரலில்  அழுவதும். பெண்களின் அறிய முடியாத ரகசியங்களில் இதுவும் ஒன்று. ஆண்களால் இயன்றது , தலையை தொங்கப்போட்டபடி சென்று அங்கு நின்று கை நீட்டும் ஆண்களின் விரல்களை ஆதுரத்துடன் அழுத்துவது மட்டும்தான்.

சற்றுநேரம் விசும்பிய அத்தை அதை நிறுத்தியபோது பார்வையைத் திருப்பி அவரின் விழிகளை நோக்கினேன்.நீர்வழிந்தபடியிருந்தாலும் சட்டென சிறு சுடர் ஒன்று எழுந்தது. “என்ன சொல்வது,என் வினையோ  அல்லது தேனோட வினையோ நல்லாத்தான் பிள்ளைகளோட பேசிக்கிட்டு இருந்திருக்காரு.மறுநாள் குடும்பத்தோட  குற்றாலத்திற்கு போறதா இருந்ததாம்.இருந்த கம்பளியாடகளே  போதுமான்னு பாத்தப்ப பெரியவளுக்கு இருந்தது சேராத மாதிரி தெரிஞ்சிருக்கு.வாங்கிட்டு வந்தர்றேன்னு கிளம்பி போனவர்தான். ஏழு மணிக்கு போனவரை ஒன்பது மணிவரை வரலையேன்னு போன் பண்ணியிருக்கா.போனை எடுக்கலை.என்ன பண்றதுன்னு தெரியாம ரெண்டு தெரு தள்ளியிருக்கிற அவரோட தம்பிக்கு போன் பண்ணி இந்த மாதிரி போனவரை இவ்வளவு நேரம் காணல,எங்கே ,எப்படி  தேடுவதுன்னு புலம்பியிருக்கா.அவருதான் இவளையும் கூட்டிக்கிட்டு கடைத்தெருப்பக்கமெல்லாம் தேடியிருக்காரு.அப்பறம் ஏதோ தோணியிருக்கு,கம்பெனிப் பக்கம் போயிருப்பாரோன்னு.அங்க போயி செக்யுரிட்டிகிட்ட கேட்டப்ப ஆமா , எட்டு மணியப்போல உள்ள போனாருன்னு சொல்லியிருக்கான்.உள்ள போயி ஆபீஸ் ரூம்,மெசின் ஹாலெல்லாம் பார்த்தும் ஆளக் காணாம பழைய சாமான்களெல்லாம் போட்டுவைக்கிற சின்ன அறை ஒண்ணு பின்னாடி இருக்கிறது நினைவுக்கு வந்து ,போய் பார்த்தா … உடைந்த,தேய்ந்துபோன மெசின் பாகங்களும் பிளாஸ்டிக் டப்பாக்களுமா நெறஞ்ச  ஆறுக்கு எட்டு அடில இருக்கற அந்த இடத்தில பேன் மாட்ற கொக்கியில கயிறக் கட்டி தொங்கிட்டிருக்காரு.என்ன பிரச்சனையின்னு யாருக்கிட்டையும் சொல்லவும் இல்ல காட்டிக்கிடவும் இல்லை…”என்றபடி குலுங்கியழ ஆரம்பித்தார்.

எனக்கென்னவோ இன்னும் சொல்லி முடிக்கவில்லையெனத் தோன்றியது.நான் எதிர்பார்த்து வந்ததை இன்னும் கூறவில்லையே. குலுங்கல் சற்று தணிந்தபோது அரிதான தின்பண்டத்தைப் பார்த்து உமிழூறும் சிறுவனென  கூர்ந்து கவனித்தேன்.விழிகள் சற்று மலர, “என்னதான் இருந்தாலும் இதுவரை இப்படி பார்த்ததோ கேள்விப்பட்டதேயில்லை.அவரோட லேப்டாப்ல கடைசியா என்ன பார்த்திருக்கிறார்னு பார்த்தா அதுல வலிக்காம தூக்குப்போட்டுக்கிறது எப்படின்னு பார்த்திருக்கார்.எந்த மாதிரி கயறு வாங்கனும் எந்த மாதிரி முடிச்சுப் போடனும் ,எம்மாதிரி போட்டா முகம் விகாரமா தெரியாதுங்கறதயெல்லாம் பார்த்திருக்கார்.அதே மாதிரி செஞ்சிருக்காரு.நாங்க போயி பார்க்கிறப்ப சும்மா படுத்து தூங்கற மாதிரியே இருக்கு. அந்த கந்தசாமி மகன் செத்தப்ப  பார்க்க சகிக்காத மாதிரி நாக்கு ஒருபுறம் கடிபட்டு தொங்க அந்த மூஞ்சி வேற பக்கம்  இழுத்துக்கிட்டு கிடந்தது.ஆனா இவர் முகத்துல எந்த வலியோ வேதனையோ எதுவுமே தெரியலை.காலையில பறிச்ச பூ மாதிரியே பொலிவா இருந்துச்சு.செத்தாலும் இந்த மாதிரியில்ல சாகனும்னு மகராசன் காட்டிட்டு போயிருக்கான்” என்றபடி மூக்கைச் சிந்தினார்.

ஜார் ஒழிக சிறுகதை தொகுப்பு குறித்து பிரபாகரன் சண்முகநாதன் கட்டுரை

எல்லா மதிப்பீடுகளுக்குமான மறு மதிப்பீடு தான் காலத்தின் தேவை”

நீட்சே

சாம்ராஜின் மொழி அலங்காரங்கள் அற்றது. அதன் இயல்பே அதன் அழகு. சொற்களின் எதார்த்த கூட்டிசைவு படைப்போடு ஒன்ற வைத்துவிடுகிறது. முதல் வரிகளே அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட களத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் நோக்குடன் காத்திருப்பவை. மரியபுஷ்பம் அவசர அவசரமாக எதையோ தேடிக் கொண்டிருந்தாள்’ என்றோ ‘கணேசனோடு எப்போது அந்த வார்த்தை ஒட்டிக் கொண்டது என கணேசனுக்கே தெரியாது’ என்றோ தொடங்கும் வரிகள் ஊருக்கு வழி சொல்லும் அடையாளங்கள் போல கதைக்கான திறவை முன்வைப்பன.

காட்சிகளாக விரியும் சொற்கள் திடமான வரைவுக்குள் கதையை நகர்த்துகிறது. அந்த வரைவு புகுத்தப்பட்டதாக இல்லாமல் அதன் போக்கிலேயே தீர்மானிக்கப்பட்டதாக அமைவது நம்பகத்தன்மை உடையதாக்குகிறது.

முதல் கதை குள்ளன் பினு, பினுவின் அறிமுகத்திற்கு அவன் காலை ஊன்ற வாகாக, வண்டியை நிறுத்த இடம் தேடுவது நீரோட்டம் பார்க்கிறவர்களை ஒத்து இருக்கும் என்ற ஒப்பீடு தெளிவான அறிமுகத்தை ஏற்படுத்தும். அவனுடைய உயரமான தாத்தா, உயரமான பேபி கொச்சம்மாளை கல்யாணம் செய்து உயரமான மகன்களை மகள்களை ஈன்றெடுக்கிறார். அந்த குடும்பத்திலேயே குள்ளனான பினு தாத்தாவிடமிருந்து தந்தையிடமிருந்து உறவினர்களிடமிருந்தும் எவ்வித அன்பையும் பெறவில்லை. தனியனாகவே திரியும் அவலம் அவனுக்கு.

தந்தைக்கு பிறகு அவர் நடத்திய மெஸ் பார்த்துக் கொள்ளும் பொறுப்புக்கு வருகிறான். அவனது அக்காவின் மகளைக் கேலி செய்யும் இளைஞர்களை எதிர்க்க துணியும் போது தன்னுடைய உயரமே சண்டையில் சாதகமாகிறது. உயரத்தால் அல்லாது மனதில் தான் உயர்ந்துவிட்டதாக நம்புகிறான். அதுவரை அவனை கூட்டிச் செல்ல வரும் உமரின் ஆட்டோவில், அதன் பிறகு வராமல் நடந்தே செல்ல தொடங்குகிறான். இறுதியில் கதை இவ்வரியோடு முடிகிறது, அவனது நிழல் நீளமாய் ஆற்றின் நடுப்பகுதி வரை நீண்டு தெரிய, அதிர்ந்து சட்டென்று பின்வாங்கினான் பினு ’. உயரத்தைக் கண்டு பயம் கொள்ளுகிற புனைவு கதையை இறுதி செய்கிறது.

காட்சிகளாக விரியும் கதைகளில் காலம் இரண்டொரு வரிகளில் கடந்துவிடுகின்றன. அவையும் காற்புள்ளிக்கு பிறகு இன்னொரு பரிணாமத்தை காட்டிவிடுகின்றன.

இந்த கட்டுரை ஆரம்பித்ததில் இருந்து ஒரு சின்ன நெருடல் எனக்குள் இருந்துக் கொண்டே இருக்கிறது. ரொம்ப சீரியஸாக கட்டுரை பயணப்படுகிறதோ என்று. இதற்கு நேர் எதிரான கட்டுடைக்கப்பட்ட எளிய மொழியில் தான் இக்கதைகள். மனிதர்களின் இயல்பான குறும்பை, கேலியை, பகடியை தன்னுடைய தூண்களாக கொண்ட தொகுப்பை விமர்சிக்கும் போது மட்டும் இறுக்கமான மொழியாக இருந்தா எப்படி?

வடிவேலுவை ஏன் கொண்டாடுகிறோம் என யோசித்து பார்த்தால் அவருடைய மறுக்க முடியாத அடையாளமாக மதுரக்காரன் என்கிற தொனி இருப்பதை சொல்ல முடியும். சாம்ராஜ்க்கும் அது பொருந்தும். ஏறத்தாழ மதுரையோடு நெருங்கிய தொடர்பு கொண்ட யாரும் சொல்லிவிட முடியும், மதுரை எவ்வளவு கொண்டாட்டமான நகரம் என்று. அதே நேரத்தில் பிடிவாதம் கொண்ட இடமும் கூட.

சாம்ராஜின் கதைகள் ஒரு எளிய கதைசொல்லியை அறிமுகப்படுத்துகிறது. கதைசொல்லி கதைகளைச் சொல்லி சிரிக்கிறான், கூடவே அழுகிறான், கடக்க முடியாத இடத்தை ‘ச்சைஇதெல்லாம் பெருசா’ என உதாசீனப்படுத்தி அழைத்துச் செல்கிறான். அவன் மொழிக்கு பழகிய நாம் அவனோடு சென்ற விட்ட நம்மை, வெகு நேரமாக தேடிக் கொண்டிருக்கிறோம்.

சாமின் கதைகள் மனிதர்களைச் சுற்றியது. அவர்களின் உணர்வுகளை சுற்றியது. குள்ளனான பினுவிற்கு உயரமே அவனுடைய சிக்கல். முத்திருளாண்டிக்கு வாக்கப்பட்டு வரும் செவ்வாக்கியத்திற்கு கணவனுடன் எதிர்பார்த்த தாம்பத்திய உறவு இல்லாது போவது சிக்கல். பரமேஸ்வரிக்கு மாமனார், அச்சுதன் நாயருக்கு தன்னுடைய கேப்டன் கனவு, லக்ஷ்மியக்காவிற்கு விரக்தி, மல்லிகாவிற்கு ஒரே சந்தோசமான சினிமா இல்லாது போனது, மரியபுஷ்பத்தின் கணவனான சகாயத்திற்கு மனைவியின் மீதான சந்தேகம் – என உழலும் மனிதர்களை நாம் இயல்பான உலகில் எல்லா மூலைகளிலும் சந்திக்க நேரிடும். இவர்கள் தங்களுக்கான வாழ்வின் மீதான பிடித்தத்தை பழிவாங்கும், நிறைவேற்றும், முற்றிலுமாக துறந்து விடும் முடிவுகள் வழியாக உறுதி செய்கின்றனர்.

இன்னொரு பார்வையில் தோழர்கள், கலகம், புரட்சி, அரசியல் குறித்த பகடிகளைக் குறிப்பிடலாம். அதிலும் மனிதர்கள் தங்களுக்கான வாழ்க்கை உறுதிப்பாட்டிற்கே அரசியலை அணுகுகின்றனர்.

பகடியின் உச்சபட்சத்தை தரிசிக்க ‘தொழில் புரட்சி’ ‘மருள்’ ‘ஜார் ஒழிக’ கதைகளைக் குறிப்பிடலாம்.

மிக எளிமையானது தான் படைப்பு உருவாக்கத்தில் சிக்கலானதும் கூட. பகடியை அவ்வகையில் சேர்க்கலாம்.

மத்திய அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பைக் காட்ட திட்டமிடும் தோழர்கள் சின்ன வட்டம் தான் ஆறு பேர். அதிலும் ஒருவர் தன் தங்கைக்கு சொந்த சாதியில் மாப்பிள்ளை பார்க்க போவதை மறைத்து விட்டு துக்க நிகழ்விற்கு போவதாக கூறிச் செல்பவர். மூன்று குழு. கண்காணிப்பு, செயலாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு. ஒரு நாய் இருந்ததை கவனிக்க மறந்ததால் அத்திட்டமே முடங்குகிறது. வந்தவய்ங்க கொளுத்தி விட்டுட்டு போயிருந்தவாச்சும் புது ஜீப் கிடைச்சுருக்கும் என புலம்பும் ஆபிசர், அவரிடம் சாப்பாடு பாக்கி வாங்க காத்து நிற்கும் தள்ளு வண்டி கடைக்காரர் என கதை கையாண்டிருக்கும் பாத்திரங்கள் உண்மைக்கு நெருக்கமானவை. தாங்கள் நம்பும் அரசியல் பாதையை கொண்டிருப்பவர்களின் செயல்களைப் பகடி செய்யும் கதைகளில் வெகுளித்தனமும் ஏமாற்றமும் சேர்ந்தே தொனிக்கிறது. புரட்சி வந்துக் கொண்டிருக்கிறது என கனவுகளை வளர்த்துக் கொண்டவர்கள் அவை பொய்த்து போவதை அறியும் போது விரக்தி அடைகின்றனர். அதன் மீதான விமர்சனத்தை பகடிகள் வழியாக வெளிப்படுத்துகின்றனர். பின்னணியில் ஆற்றாமை இருப்பதை யாரும் மறுக்க இயலாது.

எழுதப்படாத தியாகங்கள் எத்தனையோ இடதுசாரிய அரசியலில் அடையாளப்படுத்தபடாது கரைந்திருக்கின்றன. செயல்பாடுகளின் நோக்கங்கள் மறைந்து நடைமுறைகள் இறுகும் போது சடங்குகள் போலவே அலுப்பு வெளிப்பட்டு விடுகிறது.

பிராச்சாரத்திற்கு பயன்படாத படைப்புகள் வெகு அரிதாகவே காணக் கிடைக்கும் இடதுசாரிய பரப்பில் சாம்ராஜ் முதல் அடிகளை முன்வைக்கிறார். பகடி என்பதுவும் விமர்சனம் தான். எதிர் கருத்தியல்களில் இருந்து வரும் விமர்சனங்களை விட இவை ஆற்றல் நிரம்பியவை.

மருள் என்கிற கதை ஒட்டுமொத்த கட்டுக்கோப்பான நிறுவனத்தை ஒரே நாளில் குலைத்து போடும் குறும்புக்கார அருளைப் பற்றி சொல்வது. கலகம் அப்படியானது தான் என நிறுவ முயல்கிற கதை. கொஞ்சம் கூட சிரிக்காது இந்த கதையைக் கடப்பவர்கள் சொற்பம். அதே போல ஜார் ஒழிக கதையும். பெயிண்டர் கணேசனுக்கு ங்கொம்மலாக்க என்ற வார்த்தை இல்லது ஒரு வரியைப் பேச தெரியாது. தோழர்களோடு இணைந்து பயணிக்கிற போது அவனை அறியாமலேயே உருவாகும் மூர்த்தியுடனான தோழமை அந்த வார்த்தையை மறக்க செய்கிறது. விநாயகர் சிலையோடு இஸ்லாமிய தெருக்களில் நுழையும் கூட்டத்தினரை எதிர்கொள்ளும் போது மூர்த்தி அதே வார்த்தையே உச்சரிக்க நேருகிறது. மூர்த்தி கணேசனிடம் நீங்க என்னை மன்னிச்சு தான் ஆகணும் என உரக்க சொல்லுவதோடு கதை நிறைவு பெறும்.

சாம்ராஜின் கதைகளில் வரும் தோழர்கள் மிக சிறு குழுக்களாக இயங்கும் எம்.எல். இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு பெரிய பொருளாதார பலமோ அல்லது ஆள் பலமோ இருப்பதில்லை. இடதுசாரிய தோழர்களுக்கே இல்லாத போது, அதை விட குறைவு இவர்கள் பலம். ஆனாலும் சமூகத்தில் மாற்றங்களுக்காகவும் புரட்சி வந்துவிடும் என இன்றும் நம்புகிற தோழர்களின் வட்டத்தை நான் அறிவேன். அவற்றோடு சாம்ராஜ் முன்வைக்கும் பகடி நுண்மையான விமர்சனமே ஒழிய குற்றச்சாட்டாக இருப்பதில்லை.

அவருடைய மொழி ஆளுகை பல இடங்களில் ஒளிருவதைக் காண முடியும். செவ்வாக்கியம் தன் கணவன் தொடுப்பு வைத்திருப்பதை அறிந்தும் பொறுந்திருந்தவள், பத்து வயது சிறுமியை சீண்டும் கணவனைக் கண்ட பிறகு அவனுக்கு தான் நம்பும் தண்டனையை அளிக்க துணிகிறாள். தன் தோழி சொர்ணத்தோடு மலையாள மாந்தீரிக பெண் ஒருத்தியிடம் செல்கிறாள். அந்த காட்சி இப்படியாக விரிகிறது, நடுக்கூடத்தில் ஒரு சிறிய பீடத்தின் மேல் அமர்ந்திருந்தாள் அந்தப் பெண். தலைமுடி ஆலமரம் விழு போலிருந்தது. படங்களும் தாமிரத் தகடுகளும் மின்ன, முன்னே ஒரு ஆறு திரி விளக்கு பதக் பதக் என துடித்துக் கொண்டிருந்தது.” என்ன செய்யணும் என அந்த பெண் கேட்கிறாள், சுடர் பதறியது’ தனக்கு பயன்படாதது யாருக்கும் பயன்படக் கூடாது என செவ்வாக்கியம் சொல்கிறாள். அதன் பிறகு கணவன் நடுங்கத் தொடங்கி விடுகிறான்.

கரண்ட் முழுநாளும் இருந்தால் சகட சகட சகட’ என நூற்பாலை இயந்திர ஒலியையும் , ‘கோரிப்பாளையம் கண்மாயில் தண்ணி கெத்து கெத்தென கிடந்தது’, என நில வர்ணிப்பையும் காட்டும் மொழி அவ்விடங்களிற்கு உயிர் கொடுக்கிறது.

மிக குறிப்பாக அவருடைய கதைகளின் பெண்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்கிற இடங்கள் உண்டு. அதில் மிக உறுதியாக நிற்கிற மனப்பான்மை உறுதியுடைவர்களாக காட்டுகிறது. மூவிலேண்ட் கதையில் மல்லிகாவிற்கு சினிமா என்றால் உயிர். சினிமா ஆப்ரேட்டர் உடன் காதல் வயப்படுகிறாள். அண்ணநும் அம்மாவும் எதிர்க்க வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள். அவன் மல்லிகாவை ஒரு குடியில் வைக்கிறான்.பகலெல்லாம் தனியாக இருக்கிறாள். சூரியன் கோழிக் குஞ்சுகள் மீதேறி அவள் மீதேறி வீட்டின் மீதேறி மாலையில் தூரத்து மலையில் போய் மறையும்’ அவளை குடும்பத்தினர் வந்து மீட்டு சென்று கல்யாணம் செய்து வைக்கின்றனர். கணவன் சினிமாவிற்கு போகக் கூடாது என்கிறான். மகள் பிறக்கிறாள். கானவன் பார்க்க வர மறுக்கிறான். பஞ்சாயத்தில் இவள் படத்திற்கு போகவே கூடாது என சத்தியம் வாங்குகிறான். அதன் பிறகு வருடக்கணக்காக சினிமாவைப் பார்க்க போகவே இல்லை அவள். இந்த பிடிவாதம் பெண்களுக்கே சாத்தியம். வைராக்கியம். தன்னை தானே அதிலிருந்து விலக்கிக் கொள்வது என்றென்றைக்குமாக.

மீஎதார்த்த முடிவுகளில் சாம்ராஜின் சில கதைகள் முடிக்கப்படுகிறது. குள்ளன் பினுவின் மேலே சொன்ன வரி. கப்பல் என்கிற கதையில் கேப்டன்களால் எப்போதும் கீழேயே பார்க்கப்பட்ட பொறியாளர் அச்சுதன் நாயர் கப்பல் போன்ற பிரம்மாண்டமான வீட்டை கடற்கரையில் நிர்மாணிக்கிறார். அந்த இடத்தில் இருந்த குடிகளை அப்புறப்படுத்துகின்றனர். அங்கு வாழ்ந்த நாயொன்று மட்டும் முன்னர் குடிசைகள் இருந்ததற்கு சாட்சியாக இருந்தது. அதன் பார்வையில், நாய் தண்ணீரில் தெரியும் கப்பல் வீட்டின் தலைகீழ் பிம்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. திடீரென ஆவேசமாய் குலைத்தது. பிறகு ஆச்சரியத்துடன் நிமிர்ந்து வீட்டைப் பார்க்க, கப்பல் வீடு தண்ணீரில் கடல் இருக்கும் திசை நோக்கி மெதுவாய் மிதந்து போய்க் கொண்டிருந்தது’. தன்னை மதிக்காத கேப்டன் போலவே தன்னால் மதிக்கப்படாத மக்கள் இருந்தால் தான் தானும் கேப்டன் என்பது அதிகாரத்தின் படிமட்டங்களைக் காட்டுகிறது. தாழ்வு இருந்தால் தான் உயரம் தெரியும்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் வரும் காட்சி போல் லக்ஷ்மியாக்கவோடு போன தன்ராஜ் படுக்கையில் இறந்து போகிறான். அதோடு லக்ஷ்மி மொட்டையடித்து அதுவரையில் இருந்த எல்லாவற்றையும் துறந்து விட்டு குழந்தைகளுக்கு ஆசிர்வதிக்க தொடங்குகிறாள். காலம் எல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறது.

சாம்ராஜின் கதைகளில் போலி கிடையாது எங்குமே. எதார்த்த உலகின் கோடிக்கணக்கான கதைகளில் சிலவற்றை மட்டுமே பதிவு செய்திருக்கிறார். இழையோடும் மெல்லிய பகடியும், எளிமையும் கதைகளை வலிமை உடையனவாக்குகிறது. கதை மாந்தர்கள் வெகு அரிதாகவே உரையாடுகின்றனர். கதைசொல்லியே பேசிவிடுகிறான். தொழில் புரட்சி போன்ற கதைகள் நாவலாக மாறினால் தமிழின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக இருக்கும்.

கதைகளின் அடித்தளமே அவை காலந்தோறும் புதுபுது பரிணாமங்களைக் காட்சிப்படுத்துவதே. ஒவ்வொரு நேரத்திலும் எழுகிற படைப்புகள் அதற்கு முன்பு திகழ்ந்தவற்றை விமர்சித்தே தன்னை செம்மைப்படுத்திக் கொள்கிறது. சாம்ராஜின் கதைகள் எது போலவும் இல்லாதது அதன் மீதான ஈர்ப்புக்கு காரணமாகிறது. மற்றும் முந்தைய படைப்புகளில் இருந்து தன்னை செம்மை செய்துக் கொள்கிறது.

வடிவேலு பிரதி செய்ய முடியாதவர். சாம்ராஜும் அது போலத் தான்.

திகிரி சிறுகதை தொகுப்பு – துரோகிக்கப்படும் பெண்கள் – ஜான் மேரி கட்டுரை

ஆன்மாவை சுமந்து திரியும் வெற்று உடலே நாம். ஆன்மாவின் விழிப்புநிலை என்பது அரிதாகவே நடக்கும்; அது அவரவர் தேடலின் பொருட்டு நடப்பவை. நடந்த சம்பவத்தை வெறும் சம்பவமாக எழுதாமல் அதை புனைவுகள் மூலம் கதையாக நம் கண் முன் காட்சிப்படுத்துகையில் ஒரு மின்னல் தாக்கியது போல் இந்த வெற்று உடலில் இருக்கும் ஆன்மா விழிக்கும். அது வெறும் விழிப்புநிலை மட்டும் அல்ல அது தொடர்ந்து நமக்குள் கேள்வியாகவும், அழுகையாகவும், நேசக் குரலாகவும், நாம் நமக்கென்ன என்று கடந்து வந்த சில சம்பவங்களின் தீராத குற்றணர்வின் குரலாகவும் என பல ஒலிகளாக நம் அகமனக் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அப்படி விழிப்புநிலை தரும் எழுத்துக்களே ஒரு எழுதாளனின் வெற்றி.

 

போகன் சங்கரின் ‘திகிரி’ நான் வாசிக்கும் அவருடைய முதல் சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பு முழுக்க சமூகத்தாலும், ஆண்களாலும் வஞ்சிக்கப்பட்ட, புறந்தள்ளப்பட்ட பெண்களின் குரல்களாக எதிரோலிக்கிறது. ரத்தமும் சதையும் உணர்ச்சியும் அற்ற வெற்று உடலாகவே பார்க்கப்படுகிறார்கள் “சிறுத்தை நடை” தவிர மற்ற ஏழு கதைகளும் சமவெளியில் நடப்பவை

 

“தீட்டு” கதையில் ஒரு பெண்ணின் உடல் பண்டப்பொருட்களாக சமூகத்தில், தனிமனித வாழ்கையில் எப்படியெல்லாம் பார்க்கப்படுகிறது என்பதைச் சித்தரிக்கிறது. வேலைக் கேட்டு போகும் இடத்தில் அவளின் மெலிந்த, போஷாக்கு குன்றிய, அழகுகுன்றிய உடலால் கொண்டமையால் நிராகரிக்கப்படுகிறாள். தன் ஆச்சி இறக்கும் தருவாயில் பணத்துக்காக உதவி கேட்டு போகும் இடத்திலும் பணத்தை கொடுத்து அவள் உடலை உடல் துஷ்பிரயோகம் செய்ய முயற்ச்சிக்கிறான் அவளது முதலாளி. அந்த தருணத்தில் அவள் “தீட்டாயிருச்சண்ணே” என்று சொல்லும் இடத்தில் ஒரு பெண்ணின் வலியைக் உணர்விதுச் செல்கிறார் போகன். கொன்று புசிக்காமல் உயிருடன் பிய்த்து திண்ணும் ஓநாய் கூட்டத்தின் நடுவில் தவிக்கும் உயிர் போலவே கோமதி தவிக்கிறாள். கோமதியின் அக்கா பற்றிய சிறிய குறிப்புக்குகூட அவளது உடல் ஈர்ப்பு சார்ந்த சமூகத்தின் பார்வையை தனிக்கதையாக உணர்விக்கக் கூடியது.

 

 

“சிறுத்தை நடை” கதையில் சமவெளியில் வசிப்பவர்களின் மனநிலையும் மலை பிரதேசத்தில் வசிப்பவர்களின் மனநிலையும் ஒன்று போல் இல்லை என்பதை பூடகமாக சித்தரிக்கிறது. சமவெளியில் இயல்பான கொண்டாட்ட சூழலில் வசித்த பெண் மலை பிரதேசத்துக்கு வருகிறாள். தன் ரசனைக்கு நேர் எதிராக உள்ள கணவன் அங்கு வாழும் மக்கள் அச்சூழல் அவளுக்கு மர்மமாக இருக்கிறது ஒரு நாட்டு ரோஜா செடியை அவள் அங்கு நடுகிறாள் அது மர்மமான பூஞ்சையால் தாக்கப்பட்டு காய்ந்து விடுகிறது. நாட்டு ரோஜா மலைகாட்டு பகுதியில் தாக்குப் பிடிப்பதில்லை என்று சாக்கோ சொல்லுமிடம் அக்கதையில் வரும் பெண்ணை ரோஜா செடியாகக்கூட படிமப்படுத்தி வாசிக்கும் சாத்தியத்தை தந்துவிடுகிறது. அவளையும் அறியாமல் அவள் வீட்டு வேலைகாரன் அவளை புணர்ந்து கொள்கிறான். ஒரு பெண்ணாய் மற்றவர்களால் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்படுகிறாள். சாக்கோ ஒருவன் மட்டும் தான் மனிதனாக தெரிகிறான். ஸ்காட்லெட்டுடன் நட்பு கொண்டதினால் அவன் அதிகார வர்கத்தினரால் கொல்லப்படுகிறான். இறப்புகளும், துரோகங்களும் பெண்ணை மையப்படுத்தி பின்னப்பட்டுள்ளது.

 

“முகம்” கதையில் ஒரு ஆண்ணின் பார்வையில் பெண் என்பவள் எப்படி என்று சொல்லப்படுகிறது கதையின் ஆரம்பத்தில் இறந்த பெண்ணின் ஆவி வருகிறது. அவள் இறந்து நூறு வருடங்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவளின் இறப்பிற்கு அவளுடைய தந்தையோ, உடன் பிறந்தானோ, பர்த்தாவோ, காமுகனோ,அரசனோ இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கதையின் நாயகன் அந்த பெண்ணின் ஆவியை ஒரு பாலத்தில் பார்க்கிறான். மிரண்டு போய் ஒரு வீட்டின் முன் அமர்கிறான். அப்போது தமிழ்ச்செல்வியை சந்திக்கிறான்; அவள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிறாள். அவள் போலீஸ் அதிகாரியை ஒருவனை கொன்று விட்டு தலைமறைவாக வாழ்கிறாள் பின்பு அவளும் சுட்டு கொல்லப்படுகிறாள். வீட்டுக்கு வரும் கதை நாயகன் தொட்டிலில் உறங்கும் தன் பெண் குழந்தையை கையில் ஏந்தி பார்க்கிறான் இறந்த பெண்ணின் கண்களும்,தமிழ்ச்செல்வியின் கண்களும் தன் குழந்தையின் கண்களும் ஒன்றும் போல் இருப்பதாக பார்க்கிறான். வழிவழியாக பெண்களின் வலிகளும் துயரங்களும் தொடர்வதாக சொல்லப்படுகிறது. அவர்களின் எல்லா முகமும் ஒருபுள்ளியில் இணைவது போன்ற பொதுச் சித்திரத்தை தந்துவிடுகிறது.

 

 

“திகிரி” சாவை கை தொடும் தூரத்தில் பார்க்கும் ஒரு மனிதனின் மனநிலை பற்றின கதை. ஒருவர் சாவின் பயத்தில் உள்ளார். மருந்துகள் எடுக்கிறார். அதன் பக்க விளைவாக குடும்பம் மேல் விலகல் வருகிறது. மகள் மேல் இருந்த பிரியமும் போய் விட்டது. இப்பொழுது சமணர்களைக் காண மலைக்கு போகிறார். ஒரு பெண்ணை காண்கிறார். அவள் ஒரு தொல் கதையின் எச்சம். அவள் தன் கதையை சொல்கிறாள் இவரிடம்.அதில் வரும் படைவீரன் தான் நீ என்று. அதன் தொடர்ச்சியாத்தான் நீ இருக்கிறாய் என்று.அந்த நேரத்தில் சமணர் கோயிலில் அவருக்கு ஒரு விடுதலை கிடைக்கிறது.
“அறியாமையை வழிபடுகிறவர்கள் இருளில் ஆழ்கிறார்கள்”என்றார்.
”அறிவை வழிபடுகிறவர்கள் இன்னமும் ஆழ்ந்த இருளில்” என்றார். ”உங்கள் ஈசோபநிஷதம்”
மழைத்துளிக”

 

 

“நாகப் படம்” இத்தொகுப்பில் உள்ள எல்லா கதைகளை விடவும் இதுவே தனித்துவம் வாய்ந்ததாக நான் கருதுகிறேன்.ஒரு கலைஞன் தன் கலைக்காக தன்னை மட்டும் அல்ல தன்னை சார்ந்தவற்றையும் இழந்து ஒரு படைப்பை தருகிறான்.நிர்வாணம் சிறந்த மருத்துவமாக கருதப்படுகிறது.மனித உடலை தவிர உலகில் அழகான விஷயம் கிடையாது. மனிதனை மட்டுமே கடவுள் அவரது சாயலில் படைத்தார். அப்படி படைக்கப்பட்ட உடலை ஒரு கலையாக பார்த்து தன்னை அதில் முழுமையாக அற்பனிப்பவர்கள் ஓவியர்களும் , சிற்பிகளும் மட்டுமே.கோவில்களில் காணப்படும் சிற்பங்கள் அனைத்திலும் கலைஞனின் ஆத்மார்த்த அற்பனிப்பும் உழைப்பும் வெளிப்படும். கோவில்களில் காணப்படும் சிற்பங்களில் பெரும்பாலும் பெண் உருவச்சிலையே காணப்படுகிறது.ஆனால் கிரேக்க வீதிகளில் காணப்படும் சிலைகளின் அதிகபட்ச அழகு ஆணின் உடலில்தான் வெளிப்படுகிறது.இக்கதையில் குழந்தை பருவத்தில் ஒருவன் வீட்டின் வறுமை காரணமாக தன் அம்மாவாள் ஓவியர் ஒருவரிடம் விட்டு செல்லப்படுகிறான்.பிறகு திருமண பருவத்தை எட்டியதும் அவன் அம்மாவாள் பெண் பார்க்கப்பட்டு குருவிடம் போராடி சம்மதம் வாங்குகிறாள் பெண் பார்க்க குரு தானும் வருவதாக கூறுகிறார் அங்கு பெண்ணை பார்த்ததும் ஆசான் திகைத்து நின்றுவிட்டார்,”மகனே இவளே உனது பெண் என்கிறார்.பிறகு திருமணம் நடக்கிறது.அவன் தன் சொந்த ஊருக்கு வந்த பின் குருவின் வாழ்வு தடம் மாறுகிறது அவர் இறக்கும் தருவாயில் தன் சிஷ்யன் வீட்டின் முன்பு வந்து இருக்கிறார்.தோற்றத்தில் முற்றிலும் வேறொருவராக அவர் தன் சிஷ்யனிடம் கடைசியாக நான் ஒரே ஒருமுறை உன் மனைவியைப் படம் வரைந்து கொள்கிறேன் என்றும் அது தன்னை குணப்படுத்தும் என்றும் கூறுகிறார் அவன் முதலில் அதிர்ந்து பேச்சிழந்து போனாலும் சம்மதிக்கிறான் அதன் பிறகு அவர் மூன்று ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்ததாகவும் நிறைய வரைந்தார் எனவும் கதை முடிகிறது

 

“ஆடை” கதையில் இடதுசாரிதுவ மரபில் இருந்து வந்த ஒரு கேரளத்து பெண் புரட்சி பேசும் சித்திக்கை காதலித்து திருமணம் செய்து கொள்கிறாள்.இருவருக்கும் குழந்தை பிறக்கிறது வேலை நிமித்தமாக இஸ்லாமிய நாட்டுக்கு செல்கிறான் அங்கு போனதும் சித்திக் கலாவை படுதா போடுமாறு கட்டாயப்படுத்துகிறான் அவன் சொல்வதை இவள் கேட்க மறுக்கவே அவள் நடத்தை கெட்டவள் குழந்தை அவனுக்கு பிறக்கவில்லை என்று அவளை பழிச்சொல்கிறான்.அதன் பிறகு இருவரும் பிரிந்துவிடுகின்றனர்.பிறகு ஒரு பயணத்தில் கலா கிருஷ்ணனை சந்திக்கிறாள் கிருஷ்ணன் புத்தக வாசிப்பாளனாக இருக்கிறான் இருவரும் புத்தகங்களை பற்றி கருத்துகளை பரிமாறிக் கொள்கின்றனர் பிறகு ஒருநாள் கலாவின் குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போகின்றது கிருஷ்ணன் உதவி செய்ய மருத்துவமனைக்கு செல்கிறான். மருத்துவமனையில் கலாவின் அப்பா அவளை பற்றி தவறுதலாக சொல்லவும் கிருஷ்ணன் என்ன செய்வது என்று பதட்டத்துடன் நீண்ட நாட்களுக்கு பிறகு புகை பிடிக்கிறான். கள்ளுக்குடிக்கலாம் என்றும் நினைக்கிறான்.உடலை அதிகம் தாண்டாத உறவாக மட்டுமே இருக்கும் என்றும் புத்தகங்களை பற்றி மட்டுமே பேசிக் பிரிந்துவிடும் ஒரு உறவாக இருக்கும் என்று கிருஷணன் நினைக்கிறான்.கலா தன் குழந்தையை பற்றி சொல்லும் போது பண உதவி கேட்டுவிடுவாள் என்ற அச்சத்தில் கிருஷ்ணன் அதை நீயும் உன் குடும்பமும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறான்.அதற்கு கலா பண உதவி உங்களிடம் கேட்கவில்லை அறிவுரை தான் கேட்டேன் என்று சொன்னதும் கிருஷ்ணனுக்கு குற்றணர்வு ஏற்படுகிறது. அவன் பேருந்தில் வரும்போது ஒரு கனவு காண்கிறான் அதில் கிருஷ்ணனின் ஆடையை அணிந்து கொள்ளுமாறு கலா தருகிறாள். இங்கு “ஆடை” என்பது எதையும் எதிர்பார்க்காமல் இந்த சமூகத்துக்கு எது தேவையோ அதை பொருட்படுத்தாமல் உதவ வந்த கிருஷ்ணன் இப்போது அதையெல்லாம் அணிந்து கொண்டு போங்கள் என்று கலா சொல்வதாக பொருள்படுகிறது.ஒரு பெண் தன் சுயத்தை இழந்து பழிச்சுமத்தப்பட்டு குடும்பத்திலும் சமூகத்திலும் வேசியாக, துரோகியாக,நக்சல்லாக,
பார்க்கப்படுகிறாள் அவள் உணர்வு நசுக்கப்படுகிறது.

 

“ஜெயமோகனின் கள்ளக்காதலி” தலைப்பே பகடையாக ஆரம்பிக்கின்றதே என்று எனக்கு தோன்றியது. மணி ஒரு கதைச்சொல்லி ஞாபக மறதி அவர் வீட்டின் முன் ஒருநாள் ஒரு பெண் வந்து நிற்கிறாள் யார் என்று மணி கேட்க ஜெயமோகன் என்று அந்த பெண் கூறுகிறாள் யாரு எழுத்தாளர் ஜெயமோகனா என்று கேட்கிறார் இல்லை உங்கள் நண்பர் ஜெயமோகன் என்று சொன்னதும் இருபது வருடங்கள் முன்பு தன் நண்பர் ஜெயமோகனை மணிக்கு நினைவு வருகிறது.அவர் ஒரு போதகராய் உள்ளார் மணி ஜெயமோகனுக்கு புத்தகங்கள் கொடுப்பது உண்டு அதனால் அவருக்கு புத்தகங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது. ஜெயமோகனுக்கு ஒரு பெண் துணை ஏற்படுகிறது அவருக்கு இவள் தான் அனைத்தும் செய்கிறாள் இவள் தான் அவரை புரிந்து கொண்டதாகவும் நினைக்கிறார் இது ஜெயமோகன் மனைவிக்கு தெரியவரவே கள்ள உறவு என்று அடித்து விரட்டப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார் அங்கு அவருக்கு துணையாக இருக்கும் பெண் அழுவதை பார்த்து முகம் சுழிக்கிறார் ஏனெனில் அவரை பொறுத்தமட்டில் பெண்களின் கண்ணீர் பொய்யானவை “ஏவாளின் கண்ணீர்!” என்று திரும்பிக்கொள்கிறார்.பிறகு மணி கதை ஒன்றை வாசித்து காண்பிக்கிறார் அதில் ஒரு ஆண் தன் பெண்ணை ஒவ்வொரு அங்கமாக கை வைத்து அவள் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளை கூட நேசிக்கிறேன் அவற்றை புலர்மழையைப் போல பரிசுத்தமானது என்று கூறுகிறான்.இவற்றை கேட்டதும் போதகருக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது அந்த பெண்ணின் அனைத்து தீமைகளையும் எல்லா பிரச்சனைகளுடனும் அவளை ஏற்றுக்கொள்கிறார்.பிறகு ஜெயமோகன் தன் கள்ளகாதலியுடன் வடமாநிலம் சென்று ஊழியம் செய்கிறார்.அங்கு சென்றதும் மணிக்கு கடிதம் எழுதுகிறார் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு சந்தோஷமாக இருப்பதாக

 

 

திகிரி போகன் சங்கரின் மூன்றாவது கதைத்தொகுப்பு ஒரு ஆண்ணின் பார்வையில் பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வலிகள், சொல்லப்பட்டிருக்கிறது.

இவருக்குள் இருக்கும் கவிஞன் கதைகளின் இடை இடையே வெளிப்படும் சில வரிகளில் தெரிகிறது. அவை வர்ணித்து காட்சிபடுத்தும் விதம் அழகு. தன் மீது சுமத்தப்படும் பொறுப்புகளிலிருந்தும் கடமைகளிலுந்தும் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்வில் இருந்து பெண்கள் விலகிவிடாமல் போராடுகின்றனர் போகனின் கதைகளில் வரும் பெண்கள்.

ஒரு சிறுகதை தொகுப்பு என்பது ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கதைக்கரு கொண்டு ஒரு கதையில் இருந்து அடுத்த கதைக்கு செல்லும் போது அது முற்றிலும் வேறொரு உலகம் வேறொரு அனுபவத்தையும், மனநிலையும் தந்தால், அது பன்முக வாசிப்பு சாதியத்தைக் கூட்டும். இத்தொகுப்பிலுள்ள கதைகளின் கருக்கள் ஒரே வகையில் இருப்பதால் என் எதிர்பார்ப்பை இத்தொகுப்பு பூரணப்படுத்தவும் இல்லை. ஆடை,முகம்,தீட்டு, சிறுத்தை நடை போன்ற கதைகளில் வரும் கதைமாந்தர்கள் கதை சொல்லப்படும் விதம் வேறாக இருந்தாலும் பெண்களின் வலி ஒரே விதமாக சொல்லப்படுகின்றது. பெண் வலியை அனுபவிக்கிறாள் அதற்கு காரணம். ஆண் என்பதே மையக் கருத்து. இத்தொகுப்பின் தலைப்பு கதையான திகிரி கதையும் , நாகப்படம் கதையும் மட்டுமே வேறொரு உலகத்தையும் கதை கருவையும் கொண்டுள்ளது.