அரிஷ்டநேமி
யாரும் அற்ற ஒரு புனித கணத்தில்
அது அவன் ஆனது.
அவன் ஆன காலம் முதல்
பசி அவனைத் தின்னத் தொடங்கியது.
அன்று முதல் அவன் யாசிக்க
ஆரம்பித்தான்.
விளையாட்டு பொம்மைகளை,
நடை வண்டிகளை,
சப்பர வண்டிகளை,
கோலிக் குண்டு விளையாட்டுகளை
கிட்டிபுல் விளையாட்டுகளை
காவிரியின் ஓட்டங்களை,
தீப்பெட்டி அட்டைகளை,
கனவுகளை கொண்டாடும் கவிதைகளை,
உறவுகளை,
வாழ்த்துக்களை.
யாசித்தலில் பட்டியல் நிறைவற்று நீண்டது.
கனவுகளின் பட்டியலில் நீண்டதில்
தேக மாற்றம் கொண்டது.
மாற்றம் கொண்டபின்
தானம் வாங்க விரும்பி அவனிடம் பலர்
பிறிதொரு நாளில்
தடையங்கள் ஏதும் இன்றி
நெருப்பும் அவனிடம் தானம் பெற்றது.
அன்று முதல் அவன் அதுவானான்.