எழுத்து

கவியின் கண் – தொலைந்த சொர்க்கம்

எஸ். சுரேஷ்

 
தெருவின் பெயர் – நீங்கள் தெருப்பலகையில் காணலாம்,
எனக்குஅதன் பெயர் சுவர்க்கம், என் தொலைந்த சுவர்க்கம்.
ஊரின் பெயர்- நீங்கள் வழிப்போக்கர்களிடம் கேட்கலாம்,
எனக்கு அதன் பெயர் சுவர்க்கம், என் தொலைந்த சுவர்க்கம்.
தொலைந்து போனதால், அதன் பூங்காக்கள் பூத்திருக்கின்றன,
என் இதயம் துடிக்கிறது, தெறிக்கிறது, தூண்டில் மீனாய் துள்ளுகிறது.
மின்னும் நதியின் கரையோர வளைகளில் கருப்பு எலிகள்,
வரவேற்று அனுமதிக்கப்பட்ட அவற்றின் பூலோக சுவர்க்கம் அழிவற்றது.
பீர் குடிக்கையில் கண்ணாடி விளிம்புகளில் உப்பு பூசச் சொல்லி,
முன்யோசனையுடன் நீ அறிவுறுத்தும்போதும் உற்சாகமாயிருந்தாய்.
என்னவொரு காலம் – காலண்டரில் பார்க்க வேண்டும்,
நீ நைட்டி மாதிரி, அணிந்திருக்கையில் உள்ளும் புறமும் ஆண்டவன்.
நீ மென்மையானவன், பீங்கான் கிண்ணம் போல் உடைகிறாய்- 
கடவுளின் ஒளி அதன் வழி வருகிறது, எல்லாம் தெளிந்து வருகிறது.
உன் கண்முன்னரே அவன் உன் காயக்கூட்டினுள் எட்டிப் பார்க்கிறான்,
கூனியிருக்கிறாய்- ஆச்சரியமில்லை- தோள்களில் அமர்ந்திருப்பது யார்!
உன் சுமை ஏற்றுக் கொள்வேன், ஆனால் என் பெயர் எழுதப்படவில்லை,
மழையில் ஒலிக்கும் இசை கேட்டபடி, பூமரப் பாதையில் போவோம் வா-
இளஞ்சூட்டு அருவியென சாக்கடையில் நீர் விழுகையில் 
                         மலையிலிருந்து இறங்குவதுபோல்,
ஸ்லாவ்யன்கா வாசிக்கின்றனர்கீழே வீழ்கிறது,
                                               என் “சுவர்க்கம்”
– Elena Shvarts
 
வாழ்வில் நாம் பல பிணைப்புகளை உருவாக்கிக் கொள்கிறோம் : பெற்றோர், மனைவி, மக்கள், நண்பர்கள், வாகனங்கள், புத்தகங்கள், இசை, திரைப்படம் என்றும் இன்னும் பலவும். ஆனால் பிணைப்புகள் அனைத்தினும் மிகவும் வலிமையான பிணைப்பு மண் மீதானது. 

(more…)

மருத்துவ பாலபாடம் – சட்டியும் அகப்பையும்

விஜய்

கோவைக்கு தென்மேற்கே கேரள எல்லைக்கு அருகில் ஒரு மிஷன் ஆஸ்பத்திரியில் நான் ஜூனியர் சர்ஜனாக பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது. கெஷுவால்ட்டி என்று சொல்லப்படும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு வரும் நோயாளிகளை கவனித்துக்கொள்ள வேண்டியது என் பொறுப்பு. பெயரளவில் கெஷுவால்ட்டி சர்ஜனாக இருந்தாலும் அப்பொழுது அங்கே இருந்த சூழ்நிலையில் என் பொறுப்புகள் இன்னும் அதிகமாக இருந்தன. எம்.பி.பி.எஸ் படிப்பு முடித்து அறுவை சிகிச்சை அனுபவம் பெற எங்கள் பிரிவில் வேலை செய்துகொண்டிருந்த இரண்டு இளம் மருத்துவர்களை கண்காணிப்பதும் அவர்களுக்கு அறுவை சிகிச்சையின் நுணுக்கங்களை சொல்லிக் கொடுப்பதும் என் முழுநேரப் பொறுப்பாக இருந்தது. அனெஸ்தடிஸ்ட் இல்லாத பல சமயங்களில் நானே மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சையும் செய்திருக்கிறேன். என்னால் தனியாக சிகிச்சையளிக்க முடியாத  தருணங்களில் மருத்துவமனையின் சீனியர் சர்ஜனை அழைப்பேன். அவர் பாலக்காட்டில் உள்ள தலைமை மருத்துவமனையிலிருந்து வந்து அறுவை சிகிச்சை செய்து முடிப்பார். காயத்திற்கு தையல் போடுவது, ஒட்டுக்குடல், ஹெர்னியா, சிசேரியன் போன்ற சிக்கலில்லாத மைனர் அறுவை சிகிச்சைகள்தான் பெரும்பாலும் எங்கள் மருத்துவமனைக்கு வரும், அவற்றை என் இரண்டு உதவியாளர்களும் நானும் செய்து முடித்துவிடுவோம்.

பொள்ளாச்சிக்கும் பாலக்காட்டுக்கும் நடுவில் ஒரு கிராமத்தில் எங்கள் நிறுவனத்தின் சிறு கிளை மருத்துவமனை ஒன்று இருந்தது. அங்கே முழு நேர மருத்துவராக பொள்ளாச்சிக்காரர் மருத்துவர் முத்துராசா இருந்தார். அங்கிருந்த அடிப்படை வசதிகளுக்குமேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை எங்கள் மருத்துவமனைக்கோ அல்லது பாலக்காட்டு தலைமை மருத்துவமனைக்கோ ஆம்புலன்ஸில் அனுப்பி வைப்பார்.

ஒரு அதிகாலைப் பொழுது வயிற்று வலி என்று வந்திருந்த ஒருவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சிறுநீர் குழாயில் கல் இருப்பது போல் இருந்தது. அதை உறுதிப்படுத்த ஸ்கேன் செய்ய வேண்டும். மேலே தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சின்ன போர்டபிள் ஸ்கேன் மெஷினை எடுத்து வர ஆள் அனுப்பிவிட்டு காத்திருந்தேன். (more…)

ஆப்பிள்

எஸ். சுரேஷ்

திறந்திருந்த ஜன்னல் வழியாய் ஹாலுக்கு
வந்த குரங்கு டைனிங் டேபிள் மேல் இருந்த
ஆப்பிளை தின்ன ஆரம்பித்தபோது
வீட்டம்மாள் பார்த்துவிட்டு கையில் கட்டையுடன்
குரங்கைப் பார்த்து ‘போ போ போ’ என்று கத்த ஆரம்பித்தாள்

அமைதியாக ஆப்பிளைக் கடித்த குரங்கு
“தூ” என்று துப்பிவிட்டு
“ஏன் வாஷிங்டன் ஆப்பிள் வாங்கவில்லை,
வசதி கம்மியோ” என்று கேட்டு, ஆப்பிளை எடுத்துக்கொண்டு
ஜன்னல் வழியாக வெளியே சென்றுவிட்டது

பக்கத்து அறையில் இருக்கும் கணவரைப் பார்த்து
இப்பொழுது கத்திக்கொண்டிருகிறார் வீட்டம்மா

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அமெரிக்கா கொண்டு போனாலும் அப்படித்தானாம்!

இவ்வாண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பாட்ரிக் மோடியானோ குறித்து நியூ யார்க்கர் இதழில் வோஹினி வரா எழுதியுள்ள கட்டுரை நாம் நினைப்பதற்கு மாறான சில விஷயங்களைப் பேசுகிறது-

அமெரிக்கர் அல்லாத எழுத்தாளருக்கு நோபல் பரிசு கொடுக்கப்படும்போது பெரும்பாலும், அமெரிக்காவில் உள்ள வாசகர்கள், அதிலும் குறிப்பாக பரவலான வாசிப்பும் உலகளாவிய பார்வையும் கொண்டவர்களும்கூட, யார் இது என்று விழிப்பது ஏன்?

இதற்கு பலவிதமான பதில்கள் உண்டு. ஆனால் அதிக அளவில் சொல்லப்படுவது, அமெரிக்காவில் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் மொழியாக்க நூல்கள் பதிப்பிக்கப்படுகின்றன என்ற பதில். சென்ற ஆண்டு கதை, கவிதை, நாடகம் என்ற வகைமைகளில் ஏறத்தாழ அறுபதாயிரம் புத்தகங்கள் வந்தன. அவற்றில் ஐநூற்று இருபத்து நான்கு நூல்கள் மட்டுமே மொழிபெயர்ப்பு இலக்கியம் என்று ரோசஸ்டர் பல்கலைகழகத்தால் நிர்வகிக்கப்படும் த்ரீ பர்சண்ட் இணையதளம் சொல்கிறது. 2008ஆம் ஆண்டு முதல் மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றிய தகவல்களை இத்தளம் மிக கவனமாகச் சேகரித்து வருகிறது. தேசவாரியாகவும், காலவரிசைப்படியும் இந்த விவரங்களை அட்டவணைப்படுத்தவும் செய்கிறது (பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் முதலிய ஐரோப்பிய தேசங்களின் நூல்கள் அதிக அளவில் மொழிபெயர்க்கப்படுகின்றன).

இந்தப் புத்தகங்களை வெளியிடுபவர்கள் யார் என்பதுதான் மிகவும் சுவாரசியமான விஷயம். சென்ற ஆண்டு டால்கி ஆர்சைவ் என்ற சிறு பதிப்பகமே மிக அதிக அளவில் மொழிபெயர்ப்பு புத்தகங்களைப் பதிப்பித்தது. பொதுவாகவே, யூரோப்பா எடிஷன்ஸ், சீகல் புக்ஸ், ஆர்சிபெலாகோ, ஓப்பன் லெட்டர் போன்ற சிறுபதிப்பகங்களே மொழியாக்க நூல்களை அதிக அளவில் வெளியிடுகின்றன (அமேசானின் அமேசான்கிராசிங் என்ற பதிப்பச்சு இரண்டாமிடம் வந்தது ஒரு விதிவிலக்கு). ஃபரார், ஸ்ட்ராஸ் அண்ட் ஜிரோ மற்றும் நோஃப் போன்ற பெரிய பதிப்பகங்கள் பட்டியலில் பின்தங்கியிருக்கின்றன. (more…)

வரலாற்றின் அவலச் சுவை

நியூ யார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் என்ற இதழில் சில ஆண்டுகளுக்கு முன்னர் திமோதி ஸ்னைடர் ஒரு கட்டுரை எழுதினார் – வரலாற்று காழ்ப்புகளையும் வரலாற்று நிகழ்வுகளின் சிக்கல்களையும் புரிந்துகொண்டு சரி தவறுகளைத் தீர்மானிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதைப் பேசும் கட்டுரை அது. http://www.nybooks.com/articles/archives/2010/jun/24/jews-poles-nazis-terrible-history/?pagination=false (more…)