கவிதை

எப்போதும் – பாப்லோ நெருடா

எனக்கு முன் நடந்தவற்றைப் பற்றி
எனக்குக் கவலையில்லை

உன் தோள்களில்
ஒருவனைத் தூக்கி வா,
உன் தலைமுடியில் நூறு பேரைக் கொண்டு வா,
உன் முலைகளுக்கும் பாதங்களுக்கும் இடையே ஆயிரம் ஆண்களைக் கொண்டு வா
மூழ்கியவர்களைக் கொண்டு சென்று
கொந்தளிக்கும் கடலில் சேரக் கலக்கும்
நதியைப் போல வா,
காலமெல்லாம் நுரைத்திருக்க, காலத்தோடிருக்க!.

அத்தனை பேரையும் கொண்டு வா
நான் உனக்காக காத்துக் கொண்டிருக்கும் இடத்துக்கு;
நாம் எப்போதும் தனியாக இருப்போம்,
நாம் எப்போதும் நானும் நீயுமாக இருப்போம்
புவியில் தனியாய்
நம் வாழ்வைத் துவக்கலாம் வா!

(பாப்லோ நெருடாவின் Always என்ற கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு இது.)

உய்வித்தல்

-அதிகாரநந்தி-

உலகம் உய்யவேண்டி
யார் யாரோ
என்னென்னவோ
செய்கிறார்கள்

பாவம்! அது தான்
உய்தபாடில்லை.

ஒருவேளை அது உய்துவிட்டாலும்
பாவம் இவர்கள்
பிறகு என்ன தான் செய்வார்கள்

இனியெதை விற்பது?

விஜயலக்ஷ்மி

இக்கவிதையின் மலையாள மூலத்தை இங்கு வாசிக்கலாம்.

 

இனியெந்து வில்குவான்

புழயெ, காற்றினெ, வெயிலினெ வில்கான்
மழயெ மண்ணின்றெ தரிகலெ வில்கான்

பதினாலாம் ராவின்றெயழகினெ வில்கான்
புலரிதன் சப்த ஸ்வரங்களெ வில்கான்

அவர் விளிக்கயாய் ..வரிக லோகத்தின்
பெருமடீசீலதலவரே ..நீல –
மலகள் நிங்ஙள்க்கு குழிசெடுக்குவான்
ஹரித வ்ருக்ஷங்கள் பிழுதெடுக்குவான்

மகரவும் மண்ணும் குளிரும் நிங்கள்க்கு
மறன்னு போகாதெ பொதிந்தெடுக்குவான்
அலக்கிதேச்ச வெண்சிரியுமாய் நாடு
முறிச்சு வில்க்குவான் கொதிச்சு நில்ப்பவர்

விளிச்சு கூவுன்னு.. நுறுக்கு கேரளம்
முறிச்செடுக்குகீ கஷாப்பு கத்தியால்
இனி வில்கானுங் திரிச்சறியலின்
துறுப்பு சீட்டொன்னு கழுத்திலிட்டவர்
இறச்சிக்கும் வேங்தொட்டவர் ..ஷதகோடி
அவரே தாங்குவான் வருவதாரினி?

இனியெதை விற்பது

ஆற்றை, காற்றை, வெயிலை விற்க
மழையை மண்ணில் விளைபவகளை விற்க

பதினான்காம் காலையின் அழகினை விற்க
விடியலின் ஏழு சுரங்களை விற்க

அவர்கள் அழைக்கிறார்கள்… வருக உலகத்தின்
பெரும் பணப்பை கொண்டவர்களே… நீல –
மலைகளை நீங்கள் இல்லாமலாக்க
பசுமையான காட்டுமரங்களை பிடுங்கிப் போட

மீனும், மண்ணும், குளிரும் உங்களுக்கு
மறந்து போகாமல் பொதிந்து எடுத்துக் கொள்ள
வெளுத்துத் தேய்த்த வெண்சிரிப்போடு
நிலத்தை வெட்டி விற்க விரும்புவர் நிற்கிறார்

கூவி அழைக்கிறார்கள்…..சின்ன கேரளத்தை
வெட்டியெடுக்கிறார் கசாப்பு கத்தியால்
இனியும் விற்பதற்கு இருக்கிறது, அடையாளத்திற்காய்
துருப்பு சீட்டினைக் கழுத்திலிட்டவர்
இறைச்சிக்கும் ஆகாதாவர்…. நூறுகோடி
அவரை வாங்க யார் வருவார் இனி?

வரலாறு

சோழகக்கொண்டல் 

காலவெளியில்
நுனிப்புல் மேய்ந்தபடி நகரும்
ஒரு கருப்பு நிற பசு (more…)

கிலுகிலுப்பை

– ஸ்ரீதர் நாராயணன் –

rattle

 

‘நான் சோகமாக இருக்கிறேன்’
என்று
தளிர்கரத்தால் மோவாயைத் தாங்கிக்கொண்டு
திரும்பி உட்கார்ந்து கொள்கிறாள்.

புதியதொரு வண்ணத்தில் பூத்த
பூவைப் பார்த்தது போல
காண்பவரிடம் எல்லாம்
அந்த சோக முகத்தைப் பற்றி
சொல்லி சொல்லி
சிரிக்கிறோம்.

நச்சரிப்பு, குறும்பு,
கருணை, புத்திசாலித்தனம்,
திமிர், தெய்வீகம்,
அழிச்சாட்டியம்,
என்று அவளுடைய
கிலுகிலுப்பையிலிருந்துதான்
எத்தனை குதூகலங்கள்.