சேற்றில் விளையாடிக்கொண்டிருக்கும்
பன்றிகளை பார்த்து
நான் உரக்க சிரித்தேன்
ஒரு கணம் ஆட்டத்தை நிறுத்தி
என்னை பார்த்து
“போடா பன்னி “
என்று சொல்லிவிட்டு
தங்கள் ஆட்டத்தை
தொடர்ந்தன
– எஸ். சுரேஷ்