– எஸ். சுரேஷ் –
“எங்க போற?”
“வெளியில போறப்போ கேக்காதேன்னு
எவ்வளவு தரம் சொல்றது”
“நீ கிளம்பறப்ப தானே கேக்க முடியும்?”
“வாயை மூடிண்டு இருடா சனியனே”
மௌனம்
“எங்க போற?”
“வெளியில போறப்போ கேக்காதேன்னு
எவ்வளவு தரம் சொல்றது”
“நீ கிளம்பறப்ப தானே கேக்க முடியும்?”
“வாயை மூடிண்டு இருடா சனியனே”
மீண்டும் மௌனம்
“எங்க போற?”
“வெளியில போறப்போ கேக்காதேன்னு
எவ்வளவு தரம் சொல்றது”
“நீ கிளம்பறப்ப தானே கேக்க முடியும்?”
“வாயை மூடிண்டு இருடா சனியனே”
“மியாவ். மியாவ்.
மி யாஆஆஆஆ வ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்”
பேசிக்கொண்டே இருந்த கூண்டுக்கிளியை பார்த்து
பூனை கத்தியது
“கீச் கீச் கீச் கீச்” என்றுவிட்டு மௌனமானது கிளி
சற்றுநேரம் கழித்து சோம்பல் முறித்துவிட்டு
வாசலைத் தாண்டியது பூனை
“எங்க போற?”