‘சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவ சிறிது காமமோ பெரிதே”
தூக்கம் வராமல்
புலம்பிக் கொண்டிருந்தாள்
சங்க நாயகி
“அம்மா தாயே, கொஞ்சம் வாயை மூடறையா,
உன் குரல் கேட்டு ஒரு எலிகூட வெளியில வரல”
கூரை மேல் அமர்ந்திருந்த ஆந்தை
அவளைக் கடிந்து கொண்டது
“உன் காம நோயோ பெரிது ஆனால்
என் வயிற்றுப் பசி அதைவிடப் பெரிது”