நான் ஏறிக் கெண்டேன்
ஏன் என்றெல்லாம் கேட்காதீர்
ஏறிக் கொண்டேன் அவ்வளவு தான்
இப்படி ஓடுமென்று யார் கண்டார்கள்
விழுந்துவிடலாம்
ஆசை விடவில்லை
வேகமுமில்லை
திசையுமில்லை
ஒன்றுமில்லை என்கையில்
ஒருபிடி பிடறி மயிரைத்தவிர
பிடித்திழுக்கலாம்
கட்டி முத்தமிடலாம்
இது எனது சவாரி
எனது விருப்பப்படி