ஒரு சிறு அறிவிப்பு

https://twitter.com/mjseidlinger/status/627527310648815618

அண்மையில் வாசித்த டிவிட் இது- ஏறத்தாழ பதாகையும் இப்படி ஒரு கோரிக்கை விடுக்கும் நிலையில்தான் உள்ளது.

இலக்கியச் செயல்பாடு என்பது பண்பாட்டுப் பங்களிப்பு- இதில் ஓரிருவரோ ஒரு சிறு குழுவோ தொடர்ந்து செயல்படுவது என்பது மிகக் கடினம். ஓரளவாவது கணிசமான எண்ணிக்கையில் எழுத்தாளர்கள் பங்கேற்பது அவசியப்படுகிறது. அதுவரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

எனவே இதுவரை பிரதிவாரம் திங்கட்கிழமை வலையேறிய பதாகை, இனி வாசிப்புக்கும் விமரிசனத்துக்கும் முன்வைக்கப்படும் தகுதி கொண்ட இரு கவிதைகள், இரு புனைவுகள், இரு கட்டுரைகள் எப்போது தொகுக்கப்படுகிறதோ அப்போது இடுகையிடப்படும்.

இந்நிலை தற்காலிகமானது என்று நினைக்க விரும்புகிறோம், விரைவில் பிரதி வாரம் திங்கட்கிழமை பதிப்பைத் தொடர முடியும் என்று நம்புகிறோம்.

அதுவரை வாசகர்கள் பொறுமை காக்கவும், எழுத்தாளர்கள் editor@padhaakai.com என்ற முகவரிக்கு எழுதி அனுப்பவும்.

பதாகை சிறுகதைப் போட்டி – 2015 இறுதி நாள் நெருங்குகிறது தங்கள் படைப்புகளை இந்த முகவரிக்கு அனுப்பத் தவறாதீர்கள்.. இரண்டாயிரம் சொற்களுக்கு உட்பட்ட சிறுகதைகளை அனுப்பலாம். ஒருவர் அதிகபட்சம் இரு சிறுகதைகளை அனுப்பலாம், இந்தப் போட்டி உலகளாவிய ஒன்று, எங்கு வாழ்பவராயினும் பங்கேற்கலாம். சிறுகதைகள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

விரைவில் சு. வேணுகோபால் படைப்புலகம் குறித்த சிறப்பிதழும் வரவிருக்கிறது- பேட்டி உட்பட சில சிறப்பான கட்டுரைகளைக் கொண்ட பதாகை காலாண்டிதழ், போதுமான உள்ளடக்கம் சேர்ந்ததும் வெளிவரும், இம்மாத இறுதிக்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சு. வேணுகோபால் படைப்புகளை வாசித்திருந்தால் நீங்களும் எழுதலாம்.

தொடர்புக்கு-

← Back

Thank you for your response. ✨

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.