நினைவுகளை மறத்தல் (அல்லது) தலைமறைவாதல் – குறித்து ஜிஃப்ரி ஹாசன்:
ஏதோ ஒருவகையில் நம் கடந்த காலத்தின் நிழல் நம்மீது படிந்தபடிதான் இருக்கிறது. துயர் நிறைந்ததாகவோ அல்லது மகிழ்வூட்டுவதாகவோ நம்மை அதன் நிழல் பின்தொடர்வதை உணர்ந்த தருணங்களில் அதை வெளிப்படுத்த நான் எடுத்துக்கொண்ட பிரயாசை ஒரு கவிதையின் சாயலைப் பெற்றுவிட்டது. ஈழத்தின் போர்ச்சூழலில் அழியுண்ட ஒரு கிராமத்தின் தெருக்களின் வழியே இலக்கிய உலகை நான் அடைந்தேன்.
அந்த நாட்கள் எம்மீது ஏற்படுத்திய வடுக்கள் இன்று உடலின் தடயங்களாகவும், மனதின் பாரங்களாகவும், ஞாபகங்களாகவும் எஞ்சியுள்ளன. ரணங்களாலான அந்த வாழ்வை ஞாபகிப்பதிலிருந்தும் தூரமாகிவிடவே இன்று எல்லோரும் முயற்சிக்கின்றனர்.
கவிஞன் ஒருபோதும் நினைவுகளை இழக்க விரும்புவதில்லை. தன் உடலெங்கும் மந்திர வார்த்தைகளால் அவற்றைப் பூசிக்கொள்கிறான். அவை மற்றவர் பார்வையில் புதுப்புது அர்த்தங்களைப் பெற்றுவிடுகின்றன.
போரின் நாட்களில் எல்லாவற்றுக்கும் அஞ்சி மனிதர்கள் குழந்தைகளைப் போல் தவழ்ந்தலைந்ததை இதன் சில வரிகள் சொல்கின்றன.
ஜிஃப்ரி ஹாசன் கவிதை இங்கு : நினைவுகளை மறத்தல் (அல்லது) தலைமறைவாதல்