பயனற்ற இல்லற வாழ்வு என்ற புள்ளியிலிருந்து இந்தக் கவிதையைப் பார்ப்பது வசதியாய் இருக்கலாம். தனது இல்லற வாழ்வின் நசிவை அவன் உணர்வதில்லை, எல்லாம் நல்லபடிதான் இருக்கும் என்று கவனிக்காமல் இருந்து விடுகிறான். ஆனால் ஒரு நாள் அவன் தன் மணமுறிவு துவங்கும் சாத்தியத்தைக் கண்டு கொள்கிறான். இது நாள் வரை, தான் அலட்சியப்படுத்திய விஷயங்கள் இப்போது அவன் மனக்கண் முன் அவனது சிறுமைகளைச் சித்தரிக்கின்றன. காலமோ கடந்து விட்டது, ஆண்களுக்கே உரிய கண்டுகொள்ளாமையினால் அவன் எண்ணற்ற ஆண்டுகளாகச் செய்ததை இப்போது அவனால் திருத்த முடியாது. தன் மனைவியின் இதயத்தை மீண்டும் அடைவது எப்படி என்பதற்கான வழி அவனுக்குத் தெரிவில்லை (வீடு திரும்ப முடியாதது போலவே).
இனி கவிதையை இன்னும் கொஞ்சம் நெருங்கி வாசிக்கலாம்.
“வெளியே ராப்பகலாக மழை கொட்டிக்கொண்டு இருக்கிறது. நான் நிச்சயம் என் வீடு திரும்பப் போவதில்லை (வீட்டுக்கு வெளியே இங்கே சிக்கிக்கொண்டு இருக்கிறேன்), விபரீதமாய் எதுவோ நடக்கப் போவது நன்றாகத் தெரிகிறது. (என்னோடு இப்போது இருப்பது) (என்னை அச்சுறுத்துவது) சில்லிட்டு வரும் தரைதான்”
இதைத் தலைப்புடன் தொடர்புபடுத்தி வாசிக்கும்போது இது தாம்பத்ய கவிதையாகும் சாத்தியம் கொள்கிறது.
இரவு பகலாய் மழை, வீடு போய்ச் சேரப் போவதில்லை என்பதை இவர் தன் வீடு திரும்பப் போவதில்லை என்று பொருள் கொள்ளாமல், இந்த இருவரும் அவர்கள் கனவுகண்ட வீட்டைச் சென்றடையப் போவதில்லை. மழை கண்ணீராக இருக்கலாம், அல்லது இவர்களை ஆழ்த்தும், முறிவிறக்கு இட்டும் செல்லும் அன்றாடச் சூழல். நிச்சயம் என்னவோ நடக்கப் போகிறது என்பதை, எப்போதும் இப்படியே நாம் இருந்துவிட முடியாது, ஏதோ ஒரு இடத்தில் முறியத்தான் போகிறது, என்று புரிந்து கொள்ளலாம். இப்போதொ வீட்டுக்கு வெளியே மழை, அதன் ஈரத்தால் தரை சில்லிட்டு வருகிறது. இதயம் என்றால் வெம்மை இருக்க வேண்டும், இங்கே அது மெல்ல மெல்ல அடங்குகிறது.
கவிதை இங்கே
perhaps the reader has his own domestic problems which colour his vision.A recent sufferer from rains in Chennai, may be afraid of flooding! why be pessimistic about one’s life so far. The fear may be just unfounded and kindled by darkness and other discomforts in a rainy situation.Just blaming relationships is too far fetched.The reader himself may be responsible for the situation. why blame the wife? Optimism is needed, not despair and unwanted fears, perhaps unwarranted too. bala
தலைப்புதான் ஸார் அப்ப்டி நினைக்க வைத்தது, ஆனால் நீங்கள் சொல்வதும் உண்மைதான்- இது வாசிப்பின் பிழையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
தங்கள் கருத்துக்கு நன்றிகள்