யாரிடம் என்றில்லாமல்
சதா
கதையாடி மகிழும்
நதிக்கரையோர நாணல்கள்
இரவுகளை பகைத்தஞ்சி
விடியல்களை ஏங்கி
காத்திருந்த
நீர்மையின் நடுக்கத்தில்
அன்றைய எனதின்பங்கள்
தெருக்களில் இல்லை
தேரடி வீதியில் இல்லை
கண்களால் பேசிக்களித்த
படித்துறையிலும் இல்லை
நதிக்கரையில் தேடியலைகிறேன்
நட்பிலமர்ந்த அந்நாட்களின் சுவடுகளை
நதியில் மிதந்துசெல்கின்றன
நீ சூடிய
பொன்னிற மலர்கள்
One comment