‘அனைத்தும் உடலில் ஆரம்பித்து உடலில் முடிந்து விடுகிறது’ – சரவணன் அபி

யாரும் சீண்டாத, முதுமை குடியேறி, காலத்தால் நரை கண்டு விட்ட ஒரு ரயில் நிலையம்- துணை யார், நாள் பொழுது எப்படிக் கழியும், அதன் இருப்பில் வரும் போகும் வரும் போகும் வெயிலும், பனியும், கோடையும், கொடும் மழையும்- ஆயினும், எவ்வித சலனமுமில்லாமல் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் அதன் வெளியுரு

நடைமேடையும், நிறம் மங்கிய சருகுக் கூட்டமும், வரியோடிய விலா எலும்புகள் தெரியும் கட்டிடமும் துலங்கி கவிதை நகர்ந்தது.

கிளர்ச்சி தரும் வருகை; அது தரும் குற்றவுணர்ச்சி என்ற படிமங்கள் தோன்றி அமைந்ததும், மற்ற வரிகள் அடுத்தடுத்து அமைந்து கொண்டன.

அனைத்தும் உடலில் ஆரம்பித்து உடலில் முடிந்து விடுகிறது, இறுதியில் இதுதான் பொருந்துகிறது

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.