புலம்பல் 16:1-7

ஆகி

சிலதடவை தாமதமாய் வந்திருக்கிறேன்
எத்தனையோ தடவை கிறிஸ்துமஸ் அன்று
தேவாலயத்திற்கு போகாமல் இருந்திருக்கிறேன்
இத்தனைத் தாமதமாய் எவரும் வந்து பார்த்ததில்லை
இங்கே கலவரம் ஏதும் என்றனர்
ஆராதனை முடிந்து பதினைந்து நிமிடம் கடந்து
லத்தியோடு இருசக்கர வாகனத்தில்
வந்த காவல் நிலையக்காரர்கள்
ஆராதனைக்கு வரவில்லையாம்
இம்மானுவேல் ஆலயம் எங்கே என்றனர்
வந்ததும் வராததுமாகச் சென்றனர்
கிறிஸ்துமசுக்கு நான்
ப்ளம் கேக் உண்ணாவிரதம்
எழுதப்பட்ட திருமறையில்
ஏசு ஏசினார்
பிரம்மன் பிரம்பெடுத்தார்
என்று எழுதப்பட்டிராவிடினும்
பொருட்படுத்த தேவையில்லாததை
பொருட்படுத்துவர்
அரசியலாடுவர்
நித்யகிருபையை
நித்யநேசத்தை
எதிரெதிர் கூட்டத்தினர்
கழுவிலேற்றுவர்
படையலிடுவர்
அசனம் வைப்பர்
புதுவருடத்திற்கு நான்
ப்ளம் கேக் தவிர்த்து
வேறேதும் உண்ணாவிரதம்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.