இலையையுதிர்க்கும் மரமென
வாழ்ந்த மனிதர்களை
உதிர்த்துக் கொண்டேயிருக்கிறது ஊர்
கைவிடப்பட்ட தேன்கூடென
காற்றால் உலைந்துகொண்டிருக்கும் ஊரை
நிறைதேரலை நினைந்து சுற்றும் தேனீயென
சுற்றியபடி திகைக்கிறது இளமையை கடக்கவியலா மனம்
இலையையுதிர்க்கும் மரமென
வாழ்ந்த மனிதர்களை
உதிர்த்துக் கொண்டேயிருக்கிறது ஊர்
கைவிடப்பட்ட தேன்கூடென
காற்றால் உலைந்துகொண்டிருக்கும் ஊரை
நிறைதேரலை நினைந்து சுற்றும் தேனீயென
சுற்றியபடி திகைக்கிறது இளமையை கடக்கவியலா மனம்