வாய்ப்பது – கா.சிவா கவிதை

இடமூலையில் வேம்பு
வடமூலையில் மா
நடுவில் பலா
இடையில் நெல்லி எலுமிச்சை
இடைவெளிகளில்​​
ரோஜாவும் செம்பருத்தியும் என்ற பெருவிழைவை
செயல்படுத்தியபோது
கழிவுநீர்த் தொட்டி
மாவினிடத்தைப் பெற்றது
ஆழ்துளைக் கிணறு பறித்தது
வேம்பினிடத்தை
நீர்சேகரத் தொட்டி அடைத்தது
பிறவற்றின் இடத்தை

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.