கசிதல்
இறுக்கித் தாழிட்ட கதவுகள்
கொக்கிகள் பிணைத்த சன்னல்கள்
இருந்தும்
வெளிச்சம் தயங்கும் இடுக்குகளில் பார்வை
ஒருக்கால்
தேங்கும் இருளும் தேம்பிக் கொண்டே போகுதோ?
பறத்தல்
உனக்கு நிலம், எனக்கு வான்
பிணைப்பு பசியோடும், தம் மக்களோடும்
பறப்பது ஒன்றும் விடுதலையல்ல
என் கூட்டுக்குள் வானம் உண்டு
கூண்டிலேயும் சிறைப்படும் வானம்
பாவம், நீ ஒரு மனிதன் மட்டுமே!