கையெழுத்து, கிறுக்கு வழி – பானுமதி கவிதைகள்

கையெழுத்து

அவன் தான்
குழந்தைக் கைகளால்
கிறுக்கத் தொடங்குகிறான்.
கீழ் தொட்டு
பாதி வளையம் என
மேலேறிச் சாய்ந்து
இறங்கும் அதில்
எல்லாக் கையெழுத்தும் அடங்கும்
மழலையே,மேதமையே,அசடே
அதைப் படிக்க பூமி மறு பாதி
வளைகிறாள்,உனக்கும்
புரியாது அவள் கணக்குகள்.

கிறுக்கு வழி

சேர்ந்து தான் சென்றோம்
குறுக்கிட்ட நன்னீர் கால்வாய்
குட்டி தாண்டிக் குதித்தாள்.
உயரக் காலால் குட்டனும்
சரிவில் இறங்கி நீரில் நனைந்து
மேட்டில் ஏறும்போது கிறுக்கி என்றார்கள்
நீரின் பல தூரத்துச் செய்தியணிந்த கால்கள்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.