நிகழ்தகவின் மானுடத்துவம்

காஸ்மிக் தூசி

இரவி அணைந்து
இரவு வரக்கண்டு
விடாய் கொண்டு
விழி அயர்ந்து
கடாவு எழ
அனுட்டானம்
எனப் பிரக்ஞை கொண்டு
கண் மலர எழுந்தனன்
யானே இன்று,

எழாவிடின்
உறட்டை
சவம் ஊனம்
ஊத்தைப்பிணம்
மவுத்தி விடக்கு கங்காளம்
கழுமலை நெட்டைகழியுடல்
கிலுமொலெனல்

நிவகம்
எவர்க்கும்
சூதகம்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.