கருவை ந.ஸ்டாலின்
அவ்வப்போது
அடிக்கடி
சும்மா சும்மா
எப்படியேனும் வைத்துக்கொள்ளுங்களேன்
சொல்லிக்கொள்ளாமல்
வந்துதொலைந்துவிடுகிறது
இப்பிசாசு
வழக்கமாய்
நீங்கள் வகுத்துவைத்த
எச்சூத்திரமுமின்றி
நான் நினைக்கும்
அதுவாகிறது
அது,
கோமகன் காது கழுதைக்காது
தொட்டு
பஷீரின் பால்யகாலசகி வரை
ஒன்றையும்
விட்டுவைக்காத நவீனக் கோணங்கி
எப்படியோ
தொற்றிக்கொண்டது
தோளில்
முழுவதும் கொறித்து முடிப்பதற்குள்
நின்று நிதானித்து
என்னவென்று கேட்டுவிடுங்கள்
ஒவ்வொருவருக்குமான
ஒன்றை,
அவ்வப்போது
அடிக்கடி
சும்மா சும்மா வருவது
இதோ
இப்போது
இக்கணத்தில் – அது
இறுதியாய் கூட
இருக்கலாம்.
beatiful poetry..keep it up karuvai N.Stalin